தங்கம் மற்றும் செல்வம் வீட்டில் பெருக, ஒரு எளிய ஆனால் சக்தி வாய்ந்த ஆன்மீக பரிகாரத்தை இந்த பதிவில் காண்போம். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வீட்டில் பணம் மற்றும் தங்கம் சேர்வதற்கான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரம் மூலம் உங்கள் பண வரவு அதிகரிக்கும் என்பது உறுதி.
வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பண வரவு தடையில்லாமல் இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. இன்று தங்கம் விற்கும் விலைக்கு தங்கத்தை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் தான் நடுத்தர மக்கள் இருக்கிறார்கள். ஆனால் தங்கம் எவ்வளவு விலை விற்றாலும் அதை சிறிது சிறிதாக வாங்கும் அளவிற்காவது பணம் வந்து கொண்டே இருந்தால், தங்கம் வாங்கும் ஆசை நிறைவேறும் அல்லவா? அப்படி வீட்டில் பண வரவு அதிகரிக்க வீட்டில் ஒரே ஒரு ஆன்மீக பரிகாரத்தை மட்டும் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்தாலே போதும். பரிகாரம் செய்தால் எப்படி வரும், அதுவும் தங்கம் வாங்கும் அளவிற்கு பணம் எப்படி வரும் என்று யோசிக்க வேண்டாம். முழுமையான நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இது பலருக்கும் தெரியாத ஆன்மீக பரிகாரம் ஆகும்.
தங்கம் சேர ஜோதிட முக்கியத்துவம்
பொதுவாக தங்கம், பணம் ஆகியவை சேர வேண்டும் என்றால் அதற்குரிய அதிபதியான லட்சுமி தேவியை தான் வழிபட வேண்டும். அதுவும் லட்சுமி தேவிக்கும், சுகபோக வாழ்க்கைக்கு காரணமான கிரகமான சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் தான் வழிபாடு, பரிகாரம் ஆகியவை செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் தங்கம் சேர வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் முதலில் இருக்க வேண்டும். குரு மற்றும் சுக்கிரனின் அருள் இருந்தால் மட்டுமே தங்கம் சேரும் யோகம் அமையும். அதனால் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில் காலை நேரத்தில், அதாவது குரு ஹோரையில் மிக முக்கியமான பரிகாரத்தை செய்தால் நிச்சயம் தங்கம் உங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதோடு வியாழக்கிழமை என்பது செல்வங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்ற குபேரனுக்குரிய நாளும் ஆகும்.
பரிகாரம் செய்யும் முறை
வியாழக்கிழமை காலை குரு ஹோரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில், வீட்டின் வட கிழக்கு மூலையில் இதை செய்ய வேண்டும். ஒரு வெள்ளி பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழம், ஏழு வெள்ளை மலர்கள், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று, ஒரு வேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, "ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ" என்று மந்திரத்தை குறைந்த பட்சம் 3 முறை சொல்ல வேண்டும். முடிந்தால் 108 முறை சொல்லலாம். அது இன்னும் சிறப்பானதாகும். இந்த மந்திரத்தை சொல்லி, வடகிழக்கு மூலையில் இந்த பாத்திரத்தை வைத்து விடுங்கள். இதே போல் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்யுங்கள்.
வீட்டின் வட கிழக்கு மூலை என்பது குபேரனுக்கும், சிவ பெருமானுக்கும் உரியதாகும். மகாலட்சுமிக்கு செல்வத்திற்கு அதிபதியாகும் வரத்தை அளித்தவரே சிவ பெருமான் தான். அவருக்குரிய திரையில் தெய்வீக ஆற்றல் நிறைந்த வெள்ளி பாத்திரம், எலுமிச்சை, நாணயம், வேப்பிலை ஆகிய பொருட்களை, மகாலட்சுமிக்குரிய மந்திரங்களை சொல்லி வைப்பதால் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்தை செய்ய துவங்கிய 3 வாரங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்படுவதை காண முடியும். இந்த பரிகாரம் வீட்டில் தங்கம் மற்றும் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதை உறுதி செய்யும்.
முக்கிய குறிப்புகள்: தங்கம் சேர
- நேரம்: வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி (குரு ஹோரை).
- இடம்: வீட்டின் வட கிழக்கு மூலை (குபேரனுக்கும் சிவபெருமானுக்கும் உரியது).
- தேவையான பொருட்கள்: வெள்ளி பாத்திரம், ஒரு எலுமிச்சை, ஏழு வெள்ளை மலர்கள், ஒரு ரூபாய் நாணயம், ஒரு வேப்பிலை.
- மந்திரம்: "ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ" (குறைந்தது 3 முறை, 108 முறை சிறப்பு).
- காலம்: தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும்.
- பலன்: 3 வாரங்களிலேயே பண வரவு மற்றும் தங்கம் சேருவதில் மாற்றம் தெரியும்.