இந்த உலகில் பணக்காரன், ஏழை என எதையும் பார்க்காமல் அருள் செய்பவர் மகா விஷ்ணு. உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் அவதாரம் எடுத்து காக்கக் கூடியவர். அவரின் தசாவதாரத்தில் ஒன்றான பகவான் கிருஷ்ணரின் அளப்பரிய அருள் எந்தெந்த ராசிகளுக்கு அதிகமாக இருக்கும் என்பதை ஜோதிடம் 360 இங்கே விளக்குகிறது.
கிருஷ்ண பகவான் மற்றும் அவரது அருள்
பகவான் கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். அதாவது, சந்திர பகவான் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் உச்சமடையக் கூடியவர். இந்த அற்புத நாளில், ஷஷா யோகா, ஹன்ஸ் யோகா, மாளவ்ய யோகா, ருச்சக யோகா மற்றும் பத்ர யோகா என ஐந்து மகா யோகங்கள் கூடியிருந்தன. பக்தர்கள் அவர்களின் மனக்குறையை நினைத்த உடனே அதை நிவர்த்தி செய்ய ஓடோடி வரக்கூடியவர் மகா விஷ்ணு.
அப்படிப்பட்ட கருணை மிக்க பகவான் கிருஷ்ணரின் சிறப்பு அருளைப் பெறும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தையும் பெறுவார்கள்.
கிருஷ்ண பகவானுக்குப் பிடித்த ராசிகள்
ரிஷப ராசி
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று ரிஷபம். நீங்கள் ரிஷப ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், கிருஷ்ண பகவானின் முழு அருள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டத்தின் முழு பலனைப் பெறுவீர்கள். கிருஷ்ணரை முழு பக்தியுடன் வணங்குபவர்களுக்கு மனதில் தனி இடம் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் நிரம்பி வழியும்.
கடக ராசி
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று கடகம். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணரின் அளவற்ற கருணையைப் பெறுவார்கள். இவர்கள் மிகவும் பயபக்தியுடன் கிருஷ்ண வழிபாடு செய்ய, இவர்கள் செய்யும் வேலையில் நம்பிக்கையும், நற்பலனும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பிறகு மோட்சம் அடைவார்கள். கடக ராசி சேர்ந்தவர்கள் கிருஷ்ணர்-ராதா சேர்ந்த புகைப்படம் அல்லது சிலையை பக்தியுடன் வழிபட வேண்டும். ஜோதிடத்தின்படி, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகின்றனர். உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதுடன், செல்வ வளங்களும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும்.
சிம்ம ராசி
கிருஷ்ண பகவானின் அருளால் சிம்ம ராசி சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழுமையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தங்களின் எல்லா முயற்சிகளிலும் சில தடைகள் வந்தாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணரை நினைத்து தினமும் தியானம் செய்வது மிகவும் சிறப்பானது. கிருஷ்ணரை நினைத்து இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படும்போது வெற்றி நிச்சயம்.
துலாம் ராசி
துலாம் ராசி சேர்ந்தவர்கள் கிருஷ்ணரின் அபரிமிதமான ஆசிகளைப் பெறுவார்கள். உங்கள் செயலில் முன்னேற்றமும், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். கிருஷ்ண பகவானின் அருளால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பம் முன்னேற ஒன்றிணைந்து செயல்படுவீர்கள். தினமும் கிருஷ்ண வழிபாடு செய்ய மோசமான விதி பலனாக இருந்தாலும், நல்வாழ்வு பெறுவீர்கள். இங்கு குறிப்பிட்டுள்ள ராசிகளில் ஏதேனும் ஒன்று உங்களுடையது என்றால், இன்று கிருஷ்ண போதனைகளைக் கேட்பதும், படிப்பதும், கிருஷ்ண வழிபாட்டைத் தொடங்குவதும் நல்லது. இதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் விலகி, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
முக்கிய குறிப்புகள்
- ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகள் கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்தமானவை.
- கிருஷ்ணரை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம் கிடைக்கும்.
- ஜோதிட ரீதியாக இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகள் உண்டாகும்.
- தினமும் கிருஷ்ணரை தியானிப்பது அல்லது வழிபடுவது மன அமைதியையும், வளத்தையும் தரும்.