அக்னி நட்சத்திரம் என்பது கோடைக்காலத்தின் உச்சகட்டமாகும். இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். சிவபெருமானின் அருளைப் பெறவும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பூமியையும் மக்களையும் பாதுகாக்க, சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகங்கள், குறிப்பாக தாரா அபிஷேகம் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம். இந்த அபிஷேகங்கள், ஜோதிடம் கூறும் கோள்சார அமைப்புகளுக்கும், மனித வாழ்வின் நலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
தாரா அபிஷேகம்: சிவனை குளிர்விக்கும் அருள்
வட மாநிலங்களில் வழக்கமாக சிவ பெருமானுக்கு இந்த அபிஷேகம் செய்யப்பட்டாலும், தென் மாநிலங்களில் அக்னி நட்சத்திர நாட்களில் மிக விசேஷமாக செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவனுக்கு நடத்தப்படும் தாரா அபிஷேகம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அக்னி நட்சத்திரம் நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கத்தால் உஷ்ணம் அதிகரித்து காணப்படும். இந்த நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும் விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும். அக்னி நட்சத்திரம் நாளில் சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தை தொங்க விட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அது போல் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
அக்னி நட்சத்திர அபிஷேக வரலாறு
பொதுவாக அக்னி நட்சத்திரம் என்பது சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடக்கும் வரையிலான நாட்களைக் குறிக்கும். அதாவது சூரியபகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும். இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் ஆலகால விஷத்தை எடுத்து குடித்தார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
சிவனை குளிர்க்கும் அபிஷேகம்: நம்பிக்கை மற்றும் பலன்கள்
அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். எனவே அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும். ஆண்டு தோறும் அக்னி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவ பெருமான் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள். சைவத்தில் சிவபெருமானே நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது. பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும் போது சிவபெருமான் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட உண்மை.
தாரா அபிஷேகத்தின் சிறப்பு பலன்கள்
- குழந்தை பாக்கியம்: தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும்.
- நோய்கள் நீங்கும்: நோய்கள் நீங்கும்.
- தீய சக்திகள் விலகும்: சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.
அக்னி நட்சத்திர சிவ அபிஷேகங்களும் பலன்களும்
- தேன் அபிஷேகம்: தோல் நோய் குணமாகும்.
- கரும்புச் சாறு அபிஷேகம்: முக்தி பெறலாம்.
- அருகம்புல் தண்ணீர் அபிஷேகம்: நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
- நல்லெண்ணை அபிஷேகம்: நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
- பசும்பால் அபிஷேகம்: அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.
- தயிர் அபிஷேகம்: பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.
- பசு நெய் அபிஷேகம்: செல்வ செழிப்பு உண்டாகும்.
- சர்க்கரை அபிஷேகம்: துக்கத்தை போக்கும்.
- புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம்: லாபம் வரும்.
- இளநீர் அபிஷேகம்: சகல சம்பத்தும் கிட்டும்.
செல்வம் சேர சிவ அபிஷேகம்
- ருத்ராட்ச ஜலம் அபிஷேகம்: ஐஸ்வர்யம் கிட்டும்.
- அரைத்தெடுத்த சந்தனம் அபிஷேகம்: புத்திர பாக்கியம் கிட்டும்.
- வில்வ ஜலம் அபிஷேகம்: போகபாக்யங்கள் கிட்டும்.
- அன்னத்தினால் அபிஷேகம்: அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
- திராட்சை ரசம் கலந்த தண்ணீர் அபிஷேகம்: எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.
- பேரிச்சம்பழ ரசம் அபிஷேகம்: எதிரிகள் இல்லாமல் போவர்.
- நாவல்பழ ரசம் அபிஷேகம்: வைராக்கியம் கிட்டும்.
- மாம்பழ ரசம் அபிஷேகம்: தீராத வியாதிகள் தீரும்.
- மஞ்சள் நீர் அபிஷேகம்: மங்களம் உண்டாகும்.
- எலுமிச்சம்பழ தண்ணீர் அபிஷேகம்: ஆத்மஞானம் உண்டாகும்.
- பஞ்சாமிர்த அபிஷேகம்: மன தைரியம் பெறலாம்.
அக்னி நட்சத்திர நைவேத்தியங்கள் மற்றும் உதவி
அக்னி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம். அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு மட்டுமின்றி வறுமையில் வாடும் அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும். ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்னி வெயிலை சமாளிக்க குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் சிவபெருமானும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.