ஜோதிடத்தின்படி, உங்கள் ராசி அதிபதியின் சேர்க்கை மற்றும் அமைப்பைப் பொறுத்து, நீங்கள் கடின உழைப்பாளியாக, புத்துணர்ச்சியுடன் செயல்படுபவராக அல்லது சோம்பேறியாக இருப்பீர்களா என அறியலாம். இந்த கட்டுரை 12 ராசிகளின் சுறுசுறுப்பு மற்றும் சோம்பல் குணாதிசயங்களை தமிழ் ஜோதிட ரீதியாக அலசுகிறது. ஜோதிடம் கூறும் இந்த ரகசியங்களை அறிந்து உங்கள் வாழ்க்கைப் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள். முருகப் பெருமானின் அருளால் எல்லோரும் சிறந்த குணங்களுடன் வாழ பிரார்த்திப்போம்.
ராசிகளின் சுறுசுறுப்பு மற்றும் சோம்பல் பட்டியல்:
தனுசு ராசி
தனுசு ராசி சேர்ந்தவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். எந்த ஒரு செயலையும் கட்டுப்பாட்டுடன் செய்ய விரும்ப மாட்டார்கள். சுதந்திர மனப்பான்மை காரணமாக, சொந்த விதிமுறைகளால் தங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கட்டுப்பாட்டுடன் இருக்க மாட்டார்கள். இதனால் பெரும்பாலும் சோம்பேறித்தனமாக செயல்படுவார்கள்.
கும்ப ராசி
சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியினர் புத்திசாலித்தனமானவர்களாகவும், ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும், வேலைகளை செய்து முடிப்பதில் மந்தமான செயல்பாடு இருக்கும். பலரும் செய்யக்கூடியதை விடுத்து, மாறுபட்ட வகையில் செயல்பட நினைப்பார்கள். பல நேரத்தில் புதிய விஷயத்தில் உற்சாகத்துடன் இருந்தாலும், மிகவும் சோம்பேறித்தனத்துடன் செயல்படுவார்கள். இவர்கள் தங்கள் வேலையை சுறுசுறுப்புடன் திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பான வெற்றியை பெறலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசியினர் உறுதியான மனநிலை கொண்டவர்கள். தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் ஒரு பிடிவாத மனநிலை கொண்டவர்கள். இவர்களின் இந்த பிடிவாதம் பிறருடன் ஒத்துப் போகாமல் செயல்பட வைக்கிறது. இவர்களால் 24 மணி நேரமும் வேலையை செய்ய முடியும். ஆனால் இவர்களின் மனம் அதில் ஈடுபடாது.
சிம்ம ராசி
சிம்ம ராசி சேர்ந்தவர்கள் பிறரின் கவனத்தை தன் மீது ஏற்க நினைக்கக் கூடியவர்கள். மேலும் இவர்கள் தங்களுடைய சகாக்களை குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள். பெரும்பாலும் தனிமையில் இருக்க நினைப்பவர்கள். இவர்கள் வசீகரமாகவும், ஆளுமையுடனும் செயல்படக்கூடியவர்கள். இருப்பினும் இவர்கள் சோம்பலைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
மீன ராசி
மீன ராசியினர் ஏதேனும் ஒரு நபராலும் உந்தப்பட்டு, புதிய விஷயத்தில் ஈடுபட நினைப்பார்கள். அதுபோன்று பல நிகழ்வுகளில் வெற்றி பெற நினைப்பார்கள். இருப்பினும் பெரும்பாலான நேரத்தில் தங்களின் கனவு உலகத்தில் இருப்பதால், நிஜ உலகத்தில் உள்ள எதார்த்தத்தை உணராமல் இருப்பார்கள். அதனால் தான் முயற்சி சிறிய தடை வந்தாலும், அதை ஒத்தி வைக்க நினைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
கடக ராசி
கடக ராசியை சேர்ந்தவர்கள் தந்திரமானவர்கள். தனக்கென ஒரு எல்லைக்கோடு வைத்திருப்பார்கள். முக்கியமான விஷயங்களை சிறப்பாக, வேகமாக செய்து முடிப்பார்கள். தனக்கு விருப்பம் இல்லாத அல்லது கால அவகாசம் இருக்கக்கூடிய வேலைகளை சோம்பேறித்தனமாக அப்படியே விட்டுவிடுவார்கள். இவர்களின் இந்த மனநிலையை மாற்றினால் இவர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசி சேர்ந்தவர்கள் தன் ராசி அடையாளத்தைப் போல மிகவும் சோம்பேறியாகவும் அல்லது சுறுசுறுப்பாகவே இல்லாமல் சமநிலையில் இருக்கக்கூடியவர்கள். இவர்களிடம் ஆற்றல் சிறப்பாக இருக்கும், வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்கள். இவர்கள் குழுவாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். தானாக செய்யக்கூடிய வேலையை சற்று சோம்பேறியாக இருப்பார்கள்.
மிதுன ராசி
மிதுன ராசி சேர்ந்தவர்கள் சிறிதளவு சோம்பேறிகளாக இருப்பார்கள். ஆனால் உங்கள் பணியிடத்தில் இருக்கும்போது தங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக செயல்படுவார்கள்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் உணர்ச்சிகளால் வாழ்க்கையில் சிதைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களின் வேலை மற்றும் வாழ்க்கையில் புதிய முயற்சிகளில் மிகவும் உறுதியாக மற்றும் முன்னோர்களுடன் செயல்படுவார்கள். இவர்கள் தங்களின் வேலைகளை தள்ளிப்போடாமல் செயல்பட நினைத்தாலே வெற்றி கிடைக்கும்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் ஆற்றலுடன் செயல்பட கூடியவர்கள். எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போட வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் ஏற்படாது. இவர்களிடம் ஊக்கமாக பேசினாலே மிக வேகமாக வேலை செய்து முடித்து விடுவார்கள்.
மகர ராசி
மகர ராசி சேர்ந்தவர்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களிடம் சோம்பல் இருக்காது. எந்த வேலையை எப்போது செய்து முடிக்க வேண்டும் என்ற சரியான திட்டமிடல் இருக்கும். மேலும் வாழ்க்கையில் லட்சியத்துடன் செயல்படுவார்கள் என்பதால் இவர்கள் வேலையை தவிர்க்கக் கூடிய சோம்பல் அரிதாகவே இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசியின் அகராதியில் சோம்பல் என்ற வார்த்தைக்கு இடமில்லை. சோம்பேறி என்றால் என்ன என கேட்பார்கள். எதிலும் சிறப்பாகவும், சிறந்தவர்களாகவும் செயல்பட நினைப்பார்கள். ஒரு வேலையை அவர்களிடம் ஒப்படைத்தால் அதை சரியான நேரத்தில், சரியாக செய்து முடிப்பார்கள்.
ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. ஜோதிடத்தின் துணையுடன் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வது, சுய முன்னேற்றத்திற்கும் உறவுகளை மேம்படுத்தவும் உதவும். தமிழ் மொழியில் இதுபோன்ற பல ஜோதிட தகவல்களை jothidam360.in இல் காணலாம்.