பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு என்பதால், போதுமான தாய்ப்பால் சுரப்பு அவசியம். புதிய தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சத்தான உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். டாக்டர் ப்ரீத்தி ஷண்முகம் பரிந்துரைக்கும் 6 முக்கிய இயற்கை உணவுகள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.
1. தாய்ப்பால் சுரக்க தண்ணீர்
குழந்தை பிறந்த பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் என்ன தேவை, உணவு முறை போன்றவற்றை அறிவதோடு போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப வாரங்களிலேயே உதிரபோக்கு காரணத்தால் பலரும் அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டுமெ என்று போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. தண்ணீர் குடிப்பதற்கும் தாய்ப்பாலுக்கும் தொடர்பு உண்டு. தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு தாய்ப்பால் சுரப்புக்கும் உதவும். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதையும் வழக்கத்தில் சேர்த்துகொள்வது நல்லது.
2. ஓட்ஸ் உடன் பேரீச்சை
ஓட்ஸ் பலரும் விரும்பும் உணவாக மாறிவருகிறது. புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்புக்கு ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் உடன் பேரீச்சை கலந்து சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யலாம். ஓட்ஸ் உடன் பேரீச்சை சேர்த்து சாப்பிடும் போது உடலில் புரோலாக்டின் அளவு அதிகரிக்கும். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் என்கிறார். புரோலாக்டின் ஹார்மோன் ஆனது பாலூட்டுதலுக்கு முக்கியமான ஹார்மோன். இது மார்பக திசு வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
3. முருங்கைக்கீரை
கீரை வகைகள் எல்லாமே புதிய தாய்மார்களுக்கு ஏற்றது. குழந்தை பிறந்த பெண்கள் தினமும் பலவித கீரைகளை சேர்த்து வரவேண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு முருங்கைக்கீரையை பரிந்துரைக்கிறார் டாக்டர். இதில் கால்சியம் அளவு அதிகம், தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் என்கிறார் மருத்துவர். முருங்கைக்கீரையை பொரியலாக சாப்பிடலாம். சூப் வைத்து சேர்ப்பதன் மூலம் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
4. இளநீர் மற்றும் மோர்
புதிய தாய்மார்களுக்கு இளநீர் மோர் குழந்தை பிறந்த பெண்கள் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து பல ஆரோக்கியமான உணவுகளை தவிர்க்கிறார்கள். ஆனால் மோர் மற்றும் இளநீர் போன்றவை பிரசவம் முடிந்த பெண்களுக்கு நல்லது. எப்பொதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் மோர் மற்றும் இளநீர் குடிக்கலாம் என்கிறார். இளநீர் மோர் நன்மை செய்யும் என்றாலும் இரவு நேரங்களில் சேர்க்க வேண்டாம்.
5. வெந்தயம்
வெந்தயம் உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க செய்யலாம். இது வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து கொண்டது. வெந்தயத்தை தேநீர் வடிவில் குடிக்க பரிந்துரைக்கிறார் மருத்துவர். நீங்கள் வெந்தயத்தை பொடித்து காய்கறி சாலட் மீது தூவி சாப்பிடலாம்.
6. பூண்டு
பூண்டு 10-15 பல் எடுத்து பொடியாக நறுக்கி தேனுடன் கலந்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
முக்கிய குறிப்புகள்: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
- ஓட்ஸ் உடன் பேரீச்சை சேர்த்து சாப்பிடுவது
- முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது
- இளநீர் மற்றும் மோர் அருந்துவது
- வெந்தயத்தை தேநீர் அல்லது சாலட்டில் சேர்ப்பது
- பூண்டை தேனுடன் கலந்து உட்கொள்வது