நம் உள்ளங்கையில் உள்ள மேடுகள் மற்றும் பள்ளங்கள் நம் வாழ்க்கையின் எதிர்காலத்தையும், சுக துக்கங்களையும் சுட்டிக்காட்டும். அதிலும் சுக்கிர மேடு என்பது செல்வ செழிப்பு, அழகு, படைப்பாற்றல் மற்றும் வசதி வாய்ப்புகளைக் குறிப்பதாகும். தமிழ் கலாச்சாரத்தில், ஜோதிடம் மற்றும் கை ரேகை சாஸ்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சுக்கிர மேட்டில் வாசனை திரவியம் பயன்படுத்துவதன் மூலம் தொழில் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, பல்வேறு நன்மைகளை எவ்வாறு பெறலாம் என்பதை ஜோதிடம் 360 விளக்குகிறது.
சுக்கிர மேடு எங்கு உள்ளது? அதன் முக்கியத்துவம் என்ன?
கை ரேகை நிபுணர்கள் கூற்றுப்படி, நம் உள்ளங்கையில் கட்டை விரலுக்கு அடிப்பகுதியில் காணப்படும் மேடு சுக்கிர மேடு என அழைக்கப்படுகிறது. அழகு, ஆடம்பரம், அறிவாற்றல், புத்தி கூர்மையை குறிக்கும் சுக்கிரனை பிரதிபலிக்கும் இந்த மேடு, தனி ஒரு நபரின் பொதுவான இயல்புகள், பாலியல் இயல்பு, ஈர்ப்பு, காதல், ஆசைகள் மற்றும் விருப்பங்களை குறிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், தனி ஒரு நபரின் கலை ஆர்வம் - ஈடுபாடுகளையும் இந்த மேடு குறிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த தமிழ் ஜோதிட கூற்றுப்படி, சுக்கிர மேடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி குவியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, இந்த சுக்கிர மேடு தடிப்பாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் எண்ணற்ற அதிர்ஷ்டங்கள் வரும், செல்வ செழிப்புடன் இருக்கும். அதேநேரம், தட்டையாக இருக்கும் பட்சத்தில், உடல் நல பிரச்சனைகளில் தொடங்கி, குடும்பத்தில் கஷ்டம், தொழில் கஷ்டம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
சுக்கிர மேட்டில் வாசனை திரவியம் அல்லது சந்தனப் பொடி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
நவகிரகங்களில் ஆளுமை மிக்க கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் கிரகத்தை குறிக்கும் இந்த சுக்கிர மேட்டில், வாசனை திரவியம் அல்லது சந்தனப் பொடியை தடவி வருவது தொழில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அதாவது, தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகளை போக்கி, துறையில் ஏற்றம் காண உதவி செய்யும் என நம்பப்படுகிறது. மேலும், மண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரும், திருமணம் முடிக்காதவர்களுக்கு நல்ல வரன் கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது. இந்த சுக்கிர மேட்டை சுகமாக வைத்துக்கொள்ள, நம் வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எப்படி பயன்படுத்துவது?
நிபுணர்கள் கூற்றுப்படி சுக்கிர மேட்டில் இந்த வாசனை திரவியங்களை வாரம்தோறும் வெள்ளிக் கிழமையன்று அப்ளை செய்து வரலாம். சுக்கிர மேட்டில் தெளிக்கும் (அ) தடவும் இந்த வாசனை திரவங்கியங்கள், ஆல்கஹால் உள்ளடக்கம் இல்லாத ஒரு பொருளாக இருக்க வேண்டியது அவசியம். வாரம்தோறும் இவ்வாறு செய்து வர காதல் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகள் குவியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சுக்கிர மேட்டில் வாசனை திரவம் (அ) சந்தன பொடியை அப்ளை செய்த பின்னர் பசுவிற்கு பசும்புல் அளித்து வருவது நல்லது.
முக்கிய நன்மைகள்:
- உங்கள் தோற்றத்தை மாற்றும், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.
- காதல் உறவில் இல்லாதவர்களுக்கு விரைவில் காதல் துணை கிடைப்பார்கள். காதல் ஜோடி இடையே பரஸ்பர புரிதல் உண்டாகும், விரைவில் திருமணம்.
- ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள், குழந்தை பாக்கியம் தொடர்பான செய்தி பெறும் வாய்ப்பும் காணப்படுகிறது.
- தொழில் வாழ்க்கையிலும் வெற்றிகள் குவியும், குறிப்பாக கூட்டாண்மையில் தொழில் செய்யும் நபர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
- அலுவலகத்தில் குழு பணியில் ஈடுபடும் நபர்களுக்கும், ஒரு குழுவை வழிநடத்தும் நபர்களுக்கும் ஒரு சிறப்பான அனுபவம் கிடைக்கும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
- புதியதொரு பணியை தேடி வரும் நபர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ற பணி ஒன்றும் கிடைக்கும்.
- அரசு பணியில் இருக்கும் நபர்களுக்கு அவர்களின் விருப்பம் போல் பணியிட மாற்றம், ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற யோகங்களையும் இந்த சுக்கிர மேடு கொண்டு வரும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும், குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும், நாள்பட்ட நோய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்.
குறிப்பு: சுக்கிர மேட்டில் அளவுக்கு மிகுதியாக சுருக்கங்கள் இருப்பது, வரி கோடுகள் இருப்பது நல்லது அல்ல எனவும், சுக்கிர மேட்டால் கிடைக்கும் நன்மைகளை பாதிக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!