Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

நிர்ஜலா ஏகாதசி மற்றும் பீம ஏகாதசி விரத பலன்கள்

விரதம் இருந்து பெருமாளை மனதார வேண்டி வழிபடும் நிர்ஜலா ஏகாதசி, இந்து சமயத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, தண்ணீர் கூட அருந்தாமல் அனுசரிக்கப்படும் இந்த விரதம், எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியது. நிர்ஜலா ஏகாதசி விரதத்தின் சிறப்புகள், அதன் பின்னணிக் கதை, மற்றும் அதனால் கிடைக்கும் அரிய பலன்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

நிர்ஜலா ஏகாதசி சிறப்புகள்

ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசிகள் என வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருவதுண்டு. சில வருடங்களில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றில் வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி எனப் போற்றப்படுகிறது. பாண்டவர்களில் ஒருவரான பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் "பீம விரதம்" என்றும் "பீம ஏகாதசி" என்றும் போற்றப்படுகிறது. தண்ணீர், உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பதே நிர்ஜலா ஏகாதசியின் முக்கியமான விரத விதியாகும்.

அதே சமயம், இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என பிரம்ம புராணம் சொல்கிறது. இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள்.

பாண்டவர்களின் ஏகாதசி விரதம் மற்றும் வியாசரின் வழிகாட்டுதல்

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி, "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ கேட்கவே வேண்டாம். அடை மழை போல நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும் படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்." என வேண்டினார்.

அதற்கு, "தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமாளை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர்.

பீமனுக்கு வழிகாட்டிய வியாசர்

அருகில் இருந்து கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும் கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது? ஒரு வேளை சாப்பிட்டு விட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவை போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்கு சொல்லுங்கள்." என வேண்டினான்.

பீம ஏகாதசி பெயர் வந்த காரணம்

அதற்கு வியாசர் , "கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர்.

வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி "பீம ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது. மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான். அது "பாண்டவ துவாதசி" என்று அழைக்கப்படுகிறது.

நிர்ஜலா ஏகாதசி விரத பலன்கள்

  • நிர்ஜலா ஏகாதசி விரதமிருப்போர் எமதர்ம ராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள்.
  • புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.
  • நிர்ஜலா ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

நூறு தலைமுறை பாவம் போக்கும் விரதம்

ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம். இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.

இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியே நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. இது பாண்டவர்களில் ஒருவரான பீமனால் அனுசரிக்கப்பட்ட விரதம் என்பதால், "பீம ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தின் முக்கிய விதி தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது.

நிர்ஜலா ஏகாதசி விரதமிருப்போர் எமதர்ம ராஜாவின் தண்டனையைத் தவிர்த்து, நேரடியாக வைகுண்டம் அடைவார்கள். புனித நதிகளில் நீராடிய பலன், பலவித தானங்கள் அளித்த பலன், மற்றும் நூறு தலைமுறைக்கான பாவங்கள் நீங்கும் பலன்கள் கிட்டும். தண்ணீர் தானம் செய்பவர்களுக்கு ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும்.

பாண்டவர்களில் மிகவும் பலசாலியான பீமன், பசியை தாங்க முடியாதவர் என்பதால், அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க இயலவில்லை. வியாசரின் ஆலோசனைப்படி, ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நிர்ஜலா ஏகாதசியை தண்ணீர் கூட அருந்தாமல் அனுசரித்தார். எனவே, அவரது பெயரால் இது "பீம ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது.

Our Other Services