நெய் என்றாலே கொலஸ்டிரால் என்கிற தவறான கருத்து இருக்கிறது. ஆனால், நெய்யில் நமது உடலுக்கும், சருமத்திற்கும் நல்லது செய்கிற நல்ல கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அளவோடு எடுத்துக் கொண்டால் அமிர்தம் போன்றது. குறிப்பாக, இரவு தூங்கும் முன் முகத்தில் நெய் அப்ளை செய்வதால் ஏராளமான அற்புதமான மாற்றங்கள் நிகழும். முகம் பளபளப்பாகும் மட்டுமல்லாமல், பல சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாங்க, நெய்யின் அற்புதமான சருமப் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
நெய்யின் முக்கிய சருமப் பலன்கள்
1. வறண்ட சருமத்திற்கு மாய்ஸ்ச்சரைசர்
நெய்யில் உள்ள ஆற்றல் வாய்ந்த கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி, நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்ச்சரைசர். இரவில் நெய் பூசி தூங்கினால், மறுநாள் முழுவதும் சருமம் ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும் இருக்கும்.
2. இயற்கையான பளபளப்பு
தினமும் இரவு தூங்கும் முன் சில துளிகள் நெய்யை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால், சருமம் இயற்கையாகவே பளபளப்பாக மாறும். நெய்யில் உள்ள வைட்டமின் ஈ, ஏ, டி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளித்து பொலிவை அதிகரிக்கும்.
3. பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்
பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், கரும்புள்ளிகள் மறையாமல் இருந்தால், நெய்யைப் பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தழும்புகளையும் கரும்புள்ளிகளையும் நிரந்தரமாக மறையச் செய்யும்.
4. ஆன்டி-ஏஜிங் - இளமையான சருமம்
தினமும் இரவு நெய் மசாஜ் செய்வதால் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கங்கள், மிக நுண்ணியக் கோடுகள் மறையும். வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் சருமத்தின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடி, உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும்.
5. உதடு வெடிப்பு நீங்கி மென்மையாகும்
வறண்ட, வெடித்த உதடுகளை பட்டு போல மென்மையாக மாற்ற நெய் ஒரு சிறந்த தீர்வு. தினமும் இரவு சில துளிகள் நெய்யை உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால், உதடுகள் பிங்காக, சாஃப்ட்டாக மாறி நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.