இளம் பருவத்தில் நரைமுடி வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதை சரி செய்யவும், நிர்வகிக்கவும், மீண்டும் வராமல் தடுக்கவும் சரியான பராமரிப்பு முறை உதவும். நரைமுடி மறைந்து மீண்டும் வரக்கூடிய முடி கருமையாக வருவதற்கு இயற்கையான பொருள்கள் பலவும் உதவுகிறது. அவற்றில் முக்கியமான பலனளிக்கக்கூடிய இயற்கை ஹேர் டை குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
நரைமுடியை கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை: தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
- நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பவுடர் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - அரை டீஸ்பூன்
- மருதாணி - அரை டீஸ்பூன் (தேவையெனில்)
- வேம்பாள பட்டை - சிறு துண்டு
- காஃபி கொட்டை பொடி - 1 டீஸ்பூன்
- கொட்டைப்பாக்கு பொடித்தது - அரை டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கு
- இரும்பு வாணலி - 1
தயாரிக்கும் செய்முறை
- கருஞ்சீரகம், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, வெந்தயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- பிறகு ப்ளெண்டரில் அரைத்து பொடியாக வைக்கவும்.
- இரும்பு வாணலியில் தண்ணீர் விட்டு அவை கொதிக்கும் போது காஃபி பொடி, கொட்டைப்பாக்கு பொடி, மற்றும் அரைத்து வைத்த பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- இவை இலேசாக மாவு பதத்துக்கு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
- பிறகு இதை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 5 மணிநேரம் ஏனும் ஊற விடவும். இயற்கையான ஹேர் டை தயார்.
ஹேர் டை பயன்படுத்தும் முறை
- முடியை சுத்தமாக ஷாம்பு கொண்டு அலசி விடவும். எண்ணெய் பசையுடன் இருந்தால் டை சரியாக உச்சந்தலையில் பிடிக்காது.
- பிறகு கூந்தலை சிக்கில்லாமல் சீவி பகுதி பகுதியாக பிரிக்கவும்.
- ஹேர் டை பிரஷ் கொண்டு தலைமுடி முழுவதும் உச்சந்தலையிலிருந்து கீழ் வரை நன்றாக தடவி விடவும். கை விரல்களில் பட்டாலும் இவை எதுவும் ஆகாது.
- பிறகு 2 மணி நேரங்கள் வைத்திருந்து கூந்தலை வெற்று நீரால் நன்கு அலசி விடவும்.
- வாரம் ஒரு முறை இந்த ஹேர் டை போடுவதன் மூலம் நரைமுடியை கருமையாக மாற்றலாம். மேலும் நரைமுடி வருவதை தாமதப்படுத்தலாம்.
- பெண் குழந்தைகள், ஆண் பிள்ளைகள், வயது வந்தவர்கள் அனைவருக்கும் ஏற்ற ஹேர் டையாக இது இருக்கும்.
ஹேர் டை -யில் இருக்கும் பொடிகள் தரும் நன்மைகள்
கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் நரைமுடி தீவிரமாவதை தடுக்க செய்யும். இதை உள்ளுக்கும் எடுக்கலாம் அல்லது உணவிலும் சேர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெயை முடிக்கு தடவலாம்.
நெல்லிக்காய்
இது நரைமுடிக்கும் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. நரைமுடி வருவதை தாமதப்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொலாஜன் உற்பத்தியை தூண்டி மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது, மேலும் முடி கருமையை மேம்படுத்தும்.
மருதாணி
மருதாணி நரைமுடியில் ஒரு அற்புதமான விளைவை ஏற்படுத்தும். இது ஆரோக்கியமானதாக இயற்கையாக இருக்கும். இது கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க செய்கிறது. நரைமுடிகள் தெரியும் போது மருதாணி சிறந்த ஒன்றாக இருக்கும்.
வெந்தய விதைகள்
இது மெலனின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்ப்பதன் மூலம் நரைப்பதை தாமதப்படுத்துகிறது. இந்த விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது முடி நிறம் நீண்ட காலம் நீடிக்க உதவும். இது உச்சந்தலையை ஊட்டமளித்து முடியை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கிறது.
ஹேர் டை -யில் இருக்கும் இதர பொருள்களின் நன்மைகள்
காஃபி பொடி
இவை நேரடியாக நரைமுடியை கருமையாக்க உதவாது. ஆனால் முடி நரையை சரி செய்யும் பொருள்களுடன் இணைக்கும் போது இது பலனளிக்கும்.
வேம்பாளப்பட்டை
இது முடி வளர்ச்சிக்கு மட்டும் அல்ல, நரைமுடிக்கும் பயன்படுத்தலாம். இது சிவந்த நிறத்தை அளிக்க கூடியது. இதன் சாயமிடு பண்புகள் நரைமுடியை கட்டுப்படுத்த செய்யும்.
ஹேர் டை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
- அளவுகள் சரியாக இருக்கட்டும்: குறிப்பிட்ட அளவுகளில் பயன்படுத்தவும்.
- குளிர்ச்சி தன்மை: வெந்தயம் குளர்ச்சியானது என்பதால் அதிக குளிர்ந்த உடல் நிலை கொண்டவர்கள் இதை அளவாக பயன்படுத்த வேண்டும்.
- வயது வரம்பு: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதை பயன்படுத்த வேண்டாம்.
- பயனளிப்பு: பித்த நரை, இளநரைக்கு இது பயனளிக்கும்.
- நிரந்தர தீர்வு அல்ல: ஏற்கனவே வந்த வெள்ளை முடிக்கு இது முழுமையான தீர்வாக இருக்காது. தொடர்ந்து இதை பயன்படுத்துவதன் மூலம் நரைமுடி வருவதை தள்ளிபோடலாம்.
இறுதியாக
இயற்கையான ஹேர் டை தயாரிப்பில் கருஞ்சீரகம், மருதாணி, வெந்தயம், நெல்லிக்காய் அனைத்துமே நரைமுடியை எப்படி கருமையாக்குகிறது, நரைமுடி வருவதை எப்படி தாமதப்படுத்துகிறது என்பதையும் பார்த்தோம். சரியான முறையில் இதை பயன்படுத்தும் போது நரைமுடி தாமதமாவதை தடுக்க செய்யும்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.