ஜோதிடத்தில் குறிப்பிடப்படக்கூடிய 12 ராசிகளுக்கும் தனித்துவமான குணநலன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சில தனித்துவமான திறமைகள், செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையை நகர்த்தும். ஒருவரின் செயல்பாடு சிறப்பாக அமைய மூளையின் நுண்ணறிவு திறன் எனும் IQ நிலை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிகள் மிகச் சிறந்த நுண்ணறிவுடன், நுட்பமாகச் செயல்படுவார்கள் என தமிழ் ஜோதிடத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.
உயர்ந்த நுண்ணறிவு கொண்ட ராசிகள்
இந்திய ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசியினர் இயற்கையாகவே அதிக நுண்ணறிவு மற்றும் கூர்மையான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் தனித்துவமான குணநலன்கள் இங்கே:
மிதுன ராசி (Gemini)
நுண்ணறிவு, திறமைகளை தரக்கூடிய புதன் பகவான் அதிபதியாகக் கொண்டது மிதுன ராசி. இவர்கள் கற்று அறிந்தவர்களாகவும், ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய நபர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு வெற்றிக்கான வாய்ப்புகளும் இவர்களின் சரியான முடிவு எடுக்கும் திறன் மூலம் கிடைக்கும். எந்த செயலை செய்தாலும் திட்டமிட்டு, நிதானமாக செய்து வெற்றி அடைவார்கள். 12 ராசிகளிலும் நுண்ணறிவுடன் இருக்கக்கூடிய முதன்மை ராசிகளில் இவர்கள் தான். இவர்களின் புத்திசாலித்தனம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கும்.
விருச்சிக ராசி (Scorpio)
செவ்வாய் பகவான் ஆளக் கூடிய விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கைக்குக் குறை இருக்காது. இவர்களின் வேகம் மற்றும் விவேகத்துடன் ஆன செயல்பாடு இவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய உறுதுணையாக அமையும். இவர்களின் சிறப்பான செயல்பாட்டால் பணியிடத்தில் உயர்பதவிகளை அடைகின்றனர். விருச்சிக ராசியினர் தங்களின் பேச்சுத்திறன், பிறரிடம் பழகும் விதம் காரணமாக மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் பிடிப்பார்கள். இவர்களின் ஆழ்ந்த பார்வை மற்றும் பகுப்பாய்வு திறன் வியப்பளிக்கும்.
மகர ராசி (Capricorn)
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு முன்னறிவித்திறன் சிறப்பாக இருக்கும். சனி பகவான் ஆளக்கூடிய இந்த ராசி சேர்ந்தவர்கள் குழந்தை பருவத்தில் இருந்து பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய மகர ராசி சேர்ந்தவர்கள் சமூகத்தைச் சிறப்பான மதிப்பை பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் தங்களின் இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ற வகையில் செயல்படுவார்கள். அதனால் விரைவாக வெற்றி அடைகின்றனர். இவர்களின் நடைமுறை அணுகுமுறை மற்றும் நிலையான உழைப்பு அவர்களை புத்திசாலிகளாக்கும்.
கும்ப ராசி (Aquarius)
கும்ப ராசி சேர்ந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள். இதிலும் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவார்கள். எப்போதும் புதிய யோசனைகளுடன் தங்களின் வேலைகளை அணுகுவார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுகின்றனர். அனைவரையும் போல் இல்லாமல், தனித்துவமாக சிந்தித்து செயலில் வெற்றி காண்பார்கள். இவர்களின் பகுத்தறிவு மற்றும் விமர்சன சிந்தனை திறன் ஜோதிட ரீதியாக பாராட்டப்படுகிறது.
முடிவுரை
ஒவ்வொரு ராசியும் அதன் தனித்துவமான பலங்களைக் கொண்டிருந்தாலும், மிதுனம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசியினர் குறிப்பாக உயர்ந்த நுண்ணறிவு மற்றும் கூர்மையான சிந்தனைத் திறன் கொண்டவர்களாக தமிழ் ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த ராசிக்காரர்கள் சவால்களை திறம்பட எதிர்கொண்டு வாழ்வில் சிறப்பான வெற்றிகளை அடைவார்கள்.