Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆயுத பூஜை: காரணம், வரலாறு மற்றும் கொண்டாட்டம்

தென்னிந்தியாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஆயுத பூஜை, அதன் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடும் முறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக வரும் இந்த புனித நாள், நம் வாழ்வில் கருவிகளின் பங்களிப்பை உணர்த்துகிறது. தமிழ் கலாச்சாரத்தில் இதற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

ஆயுத பூஜையின் நோக்கம்

ஆயுத பூஜையை எதற்காக கொண்டாடுகிறோம் என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, ஆயுத பூஜையை கொண்டாடுவது சிறப்பானதாக இருக்கும். இதனால் ஆயுத பூஜை செய்து வழிபடும் முழு பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் மகா நவமி அன்று கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜையின் வரலாறு

புராண கதைகளின் படி, ஆயுத பூஜையானது நவராத்திரியுடன் தொடர்புடைய திருநாளாகும். தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர். மேலும் ஆயுதபூஜை என்பது அரக்க ராஜாவை தேவி துர்கா, வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.

மகாபாரத புராணத்தின் படி, நாடு கடத்தப்பட்டதன் காரணமாக பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றான். வனவாசம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பாண்டவர்கள் திரும்பிய போது, தாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாளாக இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரிப்பட்டனர். ஆயுதங்களை மீட்டெடுத்த பிறகு, அவர்கள் வழிபாடு நடத்தி, குருக்ஷேத்திர போருக்கு சென்று வெற்றியை தமதாக்கினர். பின்னர், அவர்கள் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தையும் வணங்கி சென்றனர். எனவே இந்தியாவின் சில பகுதிகளில், தசமி நாளில் வன்னி மரங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது.

ஆயுத பூஜையின் முக்கியத்துவம்

ஆயுத பூஜை, பண்டைய காலங்களில் ஆயுதங்களை வணங்கும் நாளாக திகழ்ந்தது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், விஸ்வகர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது. ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருதி யந்திரத்தை வழிபடுவது உங்கள் தொழில்முறை உறவுகளை மேம்படுத்தவும், உங்கள் வணிகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், தொழிலை விரிவு படுத்தவும் உதவிடும். சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். ஜோதிட ரீதியாகவும் இந்த நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது சிறந்தது எனக் கருதப்படுகிறது.

ஆயுத பூஜை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

ஆயுத பூஜை செய்வதற்கான நடைமுறை ஒவ்வொரு மாநிலங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆயுத பூஜை தினத்தில் பூஜை செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

  • சுத்தம் செய்தல்: பூஜை அன்று மாலை நேரத்தில் வீட்டு கருவிகள், தொழில் கருவிகள் அல்லது வாகனங்களை கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவற்றிற்கு வண்ணம் கூட தீட்டலாம்.
  • திலகமிடுதல்: மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு கருவிகள், வாகனங்களுக்கு திலகமிட வேண்டும். ஆயுதங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அவற்றை சுத்தம் செய்து கழுவ வேண்டும். முன்பு போல் அவற்றிற்கும் திலகத்தை வைக்க மறவாதீர்கள்.
  • அலங்காரம்: பூக்களால் ஒரு சுவருக்கு எதிராக, ஒரே வரிசையில் அவற்றை வைக்கவும். ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் சாமந்தி பூ மிகவும் குறிப்பிடத்தக்க மலர். எனவே, அன்றைய தினம் அந்த மலர் கொண்டு பூஜை அறையை அலங்கரிப்பது சிறப்பு.
  • வழிபாடு: அடுத்த நாள் காலை, மகா நவமி நாளில், தேவி சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகள் அல்லது படங்களை வைத்து அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். சில இடங்களில், ஆயுத பூஜை மந்திரத்தை உச்சரித்த படியே தேவி அபராஜிதாவையும் வழிபடுவார்கள்.

ஆயுத பூஜை மந்திரம்: "ஜெயதே வரதே தேவி தஷ்மயம்பராஜிதே'. தரயாமி பூஜே தக்ஷா ஜெயலாபபவித்தியே." இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது.

ஆயுத பூஜை நமக்கு கற்பிப்பது என்ன?

ஆயுத பூஜை என்பது ஆயுதங்கள், கருவிகள், வருவாய் ஊடகங்கள் ஆகியவற்றை வணங்குவதற்கும், நம் வாழ்வில் அவற்றிற்கான பங்குகளைப் பற்றி சிந்திப்பதற்கும் ஆன நாளாக கருத வேண்டும். பண்டைய காலங்களில், எதிரிகளை வென்றெடுக்கும் மற்றும் போர்வீரரைப் பாதுகாக்கும் ஆயுதங்களைப் போற்றி வணங்கும் தினமாகும். ஆனால் இன்றைய நவீன உலகம் ஆயுத பூஜைக்காக வரையறையை மாற்றியுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

துர்கா தேவி மஹிஷாசுரனை வென்றதன் கொண்டாட்டமாகவும், நம் வாழ்க்கைக்கு ஆதாரமான கருவிகள் மற்றும் ஆயுதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இது பண்டைய காலங்களில் ஆயுதங்களை வணங்கும் நாளாகவும், நவீன காலத்தில் கருவிகளை போற்றும் நாளாகவும் உள்ளது.

ஆயுத பூஜை, மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில், மகா நவமி அன்று கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜையின் போது, தொழில் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். தேவி சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகள் அல்லது படங்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

Our Other Services