Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வைகாசி பௌர்ணமி 2025: ராசிக்கு ஏற்ற நிதி பரிகாரங்கள்

எதிர்வரும் வைகாசி பௌர்ணமி 2025 ஆனது ஜூன் 10 அன்று பிற்பகல் 12.27 மணியளவில் தொடங்கி, அடுத்த நாள் பிற்பகல் 01.53 வரை நீடிக்கிறது. ஆண்டுதோறும் வரும் பௌர்ணமி தினங்கள் தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டவை. குறிப்பாக, வைகாசி பௌர்ணமி வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகார காரியங்களுக்கு மிகவும் ஏற்ற தினமாக கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில், ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் ராசிக்கு ஏற்றப்படி சிறப்புப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் பணக் கஷ்டங்கள் மற்றும் நிதிச் சுமைகளில் இருந்து விடுதலை பெறலாம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வைகாசி பௌர்ணமி: ராசி வாரியான நிதி பரிகாரங்கள்

மேஷம் (Aries)

மேஷ ராசிக்கார்கள் தங்கள் பண கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த சிறப்பு தினத்தில் பாயாசம் தானமாக அளிக்கலாம். கோவில் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு பாயாசத்தை தானமாக அளிப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம். மேலும், தங்கள் வாழ்வில் இதுநாள் வரை எதிர்கொண்டு வந்த சிரமங்கள் மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.

ரிஷபம் (Taurus)

புத்தரின் அருள் பெற்ற இந்த சிறப்பு பௌர்ணமி தினத்தில், கருணை உள்ளம் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் தயிரை தானமாக அளிக்கலாம். தயிர் இல்லாத நிலையில், சுத்தமான நெய்யை கோவிலில் யாசகம் கேட்பவர்களுக்கு தானமாக அளிக்க நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, சிறப்பான பலன்களையும் பெறுவார்கள்.

மிதுனம் (Gemini)

தொழிலில் நஷ்டம் சந்திக்கும் மிதுன ராசிக்காரர்கள் இந்த சிறப்பு பௌர்ணமி தினத்தில், பாலுடன் அரிசி சேர்த்து தானமாக அளிக்கலாம். பாலுடன் அரிசி சேர்த்து பால் பொங்கல் தயார் செய்து அதனை வழிப்போக்கர்களுக்கு பிரசாதமாக அளிப்பதன் மூலம் தங்களின் பண கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சிறப்பு பௌர்ணமி தினம், பணியிடத்தில் உண்டாகும் தடைகளை போக்கும் தினமாக உள்ளது. தங்கள் தொழிலின் முன்னேற்றப் பாதையில் உண்டாகும் தடைகளை போக்க, சர்க்கரை மிட்டாய் கலந்த பாலை தானமாக அளிக்கலாம். குறிப்பாக, லட்சுமி தேவியின் பக்தர்களுக்கு தானமாக அளிக்க நல்ல பலன் காணலாம்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களின் கிரக தடைகள் மற்றும் தோஷங்களை போக்கும் ஒரு தினமாக இந்த வைகாசி பௌர்ணமி பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில், கோவில் வரும் பக்தர்களுக்கு வெல்லத்தை பிரசாதமாக அளிக்கலாம். வெள்ளத்துடன் - ஊற வைத்து இடித்த அரிசி மாவையும் சேர்த்து பிரசாதம் போல் அளிக்கலாம்.

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களின் நிதி பிரச்சனைகளை போக்க இந்த வைகாசி பௌர்ணமி தினம் உதவி செய்யும். இந்த சிறப்பு தினத்தில் லட்சுமி தேவிக்கு பிடித்த பால் பாயாசத்தை லட்சுமி தேவியின் பக்தர்களுக்கு அளிக்கலாம். இதன் மூலம் வியாபார தடைகள் நீங்கி, நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்கார்கள் இந்த சிறப்பு தினத்தில் பால், அரிசி மற்றும் நெய் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். அல்லது, இவை மூன்றையும் சேர்த்து பிரசாதமாக தயார் செய்து, பக்தர்களுக்கு அளிப்பதன் மூலம் லட்சுமி மற்றும் நாராயணனின் ஆசியைப் பெறலாம்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிரக தோஷங்களை போக்கும் ஒரு தினமாக இந்த வைகாசி பௌர்ணமி பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில் விருச்சிக ராசிக்காரர்கள், சிவப்பு நிறம் கொண்ட ஆடைகள் அல்லது ஏதேனும் ஒரு பொருளை தானமாக அளிப்பது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்கார்களுக்கு இந்த சிறப்பு பௌர்ணமி தினம், குடும்பத்தில் மகிழ்ச்சியை பரப்பும் தினமாக அமைகிறது. இந்த சிறப்பு தினத்தில், தனுசு ராசிக்காரர்கள் பருப்பு வகைகளை தானமாக அளித்து வர நல்ல பலன் காண்பார்கள்.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்கள் தங்களின் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், நிதி சார்ந்த ஆதாயங்களை காணவும் இந்த வைகாசி பௌர்ணமி உதவி செய்கிறது. இந்த சிறப்பு தினத்தில், நீரோடும் நதியில் அரிசி உள்ளிட்ட தானியங்களை சிறிதளவுக்கு கொட்டி வழிபட, உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடிவு பெறலாம்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களின் நிதி பிரச்சனை குறைய, இந்த சிறப்பு பௌர்ணமி தினத்தில் ஏழைகளுக்கு உணவு அளிக்கலாம். குறிப்பாக, கோவிலில் யாசகம் கேட்பவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அன்னதானம் அளிக்க, நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களின் தொழிலை மேம்படுத்த உதவும் ஒரு தினமாக இந்த வைகாசி பௌர்ணமி பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில், லட்சுமி தேவியை வணங்கி பின் இல்லாதவர்களுக்கு உணவு அளிக்கலாம். அதாவது, இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்ய உங்கள் பண கஷ்டங்கள் நீங்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வைகாசி பௌர்ணமி 2025 ஜூன் 10 அன்று பிற்பகல் 12.27 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் பிற்பகல் 01.53 வரை நீடிக்கும்.

ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்கள் செய்வதன் மூலம் பண கஷ்டங்கள், நிதி சுமைகள், தொழில் தடைகள் மற்றும் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பௌர்ணமி தினத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு பாயாசம், தயிர், நெய், பால் அரிசி, சர்க்கரை மிட்டாய் கலந்த பால், வெல்லம், பருப்பு வகைகள், அரிசி தானியங்கள், உணவு அல்லது சிவப்பு நிற ஆடைகள் போன்றவற்றை தானமாக அளிக்கலாம்.

Our Other Services