தமிழ் மக்களின் கலாச்சாரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் நம்பிக்கை கொண்ட நாம், நம் பாரம்பரிய ஆரோக்கிய முறைகளை அறிவது மிக அவசியம். பல முருகன் ஆலயங்களிலும், ஆறுபடை வீடுகளிலும், இந்து மத சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கும் மஞ்சள், அதன் மகத்துவத்தை நீண்ட காலமாக உணவிலும், சருமப் பராமரிப்பிலும் வெளிப்படுத்தி வருகிறது. இதை ஒரு சிறந்த மசாலாப் பொருள் என்றும், அரிய மூலிகை என்றும் குறிப்பிடலாம். பொதுவாக சமையல், காயங்களைக் குணப்படுத்துதல், மற்றும் சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் மஞ்சளைப் பற்றி 'முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்' என்ற ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் இது வெறும் கட்டுக்கதையே அன்றி, அறிவியல் ரீதியான உண்மை அல்ல. குறிப்பாக பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு மஞ்சள் ஒரு அற்புதமான தீர்வாக அமையும்.
பொடுகு என்னும் மோசமான அரக்கன்
பொடுகு என்பது வெறும் அழகு சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்க முடியாது. அது உங்களுடைய தலை, உச்சந்தலை, மற்றும் வேர்க்கால்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்பதை மறந்துவிடக் கூடாது. பொடுகு உங்கள் ஆரோக்கியம் பற்றி உங்களுக்கு ஏதோ செய்தி சொல்ல வருகிறது என்று அர்த்தம். பொடுகு வந்துவிட்டால் முதலில் லேசான அரிப்பு இருக்கும். பிறகு அரிக்கும் அளவு அதிகமாகும். சிலர் எப்போது பார்த்தாலும் அரிப்பால் சொரிந்து கொண்டே இருப்பார்கள். இதனால் பொடுகு செதில் செதிலாக உதிரும். சிலருக்கு தோள்பட்டையில் டிரஸ் மீதெல்லாம் கொட்டும். ஆண்களுக்கு இந்த பிரச்சினை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது கட்டாயம் சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினை. இல்லையென்றால் இதுவே நிறைய தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாகி விடும்.
பொடுகை விரட்ட பாரம்பரிய முறை
பொதுவாக நிறைய ஆன்டி Dandruff ஷாம்பு வாங்கி போட்ட பிறகும்கூட பொடுகு போகாமல் இருக்கும். அதனால் வீட்டு வைத்தியத்தின் பக்கம் திரும்புவோம். சிலர் தயிர், தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து போடுவார்கள். அது ஓரளவுக்கு பொடுகையும் அரிப்பையும் குறைக்கும். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் வரத் தொடங்கிவிடும்.
பொடுகை விரட்டும் பாரம்பரிய முறை - மஞ்சள் பயன்பாடு
மஞ்சள் உங்கள் பொடுகை விரட்டும் மிகச்சிறந்த வழி என்று சொன்னால் நம்புவீர்களா? மஞ்சள் காலங்காலமாக நம்முடைய பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு பொருள். இதை தங்கத்துக்கு இணையாகக் குறிப்பிடுவார்கள். இந்தியாவின் எல்லா வீட்டு சமையல் அறையிலும் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது மஞ்சள் தான். இதில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி ஃபங்கல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதோடு இதில் உள்ள குர்குமின் என்னும் தனித்துவமான ஆன்டி ஆக்சிடண்ட்டு புற்றுநோய் செல்களையே தாக்கி அழிக்கும் தன்மைகளைக் கொண்டது. அதனால் இது சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கள் மட்டும் இல்லாமல் தலைமுடி உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு உள்ளிட்டவற்றையும் கட்டுப்படுத்தும். ஸ்கால்ப்பின் pH அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
மஞ்சள் எப்படி பொடுகை எதிர்த்து போராடுகிறது?
நம் தலையில் இருக்கும் பொடுகு மலாசீஸ்யா க்ளோபோஸ் (Malassezia globose) என்னும் நுண்ணுயிரியைத் தூண்டும். இது ஒருவகையான பூஞ்சையாகும். இது இயற்கையாக ஸ்கால்ப்பில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும். இதனால் தான் ஸ்கால்ப் அதிக வறட்சியாகி எரிச்சல் மற்றும் கடுமையான அரிப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளை வெள்ளையாக உதிர்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஃபங்கல் பண்பு இதை சரிசெய்கிறது என்று கிளினிக்கல் காஸ்மெட்டிக் இன்வெஸ்டிகேஷனல் டெர்மடாலஜிஸ்ட் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்த குர்குமின் பொடுகுக்கு காரணமாகும் பூஞ்சையின் வளர்ச்சியை வேரிலிருந்தே அழிக்கிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
பொடுகை விரட்ட மஞ்சள் எப்படி பயன்படுத்தணும்?
மஞ்சளை பொடுகுக்கு பயன்படுத்துவது மிக மிக எளிமையான விஷயம் தான். ஸ்கால்ப்பை மென்மையாக்கி பூஞ்சைகளைக் கொல்லும் மஞ்சள் வாட்டரை வீட்டில் எளிமையாக செய்து பயன்படுத்தலாம். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் பொடியைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக தலைக்கு ஷாம்பு அப்ளை செய்து குளித்த பிறகு இந்த மஞ்சள் கலந்த நீரை தலையில் ஊற்றி ஸ்கால்ப் முழுவதும் நன்கு மசாஜ் செய்து விடுங்கள். நன்கு இந்த மஞ்சள் நீர் தலை முழுவதுமே படும்படி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் சாதாரண நீர் ஊற்றி தலையை அலசிக் கொள்ளலாம். இதை நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் செய்து வரலாம். சில முறை பயன்படுத்தியதுமே பலன்கள் கிடைக்கும்.
மஞ்சள் பயன்படுத்துவதால் ஏதேனும் பக்க விளைவு வருமா?
தலைக்கு மஞ்சள் பயன்படுத்தினால் முடி கொட்டி விடும் என்பது வெறும் கட்டுக்கதை தான். மஞ்சள் சருமத்துக்கும் தலைமுடிக்கும் பயன்படுத்துகிற ஒரு நேச்சுரல் ரெமிடி தான். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு சில சமயங்களில் அழற்சி ஏற்படலாம். அதனால் வீட்டு வைத்தியமாகவே இருந்தாலும் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. சிலருக்கு மஞ்சளின் நிறம் முடியில் இருக்கும். அலசும்போது நன்றாக அலசுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் மஞ்சள் வாங்கும் போது அது சுத்தமானதாக இருக்க வேண்டும்.
இறுதியாக
உங்களுக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்காக இனிமேல் நூற்றுக்கணக்கில் செலவு செய்து ஷாம்பு மற்றும் பிற பொருள்களை வாங்கி பயன்படுத்துவது, நிறைய வீட்டு வைத்தியங்களை பின்பற்றி பலன் கிடைக்காமல் போவது என்று இல்லாமல் மிக எளிமையாக வீட்டில் இருக்கும் மஞ்சள் பொடியை வைத்தே பொடுகை விரட்ட முடியும்.
பொறுப்பு துறப்பு - இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.