நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தியின் அருள் நிறைந்திருக்கும். இந்த ஆண்டு நவராத்திரி, 9 அரிய யோகங்கள் கூடுவதால் ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இது புதிய தொழில், முதலீடு மற்றும் மங்களகரமான காரியங்களுக்கு உகந்த காலமாகும். தமிழ் மக்களின் வாழ்வில் முருகன் ஆலயங்களில் கிடைக்கும் ஆன்மீக பலத்தைப் போல, நவராத்திரியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
9 யோகங்கள் உருவாகும் காலம்: 400 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு
இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 14 ம் தேதி இரவு துவங்கி, அக்டோபர் 23 ம் தேதி வரை உள்ளது. ஒன்பது யோகங்கள் ஒன்று கூடிய காலத்தில் துவங்குவதால் இந்த ஆண்டு நவராத்திரியானது ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல ஜோதிட ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது போன்ற ஒரு அற்புதமான தருணம் கடந்த 400 ஆண்டுகளில் உருவாகவே இல்லை என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அம்பிகையின் அருளுடன், 9 யோகங்களின் பலனையும் தரக் கூடிய காலம் என்பதால் இந்த ஆண்டு நவராத்திரி இரட்டிப்பு சிறப்புடையதாக கருதப்படுகிறது.
யானை மீது வரும் துர்க்கை: செல்வ வளத்தின் அடையாளம்
இந்த ஆண்டு நவராத்திரி ஞாயிற்றுக்கிழமையில் துவங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் துர்கா தேவி யானை வாகனத்தில் பவனி வர உள்ளார். யானை மீது அம்பிகை வருவது அனைத்து பிரச்சனைகள், கஷ்டங்களில் இருந்தும் விடுபடுவதை குறிப்பதாகும். இது மகிழ்ச்சி மற்றும் செல்வ வளத்தின் அடையாளம் ஆகும். இந்த சாஸ்திரப்படி யானை என்பது முழு முதற்கடவுளாக விநாயகருடன் தொடர்புடைய விலங்காகும். விநாயகப் பெருமான் தடைகள் அனைத்தையும் விலக்கி, வெற்றிகளையம், நன்மைகளையும் தரக் கூடியவர். விநாயகர் இருக்கும் இடங்களில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் தான் இந்த ஆண்டு நவராத்திரி புதிய தொழில், முதலீடு துவங்குவதற்கு ஏற்ற அதிர்ஷ்டகரமான காலமாக சொல்லப்படுகிறது.
நவராத்திரியில் உருவாகும் 9 முக்கிய யோகங்கள்
அக்டோபர் 15 ம் தேதி உருவாகும் கிரகங்களின் சேர்க்கை காரணமாக பத்ம யோகம், புத்தாதித்ய யோகம் உள்ளிட்ட 9 யோகங்கள் உருவாக உள்ளன. சூரியன், சந்திரன், புதன், குரு உள்ளிட்ட சுப கிரகங்கள் ஒன்றாக சேருவதை யோகம் என்கிறோம். ஜோதிட சாஸ்திரப்படி உள்ள 27 யோகங்களில் 9 யோகங்கள் அக்டோபர் 15 ம் தேதி துவங்கி, 23 ம் தேதி வரை உள்ளது. அதோட 3 சர்வசித்தி, 3 ரவி, ஒரு திரிபுஷ்க யோகங்களும், பிரீதி உள்ளிட்ட யோகங்களும் உருவாக உள்ளன. நவராத்திரியின் 9 நாட்களும் இந்த 9 யோகங்களும் நிறைந்திருப்பதால் 23 ம் தேதி வரை செய்யும் அனைத்து முதலீடுகள், தொழில்கள் உள்ளிட்டவைகள் மங்களகரமான வாய்ப்புகளை தரும்.
சர்வார்த்த சித்தி மற்றும் ரவி யோகங்கள்
பொதுவாக துர்க்கைக்குரிய வாகனம் சிங்கமாகும். ஆனால் நவராத்திரி காலத்தில் அம்பிகை தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வருவதாகவும், அவளின் வாகனங்கள் மாறிக் கொண்டே இருக்கும் என்றும் தேவி பாகவதம் கூறுகிறது. நவராத்திரியின் முதல் நாள் சூரியனுக்குரிய ஞாயிற்றுகிழமையில் துவங்குகிறது. அதே போல் நிறைவடைவது அக்டோபர் 23 ம் தேதி திங்கட்கிழமை. இது சந்திரனுக்குரிய நாளாகும். சாரதா நவராத்திரியின் இந்த அமைப்பு சர்வார்த்த சித்தி மற்றும் ரவி யோகங்கள் ஏற்பட வழிவகுக்கின்றன. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கிடைக்கும் ஆன்மீக அருளுக்கு இணையாக, இந்த யோகங்களும் அபரிமிதமான வெற்றியையும், நன்மைகளையும் அளிக்கும்.
இந்த நவராத்திரியில் வாங்க வேண்டிய அதிர்ஷ்டமான பொருட்கள் மற்றும் முதலீடுகள்
துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி கொண்ட நாளே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதனால் இந்த நாட்களில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நாம் துவங்கும் காரியங்கள் அனைத்தும் அளவில்லாத வெற்றியை பெறும். இந்த மங்களகரமான நாட்களில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:
- புதிய வீடு: அமைதியான, ஒற்றுமையான, வளமான வாழ்க்கையை அளிக்கும்.
- புதிய வாகனங்கள்: பயணங்களில் சுப பலன்களை தரும்.
- தங்கம்: செல்வ செழிப்பிற்கும், முதலீட்டிற்கும் சிறந்தது.
- ரியல் எஸ்டேட்: நீண்ட கால லாபகரமான முதலீடாக அமையும்.