இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தெய்வத்திற்குரியதாகவும், சிறப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது. சனி பகவான், கர்ம காரகன் என அழைக்கப்படுபவர், நம் செயல்களுக்கு ஏற்ப பலன்களை பாரபட்சமின்றி வழங்குவதால், நீதியின் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். சனியின் தாக்கம் ஜாதக ரீதியாக வாழ்க்கையில் பல துன்பங்களை ஏற்படுத்தலாம். இந்த ஜோதிட ரீதியான சனியின் கெடுபலன்களில் இருந்து விடுபட, சனிக்கிழமைகளில் சில எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்வது அவசியம். இவை உங்களது வாழ்க்கையில் நிலைத்தன்மையை பெற்றுத் தருவதுடன், பல தடைகளை விலக்கும்.
சனி பகவானின் தீய பார்வை நம் மீது படும்போது பொருளாதார பிரச்சனைகள் மட்டுமல்லாமல், மன அழுத்தம், ஆரோக்கியக் குறைபாடுகள், உறவுகளுக்குள் பிரிவுகள் மற்றும் மனக்கசப்பு போன்றவையும் ஏற்படும். அதேபோல், சனி பகவானின் அருள் இருந்தால் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வதுடன், வெற்றிகளையும் குவிக்கலாம். சனியின் கடுமையான பாதிப்புகளில் இருந்து விடுபடவும், வாழ்வில் வெற்றிகளை குவிக்கவும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள 4 சனிக்கிழமை பரிகாரங்களை தவறாமல் கடைபிடிக்கவும். இந்த பரிகாரங்கள் குறிப்பாக ஜாதகத்தில் சனி திசை, சனி தோஷம், மகாதசை நடப்பவர்களுக்கு நல்ல பலனை தரும்.
சனி தோஷம் நீங்க சனிக்கிழமை செய்ய வேண்டிய 4 முக்கிய பரிகாரங்கள்
-
1. அரச மரத்தடி வலம் வருதல்
சனிக்கிழமை தோறும் அரச மரத்தை ஏழு முறை "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரெளம் ஷ ஷனேஸ்வராய நமஹ" என்ற சனி மந்திரத்தை உச்சரித்தபடி வலம் வர வேண்டும். இந்த பரிகாரம் சனி தோஷத்தில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளில் இருந்து விடுபட வைக்கும்.
-
2. கருப்பு எள், வஸ்திரம் மற்றும் கடுகு எண்ணெய் சமர்ப்பித்தல்
சனி பகவானின் அருளைப் பெற, அரச மரத்தடியில் கருப்பு எள், கருப்பு வஸ்திரம், கடுகு எண்ணெய் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதனால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.
-
3. கடுகு எண்ணெய் விளக்கேற்றுதல்
சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய்யில் "ஓம் சனி ஷனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே விளக்கேற்றி வழிபட்டால், சனி பகவானின் கடும் கோபத்தில் இருந்து விடுபட முடியும். இது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைத்து, ஒருவரின் வாழ்க்கையில் நிலைத்தன்மையை பெற உதவும்.
-
4. அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல்
ஜாதகத்தில் சனியால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள், சனிக்கிழமையில் காலை சூரிய உதயத்திற்கு முன் குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, அரச மரத்தடிக்கு சென்று மனதார வழிபட்டு, வேருக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீருடன் கங்கை நீரை கலந்து ஊற்றுவதால் இன்னும் அதிகமான பலன்கள் கிடைக்கும். இது சனி பகவானின் அருளைப் பெற்றுத் தருவதுடன், பல தடைகளை நீக்கும்.