Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பரிவர்த்தினி ஏகாதசி விரதம்: பலன்கள், செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை

ஆவணி மாத வளர்பிறையில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி விரதத்தின் சிறப்புகள், பலன்கள் மற்றும் பெருமாளின் முழுமையான அருளைப் பெற செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக அறியலாம்.

பரிவர்த்தினி ஏகாதசி விரத சிறப்புகள்

முக்கியமான ஏகாதசிகளில் ஒன்று, ஆவணி மாத வளர்பிறையில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி ஆகும். மகாளய பட்சத்திற்கு முன்பு வரும் ஏகாதசி என்பதால் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. அதே போல் புராணங்களின் படி, தெய்வீக நித்திரையில் இருக்கும் மகாவிஷ்ணு, இந்த நாளில் தான் தனது சயன நிலையை மாற்றிக் கொள்வதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, மகாவிஷ்ணு தனது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை எடுப்பதற்கு முன் வரும் ஏகாதசி என்பதாலும் இது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புண்ணிய நாளில் விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது வாழ்வில் சகல நன்மைகளையும் தரும்.

பரிவர்த்தினி ஏகாதசி 2025: பெருமாளின் அருள் தரும் விரதம்

பரிவர்த்தினி ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அவர்களின் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அமைதியும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் வாமனருக்கு தாமரை பூ படைத்து வழிபடுவது முப்பெரும் தேவர்களையும் வழிபட்ட பலனை தரும். இந்த நாளில் ஏகாதசி கதைகள், வாமனரின் புராண கதைகளை படிப்பதும், கேட்பதும் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனை தரும் என சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க பரிவர்த்தினி ஏகாதசி இந்த ஆண்டு செப்டம்பர் 03ம் தேதியான புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்வதும், செய்யாமல் தவிர்ப்பதும் பெருமாளின் அருளை முழுமையாக நமக்கு பெற்றுத் தரும்.

பரிவர்த்தினி ஏகாதசியில் செய்ய வேண்டியவை

  • விரத முறை: காலை விரதம் துவங்கியது முதல், மறு நாள் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யும் வரை பழங்கள், பால், தண்ணீர் மட்டுமே சாப்பிட வேண்டும். பக்தர்கள் தங்களின் உடல்நிலையை பொறுத்து நிர்ஜல விரதத்தையும் கடைபிடிக்கலாம்.
  • ஆன்மீக ஈடுபாடு: இந்த நாளில் மந்திரங்களை ஜபிப்பது, ஆன்மீக நூல்களை வாசிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்பது, படிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது மகாவிஷ்ணுவின் அருளைப் பெற உதவும்.
  • தான தர்மங்கள்: உணவு, ஆடை, பணம் ஆகியவற்றை ஏழைகளுக்கு அல்லது உதவி தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
  • தியானம் மற்றும் வழிபாடு: பெருமாளின் அருளை பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு தியானம், வழிபாடு ஆகியவற்றில் நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

பரிவர்த்தினி ஏகாதசியில் செய்ய கூடாதவை

  • உணவு தவிர்ப்பு: சமைத்த உணவுகள், தானியங்கள், அரிசி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
  • மனக்கட்டுப்பாடு: கோபத்தை கட்டுப்படுத்தி, யாருடனும் வாக்குவாதம் செய்யாமல், தீய எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • செயல்பாட்டுத் தவிர்ப்பு: சோம்பலுடன் இருப்பதோ, குளிக்காமல் இருப்பதும், பகலில் தூங்குவதும் கூடாது.
  • மது, அசைவம்: ஏகாதசி நாளில் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் மது, அசைவம், தாமத உணவுகளை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பரிவர்த்தினி ஏகாதசி விரத பலன்கள்

பரிவர்த்தினி ஏகாதசி விரதத்தை முறையாக, பக்தியுடன் கடைபிடித்தால் பெருமாளுக்கு மிகவும் நெருக்கமானவராக ஆக முடியும். பெருமாளுடன் தெய்வீக பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். கடந்த தவறுகள், பாவங்கள் அவற்றால் ஏற்படும் கர்மவினைகளில் இருந்து விடுபட முடியும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள், சிக்கல்களில் இருந்து விடுபட முடியும். இந்த விரதம் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியதாகும். இந்த நாளில் பெருமாளை மனதார நினைத்து வழிபடுவது மிகவும் மங்களகரமானதாகும். ஏகாதசியில் விரதம் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைய பெருமாள் வழிகாட்டுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆவணி மாத வளர்பிறையில் வரும் ஒரு முக்கியமான ஏகாதசி ஆகும். இந்த நாளில் மகாவிஷ்ணு தனது சயன நிலையை மாற்றிக் கொள்வதாக நம்பப்படுகிறது. மேலும், இது வாமன அவதாரத்திற்கு முன்பு வரும் ஏகாதசி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் கடந்த கால பாவங்கள் நீங்கி, அமைதி மற்றும் முக்தி கிடைக்கும். பெருமாளுடன் தெய்வீக பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

சமைத்த உணவுகள், தானியங்கள், அரிசி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோபம், வாக்குவாதம், தீய எண்ணங்கள், சோம்பல், பகலில் தூங்குதல், மது மற்றும் அசைவ உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Our Other Services