விரதம் என்பது வெறும் சடங்கு அல்ல. அது உங்கள் மனதையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கும் ஒரு உன்னத வழி. ஒவ்வொரு வாரமும் அல்லது சிறப்பு நாட்களில் விரதம் இருக்கும்போது, உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, சில வழிமுறைகளை பின்பற்றினால், அது உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தும். இதனால் இறைவனிடம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விரதங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. விரதம் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விதிகள் பற்றி விரிவாகக் காண்போம்.
விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் கடைபிடிக்க வேண்டியவை:
- 1. உங்கள் விரதத்தின் நோக்கம்:விரதம் எதற்காக இருக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு (உதாரணமாக, முருகப்பெருமானுக்கு) இந்த விரதத்தை அர்ப்பணியுங்கள். ஒரு பிரார்த்தனை அல்லது சங்கல்பம் செய்யுங்கள். தெளிவான மனது ஆன்மீக பலன்களைத் தரும். நீங்கள் எந்தக் கடவுளுக்காக விரதம் இருக்கிறீர்களோ, அந்த கடவுளின் பெயரைச் சொல்லி, இந்த விரதத்தை நான் உங்களுக்காக இருக்கிறேன் என்று மனதார சொல்லுங்கள்.
- 2. விரத விதிமுறைகளை அறிதல்:ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான விரத முறைகள் உள்ளன. உதாரணமாக, சிவன் விரதம் துர்கா விரதத்திலிருந்து வேறுபடலாம். முருகப்பெருமானுக்கு சஷ்டி விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பிட்ட சடங்குகள், நேரங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். எனவே, நீங்கள் எந்தக் கடவுளுக்கு விரதம் இருக்கிறீர்களோ, அந்த விரதத்தின் விதிமுறைகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
- 3. விரதம் முடித்த பிறகு உண்ணும் உணவு:விரதம் முடித்த பிறகு, சாத்வீக உணவுகளை உண்ணுங்கள். விரதம் முடித்ததும் காரமான, பதப்படுத்தப்பட்ட அல்லது அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். பழங்கள், பால் அல்லது வீட்டில் சமைத்த எளிய உணவுகளை உண்ணுங்கள். இது உங்கள் உடலுக்கும், விரதத்தின் புண்ணியத்திற்கும் நல்லது.
- 4. மந்திர உச்சரிப்பு மற்றும் பக்திப் பாடல்கள்:விரதம் இருக்கும் நாள் முழுவதும், கடவுளின் மந்திரங்களை சொல்லுங்கள். "மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் அல்லது பக்தி பாடல்களைக் கேட்பதன் மூலம் தெய்வத்துடன் இணைந்திருங்கள். இது உங்கள் கவனத்தை வலுப்படுத்துகிறது. மன அமைதியையும் தருகிறது". முருகன் ஆலயங்கள் சென்று வழிபடுவதும், தமிழ் பக்திப் பாடல்களைக் கேட்பதும் சிறப்பு.
- 5. அதிகாலையில் குளித்து தியானம் செய்தல்:அதிகாலையில் குளித்து தியானம் செய்வது ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் மந்திரங்களுக்கு அமைதியான சூழலை உருவாக்குகிறது. இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலை மேம்படுத்தும்.
- 6. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேச்சுகளைத் தவிர்த்தல்:விரத நாட்களில் எதிர்மறை எண்ணங்களையும், புறணி பேசுதல், வாக்குவாதங்கள் மற்றும் கடுமையான வார்த்தைகளையும் தவிருங்கள். நேர்மறை எண்ணங்கள் மற்றும் அமைதியான மனநிலை தெய்வீகத்துடனான உங்கள் தொடர்பை ஆழமாக்க உதவுகிறது.
- 7. இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்தல்:உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யுங்கள். "உணவு, பணம் அல்லது நேரத்தை தேவைப்படுபவர்களுக்குக் கொடுங்கள். இது ஒரு வகையான சேவையாகும்". இது விரதத்தின் புண்ணிய பலன்களை மேலும் அதிகரிக்கும்.
- 8. தீவிர பிரார்த்தனை மற்றும் தியானம்:கடவுளிடம் மனதார பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள். "அமைதியாக உட்கார்ந்து, ஒரு விளக்கை ஏற்றி, உங்கள் மனதிலிருந்து பேசுங்கள். சில நிமிடங்கள் கூட பல மணிநேர சடங்குகளை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்".
- 9. அதிக உடல் உழைப்பைத் தவிர்த்தல்:"விரதம் உங்களை பலவீனமாக உணர வைக்கலாம். சக்தியைச் சேமித்து, கடினமான வேலை அல்லது உடற்பயிற்சியைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தை விட மன மற்றும் ஆன்மீக நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்". ஆறுபடை வீடுகள் போன்ற ஆலயங்களுக்கு யாத்திரை செல்லும்போது கூட, உடல்நலத்தைப் பேணி விரதம் இருங்கள்.
- 10. நன்றியுடன் விரதத்தை முடித்தல்:விரதத்தை நன்றியுடன் முடியுங்கள். "விரதத்தை முடித்த பிறகு, உங்களுக்கு வழிகாட்டியதற்காகவும், வலிமை அளித்ததற்காகவும் தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் அனுபவத்தைப் பற்றி யோசித்து, வரவிருக்கும் வாரத்திற்கு ஒரு நல்ல எண்ணத்தை மனதில் வையுங்கள்". இந்த விதிகளைப் பின்பற்றி விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
விரதம் என்பது உடல் மற்றும் மனதை சுத்திகரித்து, இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஆன்மீக நடைமுறையாகும். இது சில சமயங்களில் உணவு கட்டுப்பாடு, குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
விரத நாட்களில் அதிகாலையில் நீராடி, தெய்வ மந்திரங்களை உச்சரிப்பது, தியானம் செய்வது, பக்திப் பாடல்களைக் கேட்பது, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது, இயன்றவரை பிறருக்கு உதவுவது போன்ற ஆன்மீகச் செயல்களில் ஈடுபட வேண்டும்.
விரதம் முடித்த பிறகு, தெய்வத்திற்கு நன்றி கூறி, சாத்வீக உணவுகளான பழங்கள், பால் அல்லது வீட்டில் சமைத்த எளிய உணவுகளை உண்ண வேண்டும். காரமான, பதப்படுத்தப்பட்ட அல்லது அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.