சுப காரியங்களுக்கு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும் சரியான கிழமையைப் பின்பற்றுவதன் மூலம் நவகிரகங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். ஜோதிடம் கூறும் இந்த ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கிழமைக்கு ஏற்ற பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவம்
பொதுவாக சுப காரியங்கள் செய்வதற்கு மட்டுமே நல்ல நாள், நேரம் ஆகியவை பார்ப்பது வழக்கமாக உள்ளது. இது தவிர சொத்துக்கள் வாங்குவது, தங்கம், மங்கள பொருட்கள் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு மட்டுமே நாள், கிழமை எல்லாம் பார்க்கிறோம். ஆனால் நாம் அன்றாடம் வாங்கும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு நாளோ, நேரமோ பார்ப்பது கிடையாது.
நமக்கு வசதியான நேரத்தில் அல்லது தேவையான நேரத்தில் உடனடியாக கடைக்கு சென்று வாங்கி விடுகிறோம். ஆனால் அப்படி நாம் சாதாரண பொருட்கள் கூட தவறான நாள், நேரத்தில் வாங்குவதால் நாம் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறோம். இந்து சமயத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு சிறப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் ஒவ்வொரு கிழமையும் நவகிரகங்களில் ஒவ்வொரு கோளுக்கு உரியது என சொல்லப்படுகிறது. அந்தந்த கோளுக்குரிய கிழமையில், அந்த கிழமைக்கும் கோளுக்கும் ஏற்ற பொருட்களை வாங்கி வைப்பதால் அந்த நவகிரகத்தின் ஆசியும், பல விதமான நன்மைகளையும் நாம் பெற முடியும் என ஜோதிடம் கூறுகிறது.
எந்த கிழமையில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?
உங்கள் ஜாதகம் மற்றும் நவகிரகங்களின் ஆசியைப் பெற, ஒவ்வொரு கிழமையிலும் வாங்க வேண்டிய குறிப்பிட்ட பொருட்கள்:
- ஞாயிற்று கிழமை: கண்ணாடி பொருட்கள், கோதுமை பொருட்கள், வண்டி வாகனங்கள் வாங்குவது நல்லது.
- திங்கட்கிழமை: அரிசி, தானியம், மின் சாதன பொருட்கள், பால் பொருட்கள் வாங்குவதால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
- செவ்வாய் கிழமை: நிலம் வாங்குவது, விற்பது, சொத்து தொடர்பான அனைத்து விஷயங்களையும் செய்வதால் வெற்றி உண்டாகும்.
- புதன்கிழமை: வீட்டு அலங்கார பொருட்கள், விளையாட்டு பொருட்கள், கல்வி தொடர்பான பொருட்கள் வாங்குவதால் அது சேர்ந்து கொண்டே இருக்கும்.
- வியாழக்கிழமை: மின் சாதனங்கள், நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகும்.
- வெள்ளிக்கிழமை: கல் உப்பு, சமையல் எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய், கருப்பு எள், மரம் சார்ந்த பொருட்கள் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும்.
- சனிக்கிழமை: தண்ணீர் குவளை அல்லது குடம், பூச்செடிகள், தோட்டம் தொடர்பான பொருட்கள் வாங்குவது நன்மை தரும்.
நவகிரக தானியங்கள் வாங்குவதன் பலன்கள்
பொதுவாகவே அந்தந்த ஒவ்வொரு கிழமையிலும், அந்த நாளுக்குரிய நவகிரகத்திற்குரிய தானியத்தை சிறிதளவாவது வீட்டில் வாங்கி வைப்பதாலும், தானம் அளிப்பதாலும் அந்த கிரகத்தால் ஏற்படும் கெடு பலன்கள் குறைந்து, அந்த கிரகத்தின் ஆசியால் நன்மைகள் அதிகரிக்க துவங்கும். இந்த தமிழ் ஜோதிட ரகசியங்களை பின்பற்றி நன்மை பெறுங்கள்.
- ஞாயிறு: சூரியனுக்குரிய தானியம் கோதுமை
- திங்கள்: சந்திரனுக்குரிய தானியம் அரிசி
- செவ்வாய்: செவ்வாய்க்கு உரிய தானியம் துவரம் பருப்பு
- புதன்: புதனுக்குரிய தானியம் பாசி பயறு
- வியாழன்: வியாழனுக்குரிய தானியம் கருப்பு கொண்டைக்கடலை
- வெள்ளி: சுக்கிரனுக்குரிய தானியம் மொச்சை
- சனி: சனிக்குரிய தானியம் கருப்பு எள்