இந்து மதத்தில் சிவ வழிபாடு மிக முக்கியமானது. குறிப்பாக பெண்கள் தங்கள் குடும்ப நலம், கணவர் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக சிவபெருமானை வணங்குவது சிறப்பு. ஜோதிடம்360.in வழங்கும் இந்த வழிகாட்டியில், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமையவும், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காகவும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வணங்கி விரதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவபுராணம், லிங்க புராணம் போன்ற சிவபெருமானின் பெருமைகளை கூறும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் நல்ல பலன் தரும். இந்த தமிழ் வழிகாட்டியைப் பின்பற்றி, மன அமைதியையும், ஞானத்தையும் பெற்று மகிழுங்கள்.
சிவ வழிபாடு: ஒரு அறிமுகம்
சிவ வழிபாடு என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும். சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களுக்கும் அதிபதியாக கருதப்படுகிறார். அவரை லிங்க வடிவிலேயே பெரும்பாலான இடங்களில் பக்தர்கள் வழிபடுவது உண்டு. சிவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம், நமது கர்ம வினைகள் நீங்கும், மன அமைதி கிடைக்கும், ஞானமும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
சிவ பெருமான் மிக விரைவில் அருள்புரியும் கடவுளாகவும், தூய மனதுடன் சிறிதளவு பூஜை செய்தாலும் அதை பெரிய வழிபாடாக ஏற்கும் கருணை மனம் கொண்டவராகவும் போற்றப்படுகிறார். இந்து மதத்தில் சாவன் மாதம் சிவ வழிபாட்டிற்கான மாதமாக கருதப்படுகிறது. இந்த புனிதமான மாதத்தில், பெண்கள் சில முக்கியமான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அப்போது தான் அவர்களின் வழிபாடு சரியான முறையில் இருக்கும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அவர்களின் பக்தி சிவபெருமானை தூய்மையாகவும், மரியாதையாகவும் சென்றடையும்.
பெண்கள் சிவ வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 7 முக்கிய விதிமுறைகள்
பெண்கள் சிவபெருமானை வழிபடும் போது பின்பற்ற வேண்டிய 7 முக்கிய விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்:
- 1. சிவ அபிஷேகம்சிவலிங்கத்திற்கு தண்ணீர் அல்லது பால் கொண்டு அபிஷேகம் செய்து போது, பெண்கள் சுத்தமான மனதுடன், கவனமாக இருக்க வேண்டும். "சிவாய நம" போன்ற சிவ மந்திரங்களை சொல்லிக் கொண்டே, கடிகார திசையில் மெதுவாக ஊற்ற வேண்டும். அவசர அவசரமாக ஊற்றாமல், பக்தியுடன் செய்ய வேண்டும். இது வெறும் சடங்காக இல்லாமல், மரியாதையுடன் செய்ய வேண்டிய ஒன்று. மிகவும் பணிவுடன் குனிந்தோ அல்லது அமர்ந்தோ இந்த அபிஷேகத்தை செய்ய வேண்டும், நேராக நின்ற படி அபிஷேகம் செய்யக் கூடாது.
- 2. சரியான பொருட்களை பயன்படுத்துதல்சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பெண்கள் சிவ பூஜைக்காக பயன்படுத்த வேண்டும். வில்வ இலைகள், வெள்ளை பூக்கள், சுத்தமான தண்ணீர் அல்லது பசுவின் பால் ஆகியவை சிறந்தவை. துளசி இலைகள் மற்றும் சிவ பூஜைக்கு பயன்படுத்தக் கூடாத பூக்களை பயன்படுத்தக்கூடாது. பொருட்கள் எப்போதும் புதியதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். பூச்சிகள் அரிக்காத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், தூய்மையற்ற பொருட்களை பயன்படுத்துவது அவமரியாதையாக கருதப்படும்.
