Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வாஸ்து செடிகள்

சில குறிப்பிட்ட வாஸ்து செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும். தூய்மையான காற்றுடன், அமைதி, மகிழ்ச்சி, மற்றும் செல்வ வளம் பெருகும். ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் தரும் இந்த செடிகள் பற்றி விரிவாகக் காணலாம்.

வாஸ்து செடிகள் - ஒரு பார்வை

வாஸ்து சாஸ்திரப்படி, சில செடிகளை வீட்டில் வைப்பதன் மூலம் அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டமான சூழல் ஏற்படும் என நம்பப்படுகிறது. குறிப்பிட்ட செடிகளை வீட்டில் வளர்ப்பதால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக வீட்டிற்குள் வைத்து வளர்க்கப்படும் செடிகளால் நேரடியான இயற்கை மற்றும் பாசிடிவ் ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செடிகள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை குறைப்பதுடன், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகின்றன. இவைகள் வெற்றி மற்றும் செல்வ வளத்திற்கு காரணமாக அமைகின்றன. அப்படி பிரச்சனைகளை தீர்த்து, செல்வ வளம், மகிழ்ச்சியை தரும் வாஸ்து செடிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்டம் தரும் முக்கிய வாஸ்து செடிகள்:

  • துளசி செடி: மிகவும் புனிதமான, ஆற்றல் மிகுந்த, அதிர்ஷ்டத்தை தரக் கூடிய செடி துளசி. வீட்டில் பாசிடிவ் எனர்ஜியும் தெய்வீக தன்மையும் அதிகரிக்கும். கொசுக்களை அண்ட விடாது, காற்றை சுத்தப்படுத்தும். மருத்துவ குணம் மிகுந்தது. சூரிய ஒளியை ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. ஜன்னல், பால்கனி, வீட்டின் முன்புறம், பின்புறம் என எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
  • மூங்கில் செடி: வாஸ்து மற்றும் ஃபெங் சுயி சாஸ்திரத்துடன் தொடர்புடையது. செல்வ வளம், ஆரோக்கியம் தரக்கூடியது. அதிர்ஷ்டத்தின் அடையாளம். 5 என்ற எண்ணிக்கையில் வைத்தால் செல்வம், 6 வைத்தால் அதிர்ஷ்டம், 7 வைத்தால் ஆரோக்கியம், 21 வைத்தால் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியம் தரும். காற்றில் உள்ள மாசுகளை சுத்தம் செய்யும்.
  • ரப்பர் செடி: இலைகள் நாணயங்கள் போல வட்டவடிவமாக இருப்பதால் செல்வத்தை ஈர்க்கும். வீட்டிற்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தரும். காற்றை சுத்தப்படுத்தி நிம்மதியான சூழலை உருவாக்கும்.
  • லாவண்டர்: நறுமணத்தை தருவதுடன், மருத்துவ குணமும் கொண்டது. மனதிற்கு அமைதியை தரக் கூடியது. அதிர்ஷ்டத்தை தரக் கூடிய செடிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • மணிபிளான்ட்: பணப் பிரச்சனைகளில் இருந்து வெளிவர செய்யும். வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தை தரக் கூடியது. காற்றில் உள்ள மாசுக்களை நீக்கக் கூடியது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
  • யூகலிப்டஸ்: மருந்தாகப் பயன்படுத்தப்படுவது. வலிகளை குணப்படுத்தும். வீட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்தும். பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
  • சாமந்திப்பூ: மஞ்சள் சாமந்திப்பூ மலர்கள் நம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளம். நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துவதுடன், வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டின் முன் வாசலுக்கு அருகில் அல்லது வடக்கு/கிழக்கு திசையில் வளர்ப்பது அதிர்ஷ்டமானது.
  • செம்பருத்தி: சிவப்பு செம்பருத்திப் பூ விநாயகர் மற்றும் காளிக்கு ஏற்றது. தெய்வீக தன்மை கொண்டது. தோட்டத்தில் அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் வளர்ப்பதால் வீட்டில் நிலையான தன்மை, மகிழ்ச்சி, நல்ல ஆற்றல் வாழ்வில் எப்போதும நிறைந்திருக்கும். மஞ்சள் செம்பருத்தி அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வாஸ்து செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, மனஅழுத்தம் குறைந்து, சுற்றுச்சூழல் சுத்தமாகிறது. இது செல்வ வளம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவுகிறது.

துளசி, மூங்கில், ரப்பர் செடி, மணிபிளான்ட் ஆகியவை செல்வ வளம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் முக்கிய வாஸ்து செடிகளாகும். குறிப்பாக மணிபிளான்ட் பணப் பிரச்சனைகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது.

ஆம், துளசி, மூங்கில், ரப்பர் செடி, மணிபிளான்ட் போன்ற பல வாஸ்து செடிகள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி, வீட்டில் தூய்மையான காற்றை உறுதி செய்கின்றன.

Our Other Services