Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சிரிப்பின் பின்னே வலியை மறைக்கும் ராசிகள்

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும்போது, நம் மன வலிமையை இறைவன் முருகப்பெருமான் அருளோடு பலப்படுத்திக் கொள்கிறோம். ஜோதிடத்தின் பார்வையில், சில ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து, சிரிப்பின் பின்னே வலியைப் புதைத்துக் கொள்கிறார்கள். அப்படியான ராசிகளைப் பற்றி இந்த தமிழ் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

உணர்வுகளை மறைக்கும் ராசிகள்

நம்முடன் நீண்ட நாட்களாகப் பழகக்கூடிய நபர்களைப் பற்றி நாம் அதிகமாக அறிந்து வைத்திருப்போம். அவர்களில் யார் நம்முடைய மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்கிறார் என்பதைப் பல நேரங்களில் நாம் அறிந்து கொள்வதும் உண்டு. ஆனால் சிலர் போலியாகப் பழகுவதுண்டு. அதேபோல நம்முடன் நட்பு பாராட்டுவது போன்ற போலியான புன்னகையை நம் முன் காட்டுவதுண்டு. அதேபோல சில ராசிக்காரர்கள் என்னதான் துன்பத்தில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் போலியாகப் புன்னகைப்பதும் உண்டு. அப்படிப்பட்ட 4 ராசிகள் யார் எனத் தெரிந்து கொள்வோம்.

துலாம் ராசி (Libra)

துலாம் ராசி சேர்ந்தவர்கள் தங்களின் உறவுகளில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பேணுவதற்காக முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவார்கள். அதே சமயம் மற்றவர்களின் பிரச்சனைகளை குறித்து பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. குடும்ப உறவில் தன் துணையின் உறவில் அமைதியும், நெருக்கமும் இருக்க பல முயற்சிகளை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எந்த ஒரு சச்சரவுகளையும் தவிர்க்க பாடுபடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிலரின் செயல்பாடு மன வருத்தத்தையும் அல்லது காயத்தை ஏற்படுத்தினாலும், போலியான புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.

விருச்சிக ராசி (Scorpio)

விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் ரகசியமான மற்றும் கவர்ச்சியான ஆளுமைத் திறன் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் தங்களின் உணர்வுகளைப் பெரிய அளவில் வெளிக்காட்டுவதில்லை. இதன் காரணமாக விருச்சிக ராசியினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் எனப் பிறர் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து நடிக்கக் கூடியவர்கள். இவர்கள் மனதில் எரிமலை வெடித்தாலும், சோகமான விஷயங்கள் நடந்தாலும் அதை வெளிப்படுத்தாமல், சிறு சிறு போலியான புன்னகையுடன் நகர்ந்து விடுவார்கள்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்த தந்தை ராசிகளின் முன்னே! - இது ஒரு ராசி பலன் தகவலின் ஒரு பகுதி.

மகர ராசி (Capricorn)

மகர ராசி சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் லட்சியத்துடனும், சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உழைக்கக் கூடியவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக வாழ்க்கையில் பல நேரங்களில் உலக இன்பங்களை தியாகம் செய்கின்றனர். எவ்வளவு சிரமம் வந்தாலும் பிறரிடம் நாடகம் போட மாட்டார்கள். மேலும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி பிறரின் அனுதாபத்தைத் தேட விரும்ப மாட்டார்கள். இதன் காரணமாக சோகத்தை மறைத்து, முகத்தில் புன்னகை எனும் முகமூடி போட்டு வாழ்வார்கள்.

மீன ராசி (Pisces)

மீன ராசியினர் மிகவும் உணர்வு மற்றும் ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆழமான சிந்தனை மற்றும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். மீன ராசியினர் தங்களைச் சுற்றி உள்ள நபர்களிடம் அன்பும், அரவணைப்பும் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலான நேரத்தில் கற்பனை உலகில் இருப்பார்கள். வாழ்க்கையில் கவலை அல்லது பிரச்சினைகள் என என்னதான் புயல் வீசினாலும், அவற்றை வெளிக்காட்டாமல், பிறரிடம் போலியாகப் புன்னகைப்பது உண்டு.

முக்கிய அம்சங்கள்

  • துலாம்: உறவுகளில் நல்லிணக்கம் பேண போலி புன்னகை.
  • விருச்சிகம்: உணர்வுகளை வெளிக்காட்டாத ரகசியமான ஆளுமை.
  • மகரம்: லட்சியத்தை அடைய சோகத்தை மறைக்கும் குணம்.
  • மீனம்: ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கற்பனை உலகில் வாழ்தல்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் துன்பத்தையும், சோகத்தையும் மறைத்து போலியான புன்னகையுடன் வாழக்கூடியவர்கள்.

துலாம் ராசி சேர்ந்தவர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பேணுவதற்காகவும், பிறரிடம் சச்சரவுகளைத் தவிர்க்கவும், மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் போலியாகப் புன்னகைக்கின்றனர்.

Our Other Services