Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆடி அமாவாசை தர்ப்பணம்: பித்ரு தோஷ நிவர்த்திக்கு முழுமையான வழிகாட்டி

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அந்த தோஷத்தின் பாதிப்புகள் குறையும். பித்ரு தோஷத்தால் ஏற்படும் தடைகள், குடும்பச் சண்டைகள், ஆரோக்கியப் பிரச்சனைகள் போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். தர்ப்பணம் செய்வதன் மூலம் மறைந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைந்து மோட்சம் பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஆடி அமாவாசை சிறப்புகளையும், பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் செய்யும் முறைகளையும், தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.


அமாவாசை தர்ப்பணம்: முக்கியத்துவம் மற்றும் விதிமுறைகள்

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். இந்த நாளில் தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் கூட முன்னோர்களை கோபப்படுத்தி, நமக்கு தீராத துன்பத்தை ஏற்படுத்தி விடும். அமாவாசை விரதம் இருப்பதற்கு மட்டுமல்ல, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், இந்த விதிகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தர்ப்பணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  • 1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
  • 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக் கூடாது. பித்ருக்களை வழிபட்ட பிறகே தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
  • 3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் அமாவாசை அன்று அவர்களுக்குரிய உணவான எள்ளும், தண்ணீரும் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
  • 4. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.
  • 5. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற அந்த 15 நாட்களும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அதற்கு பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

அமாவாசை அன்று செய்யக் கூடாதவை

  • 6. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
  • 7. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்குரிய, மகாளபட்சம் மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
  • 8. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.
  • 9. துவாதசி நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
  • 10. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அது தான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

தர்ப்பணம் செய்ய உகந்த இடங்கள்

  • 11. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
  • 12. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
  • 13. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
  • 14. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 15. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

பித்ருக்கள் மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டியவை

  • 16. தற்கொலை செய்தவர்கள் மற்றும் அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழி வகை ஏற்படும்.
  • 17. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.
  • 18. அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவின் தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.
  • 19. அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
  • 20. அமாவாசை நாட்களில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தர்ப்பணம் அளிக்கும் முறை

  • 21. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 22. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்த படித்தான் கொடுக்க வேண்டும்.
  • 23. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்ப்பைப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேது பகவான் மூலம் பலன்களை பெற்றுத் தரும். குறிப்பாக பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
  • 24. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.
  • 25. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள்

  • 26. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
  • 27. ஆடி, தை, மகாளய அமாவாசை தினங்களில் புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.
  • 28. தர்ப்பணம் கொடுத்தவர்கள், வீட்டிற்கு வந்து பகல் வேளையில் காகத்திற்கு சாதம் வைத்த பிறகே அவர்கள் உணவு சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  • 29. அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்த பிறகு யாருக்காவது ஒருவர் கண்டிப்பாக அன்னதானம் வழங்க வேண்டும்.
  • 30. அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் போது குறைந்தபட்சம் 3 தலைமுறை முன்னோர்களின் பெயர்களையாவது சொல்லி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஜோதிட ரீதியாக முன்னோர்களின் சாபத்தால் அல்லது அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம் ஆகும். இது குடும்பத்தில் தடைகள், பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறும். இது பித்ரு தோஷத்தின் பாதிப்புகளைக் குறைத்து, குடும்பத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும்.

தர்ப்பணம் செய்யும் முன் மற்ற பூஜைகளில் சங்கல்பம் செய்யக்கூடாது. பித்ருக்களை வழிபட்ட பிறகே தெய்வ பூஜைகளைச் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் அவசியம் அளிக்க வேண்டும். மேலும், முன்னோர்களின் கோத்திரம் மற்றும் பெயரைச் சொல்வது சிறப்பானது.

கோவில்கள், குளங்கள், கடல் போன்ற புனித இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. திருவாலங்காடு, ராமேஸ்வரம், காசி, மற்றும் குறிப்பாக திலதர்ப்பணபுரி போன்ற தலங்கள் இதற்கு மிகவும் உகந்தவை என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Our Other Services