பெருமாள் வழிபாட்டின் மகத்துவம்
எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பெருமாளை வழிபாடு செய்ய தொடங்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் தர்மத்தை நோக்கிய பயணத்தை செய்கிறார்கள் என்று அர்த்தம். மேலும் பெருமாள் மிக சிறந்த ஆசிரியர் ஆவார்.
வாழ்க்கையில் அவர் அவர் செய்த துன்பத்தையும், புண்ணியத்தையும் அவர்களுக்கே கொடுத்து நன்மை தீமையை உணரச் செய்பவர்.
அதனால் தான் பெருமாளை வழிபாடு செய்தால் அவர் நம்முடைய பாவத்தை மன்னித்து புண்ணியத்தை அருள்வார் என்று பக்தர்கள் தேடித்தேடி வழிபாடு செய்கிறார்கள்.
புரட்டாசி மாதத்தின் சிறப்பு
மார்கழி மாதத்திற்கு இணையானது
பகவத் கீதையில் பெருமாள் "மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன்" என்கிறார். அந்த மார்கழி மாதத்திற்கு இணையான மாதம் தான் இந்த புரட்டாசி மாதம்.
அனுதின வழிபாடு
இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் பெருமாளை அனுதினம் வழிபாடு செய்து அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச்சிறந்த நாளாகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் தோற்றம்
புராணக் கதை
ஒருமுறை நாரதர் சத்திய லோகத்தில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் பிரம்மாவைப் பார்த்து நாரதர் "கலியுகத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான மற்றும் மிகச் சிறந்த விரதம்" எது என கேட்கிறார்.
பிரம்மாவின் அருள்
பிரம்மா சொல்கிறார், "கலியுகத்தில் மிக முக்கியமான விரதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்க கூடிய புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஆகும்."
பிறகு அன்று முதல் பூலோகத்தில் மக்கள் இந்த விரதத்தை பின்பற்ற தொடங்கினார்கள். இந்த புரட்டாசி சனிக்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது.
விரதம் கடைப்பிடிக்கும் முறை
காலை வழிபாடு
- காலையில் எழுந்து குளித்து
- துளசி இலைகளை நீரில் போட்டு பருகி
- விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய
நெய்வேத்தியங்கள்
- புலியோதரை
- சர்க்கரை பொங்கல்
- வெண்பொங்கல்
இவற்றை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்
விரதத்தின் நன்மைகள்
கிரக தோஷங்கள் நீங்குதல்
முக்கியமாக நமக்கு ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால் அவை விலகுகிறது.
கடன் பிரச்சினைகள் தீர்வு
குடும்பத்தில் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அவை பெருமாளின் அருளால் விலகி நமக்கு செல்வம் சேரும்.
குடும்ப பாக்கியம்
நினைத்து நிறைவேறல், குடும்ப பிரச்சினைகள் விலகவும், தீராத நோய்கள் தீரவும்.
வீட்டில் மாவிளக்கு பூஜை
மாவிளக்கு தயாரிக்கும் முறை
பச்சரிசி மாவு
வெல்லம்
இளநீர்
வாழை இலை
வழிபாட்டு முறை
- பச்சரிசி மாவில் வெல்லம், இளநீர் சேர்த்து பிசைந்து கொண்டு
- வாழை இலை மீது அகல் விளக்கு போல் செய்து நெய் விட்டு விளக்கு ஏற்ற வேண்டும்
- மலர்கள் கொண்டு மாவிளக்கை அலங்கரித்து
- தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து வழிபட செய்ய வேண்டும்