மார்க்கெட்டுகளில் விதவிதமான அண்டர் ஐ க்ரீம்கள் விற்கப்பட்டாலும், இயற்கை வழியில் கருவளையங்களைப் போக்க விரும்புபவர்களுக்கு, வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய மற்றும் செலவு குறைவான வைத்தியங்கள் சிறந்த பலனளிக்கும். சரும ஆரோக்கியத்திற்கு ஜோதிடம்360 எப்போதும் வழிகாட்டும்.
1. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை
வழக்கமாகவே கண்ணுக்கு கீழ்வரும் கருவளையத்தைக் குறைக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைப்போம். அதை கருவளையத்தைப் போக்க பயன்படுத்தலாம்.
தேவையான பொருள்கள்:
- வெள்ளரிக்காய் - பாதி அளவு
- கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- வெள்ளரிக்காயைத் துருவியோ அல்லது அரைத்தோ சாறாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதோடு ஃபிரஷ்ஷான கற்றாழை ஜெல்லைக் கலந்து க்ரீம் பதத்துக்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
- இதை தினமும் இரவு படுக்கப் போகும்போது கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தைச் சுற்றி அப்ளை செய்து வர வேண்டும்.
2. உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு ஜூஸில் உள்ள ஸ்டார்ச் ப்ளீச்சிங் பண்புகள் கொண்டது. சருமத்தில் உள்ள கருமை, அதனால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கும். தமிழ் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய வைத்தியம்.
பயன்படுத்தும் முறை:
- உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அந்த சாறை ஐஸ் டிரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள்.
- பிறகு தினமும் காலையில் எடுத்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்துவிட்டு குளிக்கலாம். இரவு தூங்கச் செல்லும்போதும் இதை செய்யலாம்.
3. காபி ஐ மாஸ்க்
காபி தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகச்சிறந்த நன்மைகளைக் கொடுக்கும். காபி பொடி முகத்தில் உள்ள கரும்புகளை நீக்குவது மட்டுமின்றி சருமத்துக்கு மிகச்சிறந்த ஸ்கிரப்பாகவும் இருக்கும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பளபளப்பாக மாற்றும்.
பயன்படுத்தும் முறை:
- காபி பொடியுடன் சிறிது தேன் சேர்த்து அதை கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் அப்ளை செய்து வரவும்.
- சில நாட்களிலேயே கருவளையத்தின் அளவு குறைந்து வருவதைப் பார்க்க முடியும்.
முக்கிய குறிப்புகள்
- இந்த மேற்கண்ட மூன்று முக்கியப் பொருள்களும் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும் பொருள்கள் தான், அதனால் எல்லோரும் பயன்படுத்த முடியும்.
- பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.
- இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்படும் திறன் ஆகியவை தனிநபரின் சருமத்தின் தன்மையைப் பொறுத்தது. தமிழ் சமயம் இதற்கு பொறுப்பேற்காது.