உங்களின் சொந்த வீடு கனவு, தொழில் வெற்றி, செவ்வாய் தோஷ நிவர்த்தி என பல நன்மைகளை அள்ளித்தரும் செவ்வாய் கிழமை விரதத்தின் மகிமையையும், முருகப்பெருமானை வழிபடும் முறைகளையும் இங்கே விரிவாகக் காணலாம்.
செவ்வாய் கிழமை விரதத்தின் மகத்துவம்
விரதங்களில் செவ்வாய் கிழமை விரதத்திற்கு மிகவும் மகத்துவம் உண்டு. சொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் ஆசை, தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் செவ்வாய் கிழமையில் இதை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். 9 வாரங்களில் உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும். பணம் இருந்தாலும் சிலரால் சொந்த வீடு வாங்க முடியாமல் போவதற்கு அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை பாதிக்கப்பட்டிருப்பதே காரணம். ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கிய கிரகமாக கருதப்படுகிறது.
நவகிரக நாயகன் செவ்வாய் பகவான் மற்றும் முருகன் அருள்
நவகிரகங்களில் மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படும் கிரகம் செவ்வாய் பகவான். வீரம், ரத்தம் தொடர்பான நோய்கள், பூமி, மனை ஆகியவற்றின் நாயகனான செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத் தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பார்கள். செவ்வாய்க்கு உரிய அதிபதியாக இருப்பவர் முருகப் பெருமான். செவ்வாய் கிழமை செவ்வாய் பகவானுக்கு மட்டுமின்றி முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய். உண்மையில் செவ்வாய்கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. அதனால் தான் இதை மங்களவாரம் என குறிப்பிடுகிறோம்.
பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் சொந்த வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும். தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபடுவது சிறப்பு. செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப் பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
ஏன் செவ்வாயை வணங்க வேண்டும்?
பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். செவ்வாய் வருவாய் என்று சொல்வார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக் கொடுக்கும். இந்நாளில் மங்கலப் பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு நாம் நன்றிக்கடன் செலுத்தலாம்.
சொந்த வீடு அமைய செவ்வாய் கிழமை விரத முறைகள்
- செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும்.
- ஒன்பது வாரங்கள் ஒரு பொழுதும் விரதம் இருந்தால் நன்மை நடக்கும்.
- வியாபாரம் செய்பவர்கள் செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் தொழில் விருத்தி அடையும்.
- செவ்வாய்க் கிழமை தோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும்.
- வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
- கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
- மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கி விடும்.
செவ்வாய் தோஷங்கள் விலக என்ன செய்ய வேண்டும்?
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி விடும்.
- செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.
- நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்க செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.
சிறுவாபுரி முருகன் வழிபாடு
சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். சிலர் சொந்த ப்ளாட் கூட வாங்கி இருக்கின்றனர். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் நீங்கும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோசத்திற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும். சிறுவாபுரி தலத்திற்குரிய திருப்புகழை தினமும் படித்து வந்தால், முருகன் அருளால் விரைவில் சொந்த நிலம், சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற - வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு - மகிழ்வாக
மண்டலமு முநிவோடு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு - மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி - வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள - வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு - வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய - முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு - பெருமாளே.