Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மகாலட்சுமியின் பிறப்பு மற்றும் முக்கியத்துவம்

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவி பாற்கடலில் இருந்து தோன்றிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது, பல்வேறு அரிய பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றில் மகாலட்சுமியின் தோற்றமும், விஷ்ணுவுடனான அவரது திருமணமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அற்புத நிகழ்வை நாம் இங்கு விரிவாகக் காணலாம்.

பாற்கடல் கடையும் நிகழ்வும் மகாலட்சுமியின் தோற்றமும்

மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலில் இருந்து தோன்ற என்ன காரணம், லட்சுமி தேவியை விஷ்ணு மணந்ததற்கு என்ன காரணம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருந்தன. இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை எனும் இரண்டாவது கட்டத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கின்றேன். அதனால் மகா விஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

மகாவிஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப்பட வேண்டாம். இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார். அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும் என்றார். இதையடுத்து ஆலோசனை நடந்தது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைவது இயலாதது. அதனால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என விஷ்ணு தெரிவித்தார்.

பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்க மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பு கயிறாகவும் வைத்து கடைந்தனர். கூர்ம அவதாரம் எடுத்து, மேருகிரி மலையை தனது முதுகில் தாங்கி தேவர்களுக்கு உதவினார் மகாவிஷ்ணு. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து ஆயிரம் ஆண்டுகள் பாற்கடலை கடைந்தனர். அப்போது கயிறாக இருந்த வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது.

அப்படி கடலில் திரண்டு வந்த ஆலகால விஷத்தை சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தினார். விஷத்தால் நீலகண்டரானார். கடைசியாக அந்த கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், பல்வேறு பொருட்கள் வெளி வந்தன. சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியன.

பாற்கடலைக் கடைந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பொருளை எடுத்துக் கொள்கின்றனர். அப்படி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதேவியான மகாலட்சுமியை ஆட்கொண்டு அவரை மணம் புரிந்து, மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவாக அருள்பாலிக்கிறார். கௌத்துவ மணியை தான் திருமால் தனது மார்பில் அணிந்திருக்கின்றார்.

இப்படி அலை கடலிலிருந்து தோன்றியதால், மகாலட்சுமிக்கு அலை மகள் என பெயர் வந்தது. தான் பிறந்த வீடு என்பதால் தான் கடல் மற்றும் கடலில் இருந்து கிடைக்கும் உப்பு ஆகியவை மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்றன. அதே போல் பாற்கடலில் இருந்து தோன்றிய காமதேனு, கற்பக விருட்சம், துளசி ஆகியவையும் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்றன.

பாற்கடலில் முதலில் தோன்றிய ஆலகால விஷம், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த பொருட்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டது. அப்படி மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் முறை வந்த போது தோன்றியவள் தான் மகாலட்சுமி. எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது கடல். அதனால் தான் குறையாத செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி விளங்குகிறாள்.

முக்கிய அம்சங்கள்

  • மகாலட்சுமியின் பிறப்பு: பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீதேவியாக வெளிப்பட்டார்.
  • விஷ்ணுவின் பங்கு: கூர்ம அவதாரம் எடுத்து பாற்கடல் கடையும் நிகழ்வுக்கு உதவினார், பின்னர் மகாலட்சுமியை மணந்தார்.
  • அலைமகள் பெயர் காரணம்: அலை கடலில் இருந்து தோன்றியதால் இப் பெயர்.
  • செல்வத்தின் அதிபதி: கடல் போல் பெருகும் தன்மையால் செல்வத்தின் கடவுளாக மகாலட்சுமி விளங்குகிறார்.
  • பிற பொருட்கள்: ஆலகால விஷம், அமிர்தம், சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், துளசி போன்றவை பாற்கடலிலிருந்து தோன்றின.

இந்த புனிதமான மகாலட்சுமியின் கதை நமக்கு செல்வத்தின் முக்கியத்துவத்தையும், இறை அருளையும் உணர்த்துகிறது. மேலும் ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பல்வேறு தமிழ் தெய்வங்களான முருகன், அவரது ஆறுபடை வீடுகள், மற்றும் பிற முருகன் ஆலயங்கள் பற்றிய தகவல்களைப் பெற, Jothidam360.in தளத்தைப் பார்வையிடவும். உங்கள் வாழ்வில் சுபிட்சம் பெருக வாழ்த்துக்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மகா விஷ்ணுவின் ஆலோசனையின்படி, தேவர்களும் அசுரர்களும் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்க அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தபோது, ஸ்ரீதேவி வடிவில் மகாலட்சுமி தோன்றினார்.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த பல அரிய பொருட்களில், ஸ்ரீதேவியான மகாலட்சுமியும் ஒருவராவார். அப்போது மகா விஷ்ணு மகாலட்சுமியை ஆட்கொண்டு மணம் புரிந்து, மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவாக அருள்பாலிக்கிறார்.

மகாலட்சுமி பாற்கடலாகிய அலை கடலில் இருந்து தோன்றியதால், அவருக்கு 'அலைமகள்' என்ற பெயர் ஏற்பட்டது. கடல் மற்றும் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்றன.

Our Other Services