Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

அமாவாசை தானங்கள்: முன்னோர்களின் ஆசி பெறும் வழிகள்

அமாவாசை தினமானது முன்னோர்களின் ஆசியைப் பெற்று, பித்ரு தோஷத்தைப் போக்க உதவும் ஒரு புனிதமான நாளாகும். இது ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் செய்யப்படும் தானங்கள் நமக்கு மட்டுமல்லாமல், நம்முடைய சந்ததியினருக்கும் நன்மைகளையும், செல்வ வளத்தையும் அளிக்கும். துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவதற்குரிய இந்த அற்புதமான தமிழ் மாத அமாவாசை நாளில் செய்ய வேண்டிய முக்கியமான தானங்கள் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

ஆவணி அமாவாசை சிறப்புகள்

அமாவாசை திதி என்பது முன்னோர்களை கவுரவித்து, அவர்களின் ஆன்மாக்களை சாந்தப்படுத்தி, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய புனிதமான நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், தானம், சிரார்த்தம் ஆகியவற்றையும் செய்து வழிபடுபவர்களுக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்றும், இதனால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என நம்பப்படுகிறது. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய பட்சத்திற்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மாத அமாவாசை ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

ஆவணி அமாவாசையில் பெண்கள் செய்ய வேண்டியவை

ஆவணி மாத அமாவாசையில் பெண்கள் விரதம் இருந்து பித்ரு தேவதைகளையும், 64 யோகினி தேவதைகளையும் வழிபடுவது வழக்கம். இப்படி வழிபடுவதால் வாழ்வில் அளவில்லாத நன்மைகள் நடைபெறும். தங்களின் கணவர் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பது உண்டு. வழக்கமான அமாவாசை சடங்குகளுடன் கூடுதலாக 5 முக்கியமான பொருட்களை தானமாக அளிப்பதால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும். முடிந்தவர்கள் இந்த 5 பொருட்களையும் தானம் அளிக்கலாம். முடியாதவர்கள் இவற்றில் எது முடியுமா அதை தானமாக அளித்தானலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து, முக்தியை பெறும் என நம்பப்படுகிறது.

அமாவாசை தான பலன்கள்

ஆவணி அமாவாசையில் அளிக்கப்படும் தானம் மிகப் பெரிய புண்ணியத்தை பெற்றுத் தரும். இந்த பொருட்கள் முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு முக்தியை தருவது மட்டுமின்றி, நம்முடைய வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம், செல்வ வளம் ஆகியவற்றை பெற்றுத் தரும். ஆவணி அமாவாசையில் என்னென்ன பொருட்களை தானமாக அளித்தால் மிகப் பெரிய புண்ணிய பலனும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி அமாவாசையில் தானம் அளிக்க வேண்டிய முக்கியமான 5 பொருட்கள்

  • 1. தானியங்கள்: அரிசி, கோதுமை போன்ற தானியங்களை ஆவணி அமாவாசை நாளில் தானம் அளிப்பது சிறப்பு. அந்தணர்கள் அல்லது ஆதரவு இல்லாதவர்கள், ஏழைகளுக்கு இவற்றை தானம் அளிப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் நாம் பித்ருதோஷத்தில் இருந்து விடுபடுவதுடன் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும் பெற முடியும்.
  • 2. நெய்: அமாவாசை நாளில் அருகில் உள்ள கோவிலுக்கு நெய் வாங்கி தானமாக கொடுக்கலாம். கோவிலில் விளக்கேற்றுவதற்கு தேவையான நெய் தானமாக கொடுக்கலாம். விளக்கில் நெய் நிரப்பி கொடுப்பது இன்னும் சிறப்பானது. அதே போல் அமாவாசை அன்று எண்ணெய் தானம் கொடுப்பது நல்லது. இதை தானம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இதனால் செல்வ வளம் பெருகும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • 3. அன்னதானம்: கோவில்களுக்கு தானியங்கள், வெல்லம், பருப்பு வகைகள் போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு. ஆதரவு அற்றவர்களுக்கு, ஏழைகளுக்கும் உணவுப் பொருட்களையோ அல்லது சமைத்த உணவுகளையோ தானம் செய்யலாம். தானத்தில் சிந்த தானமாக அன்னதானம் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு அளித்து அவர்களின் பசியை போக்குவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். அதோடு நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வறுமை என்பது ஏற்படாது.
  • 4. ஆடைகள்: அமாவாசை நாளில் மானத்தை காக்கும் ஆடை தானம் செய்வது சிறப்பானதாகும். பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளிப்பது சிறந்தது. பயன்படுத்திய ஆடைகளை விட பயன்படுத்தாத ஆடைகளை தானமாக அளிப்பதால் முன்னோர்களின் அருள் கிடைக்கும். அந்தணர்களுக்கு வெள்ளை நிற தைக்காத துணிகளை தானமாக அளிப்பது முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த வழியாகும்.
  • 5. ஆன்மிக புத்தகங்கள்: பகவத் கீதை, கருட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற புனிதமான ஆன்மிக நூல்களை தானமாக கொடுப்பது மிகவும் உன்னதமானதாகும். இது முன்னோர்களின் ஆன்மாக்களை பிறவிப் பிணியில் இருந்து விடுபிடித்து, மோட்சத்தை தரும். முன்னோர்களின் நிறைவான ஆசி கிடைப்பதால் வெற்றி, செல்வ வளம், அமைதி, வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அமாவாசையில் செய்யப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்கும். இது நம்முடைய சந்ததிக்கே நன்மைகள், வளர்ச்சி, செல்வ வளம் ஆகியவற்றை வழங்கும். துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவதற்கு வழிவகுக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய பட்சத்திற்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யும் தானங்கள் மற்றும் வழிபாடுகள் அளவற்ற நன்மைகளை வழங்கும்.

ஆவணி மாத அமாவாசையில் பெண்கள் விரதம் இருந்து பித்ரு தேவதைகளையும், 64 யோகினி தேவதைகளையும் வழிபடுவது வழக்கம். இது கணவர் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக செய்யப்படுகிறது. மேலும், 5 முக்கியமான பொருட்களை தானமாக அளிப்பது சிறப்பு.

தானியங்கள் (அரிசி, கோதுமை), நெய், அன்னதானம், ஆடைகள் (பச்சை, சிவப்பு, மஞ்சள்), மற்றும் ஆன்மிக புத்தகங்கள் (பகவத் கீதை, கருட புராணம்) ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். இவை முன்னோர்களின் ஆசியைப் பெற்று, செல்வ வளத்தையும் அமைதியையும் தரும்.

Our Other Services