Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

நவராத்திரி விழா 2024: தேதி, பூஜை முறைகள் மற்றும் சிறப்பு தகவல்கள்

நவராத்திரி, இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். பெண் சக்தியை போற்றி கொண்டாடுவதற்கான மிக முக்கியமான காலமாக இது கருதப்படுகிறது. முப்பெரும் தேவியரான மலைமகள், திருமகள் மற்றும் கலைமகளை வழிபட்டு, அவர்களின் அருளை நவராத்திரியில் பெற வேண்டும். இந்த சிறப்புமிக்க விழாவின் முழுமையான தகவல்களையும், இந்த ஆண்டு நவராத்திரி குறித்த ஜோதிட ரீதியான மாற்றங்களையும் இங்கு காணலாம்.

நவராத்திரி: ஒரு கண்ணோட்டம்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், நிறைவான மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுவது வழக்கம். புரட்டாசி மாத அமாவாசையான மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, நவமி வரையிலான ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையும், தசமி அன்று விஜயதசமியும் கொண்டாடப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 22ம் தேதியன்று துவங்கி, அக்டோபர் 01ம் தேதி வரையிலான பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாளில் சரஸ்வதி பூஜையும், பதினொன்றாம் நாளில் விஜயதசமி திருநாளும் கொண்டாடப்படுவதால் பக்தர்கள் மத்தியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளன. இது போன்ற தமிழ் பண்டிகைகளின் தேதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு திதிகளின் கணக்கீடுகளே காரணம்.

இந்த ஆண்டு நவராத்திரி ஏன் 10 நாட்கள்?

நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்ட பண்டிகையாக இருந்தாலும், சில ஆண்டுகள் அபூர்வமாக நவராத்திரி பத்து நாட்கள் வருவதுண்டு. இதற்கு காரணம் திதிகள் அந்த நாளில் தாமதமாக துவங்குவது ஆகும். அதாவது, நவமி திதியில் சரஸ்வதி பூஜையும், தசமி திதியில் விஜயதசமி திருநாளும் கொண்டாடப்பட வேண்டும் என்பது நியதி.

அதன் அடிப்படையில் பார்த்தால், செப்டம்பர் 30ம் தேதி பகல் 02.52 வரை அஷ்டமி திதி உள்ளது. அதனால் இந்த நாளை துர்காஷ்டமி நாளாகவே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 30ம் தேதி பகல் 02.53 மணிக்கு பிறகுதான் நவமி திதி துவங்குகிறது. அதனால் அக்டோபர் 01ம் தேதிதான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது.

அதே போல் அக்டோபர் 01ம் தேதி மாலை 03.34 மணிக்கு துவங்கி, அக்டோபர் 02ம் தேதி மாலை 03.45 வரை தசமி திதி உள்ளது. இந்த நாளில் தான் விஜயதசமி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இதனால் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாட்டினை செய்பவர்கள் அக்டோபர் 01ம் தேதியும், விஜயதசமி வழிபாடு மற்றும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்பவர்கள் அக்டோபர் 02ம் தேதியும் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் பத்து நாட்கள் வருவதால், தலா மூன்று நாட்கள் முப்பெரும் தேவியரையும் முழுமையாக வழிபட்டு அவர்களின் அருளை பெற வேண்டும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளும் வழக்கமான நவராத்திரி வழிபாட்டினையே மேற்கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள் ஒரு பார்வை:

  • நவராத்திரி துவக்கம்: செப்டம்பர் 22, 2024
  • துர்காஷ்டமி: செப்டம்பர் 30, 2024 (பகல் 02.52 வரை அஷ்டமி திதி)
  • சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை: அக்டோபர் 01, 2024 (பகல் 02.53 மணிக்கு பிறகு நவமி திதி துவங்குவதால்)
  • விஜயதசமி: அக்டோபர் 02, 2024 (அக்டோபர் 01 மாலை 03.34 மணிக்கு துவங்கி அக்டோபர் 02 மாலை 03.45 வரை தசமி திதி)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

திதிகள் தாமதமாக துவங்குவதே இதற்கு காரணம். நவமி திதி குறிப்பிட்ட நாளில் பிற்பகலுக்குப் பிறகு வருவதால், சரஸ்வதி பூஜை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு பதிலாக பத்து நாட்களாக நீள்கிறது.

அக்டோபர் 01, 2024 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஏனெனில் செப்டம்பர் 30 அன்று பிற்பகலுக்குப் பிறகுதான் நவமி திதி துவங்குகிறது.

அக்டோபர் 02, 2024 அன்று விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதற்கு மிகவும் சிறப்பான நாளாகும்.

Our Other Services