மூட்டுவலி பிரச்சினை ஒருகாலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஊட்டச்சத்து பற்றாக்குறை, இன்ஃப்ளமேஷன்கள், அவ்வப்போது வரும் வைரஸ் தொற்றுக்களின் தாக்குதல் போன்ற பல காரணங்களால் மிக இளம் வயதிலேயே மூட்டு வலி, கை, கால் எலும்புகளில் வலி ஏற்படுகிறது. இதற்கு விதவிதமான ஆயின்மெண்ட், க்ரீம்கள், ஆயில் வகைகள் பலவும் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஆனாலும் வலி சரியான பாடில்லை. அதை சரிசெய்து முழுமையாக மூட்டுவலியை குணப்படுத்த கீழ்வரும் ஒரு சூப்பர் ஆயுர்வேத தீர்வு உங்களுக்குப் பலன் தரும். பாரிஜாத பூவால் மூட்டுவலிக்கு தீர்வு கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
மலர்களும் மருந்தும் - பாரிஜாதத்தின் சிறப்பு
நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மலர்களை மருந்தாகப் பயன்படுத்துவது வழக்கம். மலர் மருத்துவம் என்றே ஒரு தனிப்பிரிவு இருக்கிறது. அது மலரின் மூலக்கூறைப் பிரித்தெடுத்து பயன்படுத்துவது. ஆனால் இந்த சித்த, ஆயுர்வேதத்தில் உள்ள மலர் மருந்து என்பது மலர்களை நேரடியாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துவது. மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் வலியைப் போக்குவதற்கும் ஆயுர்வேதத்தில் ஒரு மலர் குறிப்பிடப்படுகிறது. இந்த பூவை பெரும்பாலும் அழகுக்காக மட்டும் பயன்படுத்துவோம். மற்றபடி கண்டுகொள்ளவே மாட்டோம். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆன்மீக மற்றும் “ஜோதிடம்” சார்ந்த முக்கியத்துவம் கொண்ட “முருகன்” ஆலயங்களை தரிசிக்கும்போது கிடைக்கும் அமைதியைப்போல, இந்த பாரிஜாத மலர் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
மூட்டு வலி, முதுகு வலி எதனால் ஏற்படுகிறது?
50 வயதுக்கு மேல் ஆகும்போது இயற்கையாகவே எலும்புகளில் தேய்மானம், அடர்த்தி குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் இப்போது இளம் வயதிலேயே மூட்டு வலி மற்றும் முதுகுவலி பிரச்சினை உண்டாகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:
- நீண்ட நேரம் (நாள் முழுக்க) ஒரே பொசிஷனில் உட்கார்ந்திருப்பது.
- அதிக நேரம் வண்டி ஓட்டுவது (குறிப்பாக டூ வீலர்).
- அதிக நேரம் நிற்பது.
- எலும்புகளில் அழுத்தம் ஏற்படுவது போல் வேலை செய்வது.
இதை தற்காலிகமாக குறைக்க கடைகளில் வலி நிவாரணி க்ரீம்கள் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் அது நிரந்தர தீர்வை தராது. இதை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் உள்ள பல சிகிச்சை முறைகளில் ஒன்று தான் இந்த பூ வைத்தியம். அது என்ன பூ என்று தெரியுமா? முதுகுவலி மற்றும் மூட்டு வலியைக் குறைக்கும் அற்புதத்தை ஒரு பூவால் செய்ய முடியும் என்று குறிப்பிட்டோமே அந்த பூ என்னவென்று தெரியுமா? அது வேறொன்றும் இல்லை. பாரிஜாத பூ தான்.
பாரிஜாத பூ - பவளமல்லியின் மருத்துவ பயன்கள்
பாரிஜாத பூவை (Night-flowering jasmine) நம் எல்லோருக்குமே தெரியும். காம்பு ஆரஞ்சு நிறத்திலும் பூக்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் நிறம் சிவப்பாக இருப்பதால் இதை பவளமல்லி என்றும் அழைப்பார்கள். பவளமல்லி என்று அழைக்கப்படும் பாரிஜாதப் பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில:
- அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory properties) மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் (Antioxidants) உள்ளன.
- மூட்டு வலியைக் குறைப்பதோடு அதற்கு காரணமாகும் இன்ஃபிளமேஷன்களையும் குறைக்கிறது.
- அழற்சி சம்பந்தப்பட்ட சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளை இது குறைக்கும்.
- தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த பாரிஜாத மலர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
- தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த பூவை பயன்படுத்தலாம்.
மூட்டுவலிக்கு பாரிஜாத பூ - எப்படி பயன்படுத்துவது?
மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் இந்த பூவை ஃபிரஷ்ஷாகப் பயன்படுத்துவது நல்லது. வீட்டுக்கு அருகே கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் போது வெயிலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு பயன்படுத்த 5-6 பூக்கள் இருந்தாலே போதும். இதை பயன்படுத்தும் முறை:
- 300 மில்லி அளவு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- கொதிக்கும் நீரில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் பூக்களைப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
- அடுப்பை மிதமான தீயை வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரின் நிறம் லேசாக மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடலாம்.
- பாரிஜாத மலரை கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை நீங்கள் மூட்டுவலி மற்றும் முதுகுவலிக்கு மேல்பூச்சாக அப்ளை செய்யப் போவது இல்லை. இதை உள்ளுக்குள் எடுக்கப் போகிறோம். ஆம், இந்த பாரிஜாதம் கொதிக்க வைத்த வாட்டரை டீ போல குடிக்க வேண்டும்.
இது உடலில் உள்ள இன்ஃபிளமேஷன்களை குறைத்து எலும்பு, மூட்டு மற்றும் முதுகு வலிக்கு நிரந்தர தீர்வை தரும். இறுதியாக, சங்குப்பூ டீயைப் போன்றே இந்த பாரிஜாத மலரின் டீயை குடிக்கலாம் சுவையும் நன்றாக இருக்கும். அதன் மருத்துவப் பயன்களும் ஏராளம். இளம் வயதில் இருந்தே இந்த டீயை குடிக்க ஆரம்பித்தால் வயதான பிறகு வரும் மூட்டுவலியின் அளவும் தீவிரமும் அறிகுறிகளும் குறையும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை வெறும் தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு Jothidam360 பொறுப்பாகாது. மருத்துவ ஆலோசனைக்கு நிபுணர்களை அணுகவும்.