காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம், அனைத்து விதமான நோய்களில் இருந்து விடுதலை அளித்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த மந்திரமாகும். திருப்பதி ஏழுமலையான் மீது பாடப்பட்ட இந்த ஸ்லோகத்தின் முழுமையான பலன்களையும், பாராயணம் செய்யும் முறையையும் ஜோதிடம்360 உங்களுக்காக தொகுத்து வழங்குகிறது.
வஜ்ரகவசம் என்றால் என்ன?
வஜ்ரம் என்றால் வஜ்ராயுதத்தைக் குறிக்கும். ஆயுதங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த, உறுதியான, பலமான ஆயுதமாக கருதப்படுவது வஜ்ராயுதம். அப்படிப்பட்ட வஜ்ராயுதத்தைப் போன்ற ஆரோக்கியமான, பலமான உடலை அளித்து, நம்மை எப்போதும் துன்பங்களிலிருந்து காக்கக் கூடிய ஸ்லோகம் தான் ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம். இது திருப்பதி ஏழுமலையான் மீது பாடப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். இந்த வஜ்ரகவசத்தை பாராயணம் செய்வதன் மூலம் உடல் வியாதிகள் நீங்கி, கடவுளின் நல்ல உடல் நலத்துடன் இருக்க அருள் புரியும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம் பாராயணம் செய்யும் முறை
இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் வீட்டில் விளக்கேற்றி வைத்து படிக்கலாம். அப்படி முடியாதவர்கள் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில், சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். நோய்களை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை நம்பிக்கையுடன் பாராயணம் செய்வது உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்.
நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்
ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது
ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி
ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது
தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:
ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:
பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது
ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:
ஸாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:
விளக்கம்:
அனைத்திற்கும் காரணமான நாராயணனே, தங்களின் கவசம் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்கள் கொண்டு விஸ்வரூபம் எடுத்தவரே, என் சிரத்தைக் காப்பீராக. ப்ராணனுக்கே ப்ராணன் அருளும் தாங்கள் என் ப்ராணனை ரட்சிக்க வேண்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை சதாசர்வ காலமும் காக்க வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவன் என் தேகத்தைக் காக்க வேண்டும். அலர்மேல்மங்கையின் மணாளன் சர்வ காலமும் என்னைக் காக்க வேண்டும். என் கர்மங்களையெல்லாம் அகற்றி என் உடலை வஜ்ரம் போல் உறுதிமிக்கதாகக் காப்பீராக மாற்ற வேண்டும். திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டி, துளசி படைத்து இந்த ஸ்லோகத்தைப் படிப்பவர்களுக்கு பெருமாள் எப்போதும் துணை இருப்பார். அவர்களுக்கு அளவில்லாத நன்மைகளையும் அள்ளித் தருவார். இதை படிக்க முடியவில்லை என்றாலும் பாடலை ஒலிக்கச் செய்து காதுகளால் கேட்கலாம். இதுவும் சிறந்த பலனை தரும். இந்த பாடலைப் படிப்பதால் மனத்தெளிவும் ஏற்படும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசத்தின் முக்கிய பலன்கள்
- • அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.
- • உடல் ஆரோக்கியத்தை வஜ்ரம் போல் உறுதிமிக்கதாக மாற்றும்.
- • மனத்தெளிவையும், அமைதியையும் வழங்குகிறது.
- • திருப்பதி ஏழுமலையானின் அருளையும், பாதுகாப்பையும் பெறலாம்.
- • கர்ம வினைகளை நீக்கி நன்மைகளை அள்ளித் தரும்.