காதுக்குள் தண்ணீர் புகுந்த அனுபவம் உண்டா? குழந்தைகளுக்கு குளிப்பாட்டும் போது காதுக்குள் தண்ணீர் போக அதிக வாய்ப்புண்டு. பெரியவர்களில் நீச்சல் பயிற்சி செய்யும் போதும் காதுக்குள் தண்ணீர் போகும். இதனால் காதுக்குள் அடைப்பு இருப்பது போன்ற உணர்வு, காது சரியாக கேட்காமல் போவது போன்ற நிலையும் அசெளகரியமும் ஏற்படலாம். இப்படி காதுக்குள் நுழைந்திருக்கும் தண்ணீரை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது? அதற்கான எளிய வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். இத்தகைய உடல் ஆரோக்கியம், மன அமைதிக்கு வழி வகுக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்விற்கு, ஜோதிட ஆலோசனை மற்றும் முருகன் ஆலயங்களின் தரிசனம் மன அமைதியை தரும். தமிழ் கலாச்சாரத்தில் முருக வழிபாடு சிறப்பு பெற்றது.
காது மடல்களை மென்மையாக அசைக்கவும்
காதுகளில் தண்ணீர் இருக்கும் போது நீரை வெளியேற்றும் குறிப்புகளை செய்ய வேண்டும். எந்த காதின் பக்கம் தண்ணீர் உள்ளதோ அந்த பக்கமாக தலையை சாய்த்து வைக்கவும். இது தண்ணீர் உள்ளிருந்து வெளியே வர உதவும்.
காதுகளில் தண்ணீர் வெளியே வர காது மடலை பிடித்து, மெதுவாக காதை அனைத்து திசைகளிலும் இழுத்து அசைக்கவும். இது காதின் உள்புறத்தை அசைத்து நீரை வெளியேற்ற உதவும். நீர் முழுமையாக வெளியேற கொட்டாவி விடுவது போன்று செய்து, தாடையை அசைத்து காது மடலை இழுக்கவும்.
குறிப்பு: இந்த நேரத்தில் வலி உணர்வு இருந்தால் காது தொற்று இருக்கலாம்.
உள்ளங்கையை அழுத்தி பிடித்தல்
உள்ளங்கைகளை கொண்டு காதுகளில் இருக்கும் நீரை வெளியேற்றலாம். எந்த காதில் தண்ணீர் உள்ளதோ அந்த பக்கம் தலையை சாய்த்து பக்கவாட்டில் வைத்து உள்ளங்கைகள் காது பகுதியை முழுமையாக மூடும் வகையில் காதை சுற்றி வைக்கவும்.
உள்ளங்கையை அழுத்தி தலையை இலேசாக அழுத்தி தட்டையாக உள்ளங்கையை வைத்து இழுக்கும் போது அது கோப்பை வடிவில் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது காது பகுதியில் இருக்கும் தண்ணீர் வெளியேறும். பிறகு சிறிது நேரம் காதை அதே பகுதியில் வைத்து தலையை சாய்த்து வைக்க வேண்டும். நீர் வடியும்.
ப்ளோ ட்ரையர் கொண்டு நீர் வெளியேற்றுதல்
காது கால்வாயில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற ஃப்ளோ ட்ரையரை பயன்படுத்தலாம். குறைந்த அமைப்பில் ஃப்ளோ ட்ரையரை வைத்து தலையிலிருந்து ஒரு அடி தூரம் தள்ளி வைத்து, காது மடலை மென்மையாக இழுத்து காற்று உள்ளே போகும்படி செய்யவும்.
முக்கிய குறிப்பு: காற்றின் அழுத்தம் அல்லது மோட்டாரிலிருந்து வரும் ஒலி காதில் உள்ள மென்மையான கட்டமைப்புகளை சேதப்படுத்தாமல் இருக்க போதுமான தொலைவில் வைத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
வினிகர் பயன்படுத்தி நீர் வெளியேற்றுதல்
வினிகரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காதில் இருக்கும் பாக்டீரியாக்களை கொல்ல செய்கிறது. மேலும், இது காது மெழுகு மற்றும் பிற அழுக்குகளை உடைத்து வெளியேற்றும்.
காது மேல் நோக்கி இருக்கும் படி தலையை சாய்த்து காதில் சில சொட்டுகள் விடலாம். பிறகு காதின் வெளிப்புறத்தை மெதுவாக தேய்த்து திரவத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். 30 விநாடிகள் கழித்து வெளிப்புற காது பகுதியை சுத்தம் செய்து உலர வைக்கவும். வினிகர் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை இணைத்து ஒரு கரைசலாகவும் பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை: காது தொற்று இருந்தால் இந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.
சூடான ஒத்தடம்
காதுப்பகுதியில் இருக்கும் நீரை வெளியேற்ற சூடான ஒத்தடம் உதவலாம். ஒரு மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, இளஞ்சூடாக இருக்கும் போது காதில் வைத்து எடுக்கவும் (தீக்காயம் அல்லது எரிச்சல் ஏற்படாதவாறு கவனமாக இருக்கவும்).
அந்த இடத்தில் சூடான அமுக்கம் கொண்டு வைத்து எடுத்தால் திசுக்களை தளர்த்தவும், அதில் இருக்கும் அடைப்பை தளர்த்தவும் செய்யும். பிறகு துணியை மடித்து தலையை சாய்த்து படுத்தால் நீர் வெளியேறும்.
காதுகளில் நீர் இருக்கும் போது செய்யக்கூடாதவை
- பருத்தி துணிகள்: காதுக்குள் நீரை வெளியே எடுக்க பருத்தி துணிகள் விட வேண்டாம். துணி உள்ளே போட்டு பயன்படுத்தினால் அது மெழுகு மற்றும் அழுக்குகளை அடைக்கும்.
- கூர்மையான பொருட்கள்: ஊசிகள் போன்ற கூர்மையான பொருள்களை கொண்டு உள் நுழைக்க வேண்டாம்.
- விரல்கள்: காதுகளில் விரல்கள் நுழைக்க வேண்டாம். விரல் நகங்களை கொண்டு கீற வேண்டாம். காது கால்வாய் பகுதியை மென்மையாக கீறினால் கூட அது பாதிக்கலாம்.
- ரசாயனங்கள்: காதுப்பகுதி உள்ளே புண் இருந்தால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு அல்லது சொட்டு மருந்து பயன்படுத்த வேண்டாம்.
இறுதியாக, காது பகுதி உள்ளே தண்ணீர் இருந்தால் எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பதை பார்த்தோம். அதே போன்று காதில் தண்ணீர் இருக்கும் போது என்ன செய்யக்கூடாது என்பதையும் தெரிந்துகொண்டோம். பாதுகாப்பாக கைவைத்தியம் செய்வதும் தேவையெனில் மருத்துவரை அணுகுவதும் காது ஆரோக்கியத்துக்கு நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு Jothidam360 பொறுப்பேற்காது.