Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

12 ராசிகளுக்கும் உரிய முருகன் மந்திரங்கள்

முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் வளம் பெற, உங்கள் ராசிக்கு ஏற்ற முருகன் மந்திரங்களை அறிந்து, தினமும் உச்சரிக்கும் வழிமுறைகளை இந்த வழிகாட்டியில் காண்போம். ஜோதிடம் கூறும் இந்த எளிய வழிமுறை மூலம் கந்தனின் அருளைப் பெற்று அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

முருகப் பெருமான் அருளைப் பெற

முருகப் பெருமான் பலருக்கும் பிடித்த இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். முருகப் பெருமான் இஷ்ட தெய்வமாக இல்லா விட்டாலும் திருமணம், குழந்தை, வேலை, வெற்றி, தைரியம் ஆகியவை வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக முருகப் பெருமானை வழிபடுவது அவசியம். முருகன் அருளைப் பெற, ராசிக்கு ஏற்ற முருகன் மந்திரங்கள் சொல்லி வழிபடுவது மிகச் சிறப்பு. இது ஜோதிடம் சார்ந்த ஒரு வழிகாட்டுதல். முருகப் பெருமான் ஆறு திருமுகங்களையும், பன்னிரு திருக்கரங்களையும் உடையவர். அதனால் இவருக்குள் 27 நட்சத்திரங்களும், அந்த 27 நட்சத்திரங்களுக்குள் 12 ராசிகளும் அடக்கம் என்பார்கள். அதனால் தான் எந்த வினையாக இருந்தாலும் கந்தனின் திருவடிகளை பற்றி, சரணடைந்தால் அவர்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது.

12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்குரிய முருக மந்திரங்களை தினமும் 6, 12, 21, 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் தினமும் சொல்லி வந்தால் முருகப் பெருமானின் அருளும், அனைத்து நலன்களும் கிடைக்கும். வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறும். இந்த மந்திரங்களை நெய் விளக்கேற்றி வைத்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், முருகன் சன்னதியிலும் அமர்ந்து சொல்வது சிறப்பு. சஷ்டி, கிருத்திகை, விசாகம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இந்த மந்திரத்தை சொல்ல துவங்குவது மிகவும் விசேஷமானதாகும். வளர்ச்சி, முன்னேற்றம் வேண்டும் என்பவர்கள் வளர்பிறையும், பிரச்சனைகள், துன்பங்கள் தீர வேண்டும் என்பவர்கள் தேய்பிறையில் இந்த மந்திரத்தை சொல்ல துவங்கலாம்.

தங்களின் ராசிக்குரிய மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் மனதில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை காண முடியும். இந்த மந்திரங்களை சொல்லுவதற்கு நேரம், காலம் என எதுவும் கிடையாது. உங்களுக்கு எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது எல்லாம் சொல்லலாம். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லலாம். காலை, இரவு நேரங்களிலும், பயணத்தின் போதும், நடக்கும் போதும் கூட இந்த மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருப்பது சிறப்பு. இதனால் வரும் ஆபத்துக்கள், துன்பங்களில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

12 ராசிகளுக்கான முருகன் மந்திரங்கள்

உங்கள் ராசிக்கு ஏற்ற முருகன் மந்திரத்தை அறிந்து, தினமும் உச்சரித்து வாழ்வில் வளம் பெறுங்கள்:

  • மேஷம் ஓம் ஷண்முகா போற்றி
  • ரிஷபம் ஓம் கதிர்வேலா போற்றி
  • மிதுனம் ஓம் முருகா போற்றி
  • கடகம் ஓம் குகனே போற்றி
  • சிம்மம் ஓம் மயில் வாகனனே போற்றி
  • கன்னி ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
  • துலாம் ஓம் குமார வேலவா போற்றி
  • விருச்சிகம் ஓம் சேவற்கொடியோனே போற்றி
  • தனுசு ஓம் தண்டாயுதபாணியே போற்றி
  • மகரம் ஓம் சுப்ரமண்யா போற்றி
  • கும்பம் ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
  • மீனம் ஓம் சூரனை வென்ற குமாரா போற்றி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முருகப் பெருமானின் அருளைப் பெற விரும்பும் அனைவரும், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, வெற்றி, தைரியம் வேண்டுபவர்கள் இந்த ராசிக்குரிய முருகன் மந்திரங்களை உச்சரிக்கலாம்.

12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்குரிய முருக மந்திரங்களை தினமும் 6, 12, 21, 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் சொல்லி வரலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் மனதிற்குள் உச்சரிப்பதும் சிறப்பு.

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், முருகன் சன்னதியிலும் அமர்ந்து சொல்வது சிறப்பு. சஷ்டி, கிருத்திகை, விசாகம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்குவது மிகவும் விசேஷமானது.

Our Other Services