- 3. சிவலிங்கத்தை தொடக்கூடாதுசுத்தம் இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும், குளிக்காமலும் பெண்கள் சிவ லிங்கத்தை தொடக்கூடாது. எந்த பூஜையும் செய்யக்கூடாது. ஆனால், பூஜை அறைக்குள் செல்லாமல் வெளியில் இருந்த படியே அவர்கள் சிவ மந்திரங்களை சொல்லலாம். சிவனை மனதார நினைக்கலாம். இது ஆன்மீக தூய்மை மற்றும் தெய்வத்தின் புனிதத்தை மதிக்கும் ஒரு வழியாகும். இந்த நாட்களில் மனரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
- 4. காலை நேரத்தில் பூஜை செய்தல்பெண்கள் சிவனை வழிபட சிறந்த நேரம் அதிகாலை ஆகும். குறிப்பாக பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரிய உதயத்திற்கு முன்பான அதிகாலை நேரம் மிகவும் புனிதமானது. இந்த நேரத்தில் தெய்வீக சக்தி அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது பிரார்த்தனைகளின் ஆன்மீக பலனை அதிகரிக்கும். அந்த நாளை சுத்தமான மனதுடன், குளித்துவிட்டு, அமைதியான மனதுடன் தொடங்கினால், வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும். கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த நேரத்தில் கடவுளிடம் முன் வைக்கப்படும் வேண்டுதல்கள் மிக விரைவாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
- 5. சிவனுக்கு மஞ்சள் சமர்பிக்க கூடாதுமஞ்சள் பல சடங்குகளில் புனிதமாக கருதப்படுகிறது. ஆனால், அது சிவபெருமானுக்கு உரியது அல்ல. பெண்கள் சிவ பூஜையில் மஞ்சளை பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் பெண் தெய்வங்களுக்கு உரியது. அதனால் அம்பிகை வழிபாட்டின் போது மட்டுமே மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை பிரதானமான பூஜை பொருளாக பயன்படுத்த வேண்டும். சிவலிங்கத்திற்கு சந்தனம் அல்லது விபூதி (புனித சாம்பல்) பயன்படுத்தலாம். சிவ பெருமான் அக்னி சொரூபமானவர் என்பதால் அவரை குளிர்விக்க பால், பன்னீர், கங்கை நீர், சந்தனம் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களால் அபிஷேகம் செய்வதால் சிவ பெருமானின் மனம் மகிழும் என சொல்லப்படுகிறது.
- 6. தூய்மை அவசியம்சிவ பூஜை செய்யும் போது தூய்மை மிக முக்கியம். பெண்கள் சடங்குகள் தொடங்குவதற்கு முன் குளிக்க வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை பாத்திரங்கள் கூட சுத்தமாக இருக்க வேண்டும். நெற்றியில் குங்குமம் இல்லாமலும், தலைமுடியை கட்டாமலும் சிவ வழிபாட்டினை பெண்கள் செய்யவே கூடாது. உடல் சுத்தமாக இருந்தால், மனம் தெளிவாக இருக்கும். இது சிவனை உண்மையாக வணங்குவதற்கு தேவையான ஆன்மீக ஒழுக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
- 7. சிவ மந்திரங்களை சொல்லும் முறை"ஓம் நம சிவாய" போன்ற சிவ மந்திரங்களை சொல்லும் போது கவனம் தேவை. பெண்கள் மெதுவாகவும், மரியாதையுடனும் மந்திரங்களை சொல்ல வேண்டும். அவசர அவசரமாகவோ அல்லது சாதாரணமாகவோ சொல்லக்கூடாது. சிவ மந்திரங்களின் சக்தி அவற்றின் அதிர்விலும், எண்ணத்திலும் உள்ளது. அமைதியான மற்றும் பணிவான மனதுடன், உண்மையாக மந்திரங்களை சொன்னால், சிவன் அருள் கிடைக்கும். மன அமைதி மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். நெற்றியில் திருநீறு அணிந்தும், கைகளில் ஜப மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்தும் மந்திர ஜபம் செய்வது இன்னும் அதிக விசேஷமானதாகும்.