Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வாஸ்து சாஸ்திர திசைகள்: முக்கியத்துவம், பலன்கள் மற்றும் அதிதேவதைகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, மற்றும் சகல சம்பத்துக்களையும் பெற உதவும் ஒரு பண்டைய தமிழ் வழிகாட்டுதலாகும். இதன் அடிப்படையில் வீட்டின் ஒவ்வொரு திசையிலும் (8 திசைகள் மற்றும் கோணங்கள்) எப்படிப்பட்ட பொருட்கள், செயல்களை செய்ய வேண்டும் என்பதை அறிவது ஜோதிடம் மற்றும் வாழ்வியல் ரீதியாக மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில், வாஸ்து திசைகளின் முக்கியத்துவம், அதன் அதிதேவதைகள், மற்றும் அதன் பலன்கள் பற்றி விரிவாக காண்போம்.

வாஸ்து திசைகளின் முக்கியத்துவம் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக நாம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளும், வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு, தென் மேற்கு என கோண திசைகள் உட்பட 8 திசைகளாகக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு திசைக்கும் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. மேலும், ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு கிரகத்துடனும் தொடர்பு உள்ளது. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்க நாம் திசைகளை எப்படி வாஸ்துவின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்வது என்பதை இஜோதிடம் ரீதியாக தெரிந்து கொள்வோம்.

கிழக்கு திசை

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால் இந்த திசையை சூரியன் மற்றும் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. இந்த திசையானது நம்முடைய ஆரோக்கியம், ஞானம், செல்வம், செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும் கிரகம் ஆளும் திசையாக கருதப்படுகிறது என்பதால், நாம் வீடு கட்டும் போது இந்த திசையில் சிறிதளவும் இடம் விட்டு வீடு கட்டுதல் அல்லது இந்த பகுதியில் சிறிது திறந்த வெளியாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இதை கடைப்பிடிக்காவிட்டால் வீட்டின் தலைவர் அல்லது முக்கிய உறுப்பினரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

மேற்கு திசை

மேற்கு திசையை ஆளும் கிரகங்கள் சனி மற்றும் வருண தேவன். கிழக்கிற்கு எதிராக உள்ளதோடு, ஒளி கிரகம் சூரியனுக்கு எதிராக இருள் கிரகம் உள்ளது. வெப்பத்திற்கு எதிராக மழை கடவுள் உள்ளது. இந்த திசையானது ஒருவருக்கு வெற்றி, மரியாதை, நல்ல எதிர்காலம், செழிப்பு உள்ளிட்டவற்றை அளிக்கக்கூடிய அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில் தாழ்வாக இருக்கக்கூடாது. மேலும் குழி, விரிசல், குறைபாடு உள்ள பகுதியாக இருக்கக்கூடாது. இதனால் மன அழுத்தம் ஏற்படும் என நம்பப்படுகிறது. உங்கள் வேலையில் தடை ஏற்படலாம்.

வடக்கு திசை (குபேர மூலை)

வடக்கு திசையை ஆளக்கூடிய கிரகம் புதன் மற்றும் குபேரன். இந்த திசை தான் ஒருவரின் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் வழங்கக்கூடியதாக இருக்கிறது. புதன் ஆள்வதால் ஒருவருக்கு புத்திசாலித்தனம், நற்சிந்தனை, அறிவு, கல்வி மற்றும் செல்வத்தின் திசையாக மங்களகரமானதாக கருதப்படுக்க்றது. வடக்கு திசையில் காலி இடத்தை விட்டு வீட்டை கட்டுவதன் மூலம் உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சியும், செழிப்பும் சேரும்.

தெற்கு திசை

தெற்கு திசையை ஆளக்கூடிய கிரகம் செவ்வாய் மற்றும் எமன். இந்த திசையான ஒருவருக்கு வெற்றி, புகழ, பொறுமை, நிலை தன்மை, வீடு, மனை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. தந்தையின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும் திசை. தெற்கு திசையை எந்தளவுக்கு கவனமாக பராமரிக்கிறோமோ அந்தளவுக்கு நற்பலன் கிடைக்கும்.

கோண திசைகள்: அதிதேவதைகள் மற்றும் பலன்கள்

தென் கிழக்கு திசை (அக்னி மூலை)

வீட்டின் சுக்கிரனும், அக்னி தேவதைகள் ஆளக்கூடிய திசையாக விளங்குகிறது. இந்த திசையை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் வீட்டின் உணவு பற்றாக்குறை இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் சிறப்பாக தூக்கம் கிடைக்கும். தென்கிழக்கு திசையில் நிலத்தடி நீர் தொட்டி வைப்பது நல்லதல்ல. உடல்நல குறை ஏற்படும்.

