சிவபெருமானின் தியான உருவம், நடராஜர் வடிவம், லிங்க வடிவம், அவரது அவதாரங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் எந்த வடிவத்தை வழிபடுவது சிறப்பு? எதை வழிபட்டால் கடவுளின் அருள் நமக்கு விரைவாக கிடைக்கும் என தமிழ் ஜோதிட உலகில் விரிவாக அலசப்படுகிறது. ஆன்மிகத்தின் சிறப்புக்களை உணர்ந்து இங்கு தெரிந்து கொள்வோம்.
சிவனின் முக்கிய வடிவங்கள் மற்றும் அவதாரங்கள்
சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களாக ருத்ராவதாரம், சதாசிவம், மகாகாலன், தாரகேஸ்வரர் ஆகிய வடிவங்கள் குறிப்பிடப்படுகிறது. அனுமன், வீரபத்திரர், கால பைரவர் ஆகியனவும் சிவனின் உக்கிர வடிவங்களாக சொல்லப்படுகிறது. சிவ மகாபுராணத்தில், மகரிஷி வியாசர் சிவபெருமானின் 19 அவதாரங்கள் மிக முக்கியமானவை எனக் கூறியுள்ளார். சிவபெருமானின் சரபேஸ்வரர் அவதாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பக்தர்களை விரைவாக காக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. சிவன் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் எதை வழிபடுவது விரைவான பலனை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் சில முக்கிய அவதார விளக்கங்கள்:
- சதாசிவம்: சிவனின் உயர்ந்த நிலையாக கருதப்படுபவர்.
- மகாகாலன்: சிவனின் முதல் தசாவதாரம், தூஷன் என்ற அரக்கனை வதம் செய்தவர்.
- தாரகேஸ்வரர்: சிவனின் இரண்டாவது அவதாரம்.
- அனுமன் மற்றும் வீரபத்திரர்: சிவனின் சக்தி வாய்ந்த அவதாரங்கள், சமமான வீரர்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
- கால பைரவர்: மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம். அனைத்து சிவன் கோவில்கள் மற்றும் காசி நகரத்திற்கு எட்டு திசைகளிலும் இருந்து பாதுகாப்பவர். பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டியவர்.
சிவனுக்கு அவதாரம் உண்டா?
புராணங்களின் படி, சிவனுக்கு மகாவிஷ்ணுவைப் போல் அவதாரங்கள் இல்லை. இவை அனைத்தும் அவரின் பல்வேறு வடிவங்கள் மட்டுமே. சிவன் என்றால் ஆனந்தம் மற்றும் மங்களம் என்று பொருள். சிவன் உருவமற்றவர் மற்றும் பரப்பிரம்மன். சிவனின் அம்சம் சதாசிவம். அவரின் அம்சங்கள் பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன். சதாசிவத்தின் வலது கையில் இருந்து பிரம்மாவும், இடது கையில் இருந்து விஷ்ணுவும், இதயத்தில் இருந்து ருத்ரனும் தோன்றினர் எனப் புராணங்கள் சொல்கின்றன.
ஜடாமுடியும், மூன்றாவது கண்ணும் கொண்டு தியானம் செய்யும் உருவத்தை நாம் பார்ப்பது ருத்ரன். அவருடைய சக்தியும் எல்லையற்றது. அவர் எப்போதும் பிரம்மனை தியானிக்கிறார். அவர் மாயைக்கு அப்பாற்பட்டவர், காலத்தைக் கடந்தவர்.
யார் சிவன்?
ருத்ரனுக்கும் அவதாரங்கள் இல்லை. அவர் ரூபம் எடுக்கிறார் அல்லது அவருடைய அம்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக அனுமன் மற்றும் அஸ்வத்தாமன் ருத்ரனின் அம்சங்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் நன்மையை நிலைநாட்ட, பக்தர்களை காக்க, தீமையை அழிக்க என ஏதாவது ஒரு காரணத்திற்காக சிவபெருமான் பல்வேறு உருவங்களில் தோன்றி இருக்கிறாரே தவிர அவருக்கு என்று தனி உருவம் எதுவும் கிடையாது என்று தான் அனைத்து ஆன்மிக நூல்களும் சொல்கின்றன. இறைவன் என்பவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவர், தலைவனாக விளங்கக் கூடியவர். அண்ட சராசரங்கள், அவற்றில் உள்ள ஒவ்வொரு அணுவிலும், அவற்றின் இயக்கத்தின் ஆதாரமாக சிவனே உள்ளார். அவருக்குள் அனைத்தும் அடக்கம் என்பதைத் தான் அனைத்து ஆன்மிக நூல்களும் சொல்கின்றன.
சிறந்த சிவ வழிபாடு எது?
சிவபெருமானின் லிங்க வடிவமே பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்களால் வழிபடப்படுகிறது. இது உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் அருவுருவாக இருப்பது. சிவனின் மற்ற வடிவங்கள் அனைத்தும் பக்தர்களின் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் லிங்க வடிவம், மனிதனை இறைவனுடன் எளிதில் ஒன்றச் செய்யும் தன்மை கொண்டது.
சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மட்டுமே பக்தர்கள் உருவம் இல்லாத, அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உணர்வை அடைகிறார்கள். அதனால் இறை அருளை பெறுவதற்கு சிவனின் லிங்க வடிவத்தை வழிபடுவதே மிகச் சிறந்தது என ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். சிவனின் மற்ற வடிவங்களை காணும் போது ஏதோ ஒரு மனிதனின் சாயலை மட்டுமே அதில் பார்க்க முடியும். ஆனால் லிங்கத்தில் தன்னுடைய மனதில் தோன்றும் உருவமாக மட்டுமே உணர்ந்து வழிபடுவதால் இறைசக்தி நம்மை வந்து அடைவது எளிதாகிறது. இது ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் சிறந்த பலன்களைத் தரும் என தமிழ் சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன.