Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கங்கை தசரா 2025: ராசிவாரியான பரிகாரங்கள் மற்றும் நன்மைகள்

பாவங்களை போக்கும் நதியான கங்கை நதியில் நீராடுவது மற்றும் பரிகாரங்களை செய்வது, உங்கள் பாவங்களை போக்குவதோடு - மகிழ்ச்சி, செல்வம் மற்றும் மன அமைதியையும் அளிக்கும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்காரர்களும் இந்த கங்கை தசரா தினத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள பெறும் நன்மைகள் என்ன? ராசிக்கு ஏற்றபடி அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.

ராசிவாரியான கங்கை தசரா பரிகாரங்கள்

மேஷ ராசி (Mesham)

மேஷ ராசிக்காரர்களின் பாவங்களை போக்கும் ஒரு தினமாக இந்த கங்கை தசரா தினம் பார்க்கப்படுகிறது. தங்களின் பாவங்களை போக்க, மேஷ ராசிக்காரர்கள் கங்கை நதியில் குளித்து, புனித நதியில் நீராட வேண்டும். புனித நீராடலுக்கு பின் ஏழைக்கு எள் தானம் செய்யலாம். இதேப்போன்று இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்!

ரிஷப ராசி (Rishabam)

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சிறப்பு தினம், பண கஷ்டத்தை போக்கும் தினமாக உள்ளது. இந்த புனித தினத்தில், கங்கை நதியில் குளித்து பின், உங்கள் முன்னோர்களுக்கு பண உதவி செய்வது, பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க உதவும். மேலும், குடும்பத்தில் மன அமைதி மற்றும் சாந்தம் நிலவும்.

மிதுன ராசி (Midhunam)

உங்கள் லட்சிய பாதையில் உண்டாகும் தடைகளை போக்கும் தினமாக இந்த கங்கா தசரா பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில், கங்கா தேவியை வணங்கிய பின், இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்கலாம். இதன் மூலம், உங்கள் வாழ்வில் உண்டான கஷ்டங்கள் விலகுவதோடு, எடுக்கும் முயற்சியில் உண்டாகும் தடைகளும் நீங்கும்.

கடக ராசி (Kadagam)

கடக ராசிக்காரர்களின் கிரக தோஷத்தை போக்கும் பரிகார நாளாக இந்த கங்கை தசரா தினம் பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில், கங்கா தேவிக்கு மஞ்சள் பழங்களை படைப்பது மற்றும் பறவைகளுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைப்பது, கிரக தோஷங்களை போக்கும் என நம்பப்படுகிறது.

சிம்ம ராசி (Simmam)

தொழிலில் உண்டாகும் தடையை போக்கும் தினமாக இந்த சிறப்பு தினம், சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைகிறது. கங்கை தசரா தினத்தில் கங்கையில் புனித நீராடி பின், ஏழைகளுக்கு செம்பு பாத்திரங்களை தானமாக அளிக்க, தொழிலில் உண்டாகும் தடைகள் நீங்கும். மேலும், குடும்பத்தில் உண்டாகும் மன கஷ்டங்களும் நீங்கும்.

கன்னி ராசி (Kanni)

கன்னி ராசிக்காரர்களுக்கு திருமண தடை போக்கும் ஒரு தினமாக இந்த கங்கா தினம் பார்க்கப்படுகிறது. கங்கை தசரா தினத்தில், கங்கா தேவியை வணங்குவது மற்றும் ஏழைகளுக்கு வில்வ இலைகளை தானம் செய்வதன் மூலம், திருமணத்தில் உண்டாகும் தடைகளை போக்கலாம்.

துலாம் ராசி (Thulaam)

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கங்கா தினம், வீட்டில் அமைதி காண வழிவகை செய்கிறது. கங்கை தசரா தினத்தில் கங்கை நதியில் புனித நீராடி பின், ஏழை - எளிய மக்களுக்கு அரிசியை தானமாக அளிப்பது வீட்டில் உள்ள மன கஷ்டங்களை போக்கி மன அமைதிக்கான வழியை காண உதவி செய்யும்.

விருச்சிக ராசி (Viruchigam)

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சிறப்பு தினத்தில், கங்கை நதியில் நீராடி பின் கங்கை தேவியை நெய் தீபம் ஏற்றி வழிபட, அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வருவதோடு, செய்யும் காரியங்களில் உண்டாகும் தடைகளும் நீக்கும்.

தனுசு ராசி (Dhanusu)

தனுசு ராசிக்காரர்களுக்கு மன அமைதி அளிக்கும் ஒரு தினமாக இந்த கங்கை தசரா பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தில் இவர்கள் கங்கை தேவியை வழிபட்டு பின், "ஓம் நம சிவாய கங்காயை நம" எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க, ஆன்மீகம் சார்ந்த ஆதரவு பெறுவதோடு, மன அமைதிக்கான வழியையும் காண்பார்கள்.

மகர ராசி (Makaram)

செய்யும் தொழிலில் வெற்றி காண உதவும் ஒரு நாளாக இந்த கங்கா தசரா தினம், மகர ராசிக்காரர்களுக்கு அமைகிறது. வியாபார தடைகளை போக்க, இந்த சிறப்பு தினத்தில் சிவபெருமானையும், கங்கா தேவியையும் சேர்த்து வணங்குங்கள். கங்கை நதியில் மூன்று முறை மூழ்கி எழுந்திருங்கள்.

கும்ப ராசி (Kumbam)

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கங்கை தசரா தினம், குடும்ப கஷ்டங்களை போக்கும் ஒரு தினமாக அமைகிறது. இந்த சிறப்பு தினத்தில், கங்கை நதிக் கரையில் தீபம் ஏற்றி, கங்கா தேவியை வழிபடுங்கள். இந்த பரிகாரம், உங்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதோடு, செய்யும் தொழிலில் உண்டாகும் தடைகளையும் போக்கும்.

மீன ராசி (Meenam)

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சிறப்பு தினம், ஆசைகளை தீர்க்கும் நாளாக அமைகிறது. கங்கா தசரா தினத்தில் கங்கை நதியில் குளித்து முடித்து பின், வழிப்போக்கர்களுக்கு குளிர்ச்சியான நீரை அளிக்கலாம். இந்த புண்ணிய செயல், உங்கள் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கங்கை நதி பூமிக்கு வந்த தினமாக கங்கை தசரா கொண்டாடப்படுகிறது. இது பாவங்களை போக்கும் ஒரு புனித நாளாகும். இந்த நாளில் கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

கங்கை நதியில் குளிப்பது பாவங்களை போக்குவதோடு, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் மன அமைதியையும் அளிக்கும். இது ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல நன்மைகளைத் தரும்.

ஆம், மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கங்கை தசரா அன்று குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்யலாம். தானம் செய்தல், வழிபாடு செய்தல், மந்திரங்கள் உச்சரித்தல் போன்றவை இதில் அடங்கும்.

பண கஷ்டம் நீங்கும், லட்சிய தடைகள் அகலும், கிரக தோஷங்கள் நீங்கும், தொழில் தடைகள் விலகும், திருமண தடைகள் நீங்கும், வீட்டில் அமைதி நிலவும், அதிர்ஷ்டம் பெருகும், மன அமைதி கிடைக்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும், ஆசைகள் நிறைவேறும்.

Our Other Services