தென்மேற்கு திசை (பித்ரு திசை)

தென்மேற்கு திசையை ஆளக்கூடிய அதிபதிகள் ராகு மற்றும் நைருதி எனும் அரக்கன். இந்த திசையான பேய்கள், கெட்ட சக்தி, கெட்ட செயல், நபர்களை குறிக்கக்கூடிய திசையாகும். எனவே இந்த திசையை ஒரு போதும் காலியாக வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

வடமேற்கு திசை (வாயு மூலை)

வடமேற்கு திசையானது சந்திரன் மற்றும் பிரம்ம பாகமென்னும் ஆகாய பாகத்தினை காக்கிறது. இந்த திசையானது நட்பு, பகைமையைக் குறிக்கிறது. ஒருவரின் மன வளர்ச்சியை குறிக்கக்கூடிய திசையாகும். இந்த திசையில் ஏதேனும் ஒரு வகை குறைபாடு இருந்தால் அவருக்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

வடகிழக்கு திசை (ஈசான்ய மூலை)

மிகவும் சுப கிரகம் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான் ஆளும் மூலை தான் வடகிழக்கு திசை. இந்த திசையானது ஒருவருக்கு அறிவு, பொறுமை, விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் தைரியத்தை வழங்கக்கூடியது. இந்த திசையை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் முடிந்தளவு கட்டுமான வேலைகளை குறைவாக செய்வது நல்லது. இந்த பகுதி தாழ்வாக இருப்பது நல்லது. ஈசான்ய மூலை சிறப்பாக இருப்பின் அவருக்கு ஆன்மிக, மன அமைதி, நிதி நிலையில் செழிப்பு நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விளக்கமாறு, கழிப்பறை, கழிவுநீர் தொட்டி, குப்பைத் தொட்டி உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் பின்பற்றுவதற்குமுன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள்

  • கிழக்கு: ஆரோக்கியம், ஞானம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டம். திறந்த வெளி இருப்பது நலம்.
  • மேற்கு: வெற்றி, மரியாதை, நல்ல எதிர்காலம். தாழ்வாகவோ, குறைபாடு உள்ள பகுதியாகவோ இருக்கக்கூடாது.
  • வடக்கு (குபேர மூலை): புத்திசாலித்தனம், கல்வி, செல்வம் மற்றும் மகிழ்ச்சி. காலி இடம் விடுவது சிறப்பு.
  • தெற்கு: வெற்றி, புகழ், பொறுமை, நிலைத்தன்மை. கவனமாக பராமரிப்பது முக்கியம்.
  • தென் கிழக்கு (அக்னி மூலை): உணவு பற்றாக்குறை இருக்காது, ஆரோக்கியம், நல்ல தூக்கம். நிலத்தடி நீர் தொட்டி தவிர்க்கவும்.
  • தென்மேற்கு (பித்ரு திசை): எதிர்மறை சக்திகள். ஒருபோதும் காலியாக வைக்கக்கூடாது.
  • வடமேற்கு (வாயு மூலை): நட்பு, பகைமை, மன வளர்ச்சி. குறைபாடு இருந்தால் எதிரிகள் அதிகரிக்கலாம்.
  • வடகிழக்கு (ஈசான்ய மூலை): அறிவு, பொறுமை, விவேகம், மன அமைதி, நிதி செழிப்பு. சுத்தமாக வைத்திருப்பது அவசியம், கனமான கட்டுமானங்கள் தவிர்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

வாஸ்து சாஸ்திரத்தில் பொதுவாக 4 முக்கிய திசைகளும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு), 4 கோண திசைகளும் (வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு) என மொத்தம் 8 திசைகள் குறிப்பிடப்படுகின்றன.

ஈசான்ய மூலை (வடகிழக்கு திசை) குரு பகவானால் ஆளப்படுகிறது. இது அறிவு, பொறுமை, விவேகம், புத்திசாலித்தனம், மன அமைதி மற்றும் நிதி செழிப்பு ஆகியவற்றை வழங்கும் திசையாகும். எனவே, இந்த திசையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

தென்மேற்கு திசையானது ராகு மற்றும் நைருதி எனும் அதிபதிகளால் ஆளப்பட்டு, எதிர்மறை சக்திகளைக் குறிக்கிறது. எனவே, இந்த திசையை ஒருபோதும் காலியாக வைக்கக்கூடாது. கனமான பொருட்களை வைப்பது அல்லது படுக்கையறை அமைப்பது போன்ற நல்ல திட்டமிடலுடன் பயன்படுத்த வேண்டும்.

Our Other Services