மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரத்திற்கும் மனிதர்களின் வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நமது உடல் எப்படி பஞ்சபூதங்களால் ஆனதோ, அதே போல் வாஸ்து சாஸ்திரமும் பஞ்ச பூதங்கள், திசைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். வீட்டின் வாஸ்துவிற்கும் அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதை ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். வீட்டில் ஏற்படும் வாஸ்து குறைபாடுகளால் உருவாகும் உடல்நலப் பிரச்சனைகளையும் அவற்றிற்கான காரணங்களையும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் முக்கிய உடல்நலக் குறைபாடுகள்
நாம் குடியிருக்கும் வீடு, வேலை செய்யும் அலுவலகம் போன்ற அனைத்து இடங்களும் வாஸ்து சாஸ்திர முறைப்படி, எந்த வித வாஸ்து குறைபாடும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதா என்றால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். என்ன தான் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பார்த்து பார்த்து வீடு கட்டி இருந்தாலும் நம்மையும் அறியாமல் ஏதாவது குறை ஏற்பட்டு விடுவது சகஜம் தான். இந்த குறைபாடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்:
- பொருளாதார இழப்பு: வாஸ்து குறைபாடு இருந்தால் பொருளாதார இழப்பு ஏற்படும்.
- வீட்டில் அமைதியின்மை: குடும்பத்தில் அமைதி குறையும்.
- சுப காரிய தடை: சுப காரியங்கள் தடைபடும்.
- தொழில் முடக்கம்: தொழில் வளர்ச்சி குன்றும்.
- உடல்நலக் குறைபாடுகள்: குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
பெண்களின் ஆரோக்கியத்தில் வாஸ்துவின் பங்கு
ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த வீட்டில் முதலில் பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் தான். வீட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய திசைகளில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த திசைகள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தென்கிழக்கு திசை குறைபாடுகள்
தென்கிழக்கு திசையில் கழிவறை, படுக்கை அறை, மூலை சேதமடைந்து, குப்பையாக இருந்தால் வீட்டில் உள்ள பெண்களுக்கு உடல்நிலையில், குறிப்பாக கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதோடு தொடர் மருத்துவ செலவுகள், குழந்தையின்மை, அறுவை சிகிச்சை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கிழக்கு திசை குறைபாடுகள்
கிழக்கு திசையில் குறைபாடு இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களின் மன ஓட்டம், எண்ணங்களை பாதிக்கும். மனநிலை பாதிக்கப்படுவது, மந்தம், தடுமாற்றம், மறதி, பதற்றம் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கும் கூட அது காரணமாகி விடும். பெண்கள் கிழக்கு நோக்கி நின்று சமைக்கும் வகையில் சமையலறை அமைக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு (ஈசான்ய மூலை) முக்கியத்துவம்
வடகிழக்கு பகுதி என்பது சிவ பெருமான் வசிக்கும் ஈசான்ய மூலை எனப்படும். இது பூஜை அறை அமைப்பதற்கான இடமாகும். ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. இங்கு அமைத்தால் வீட்டில் தீய பலன்கள் மட்டுமே ஏற்படும்.
குடும்ப தலைவன், தலைவி படுத்தும் உறங்கும் அறை, குளியலறை, கழிவுநீர் தொட்டி, படிக்கட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி, இன்வேர்ட்டர் யுபிஎஸ், மின்சார பாக்ஸ், ஜெனரேட்டர் ஆகியவை கண்டிப்பாக இங்கு வைக்கக் கூடாது. வாஸ்து குறித்த தகவல்களுக்கு ஜோதிடம் 360 பக்கத்தை பார்க்கவும்.
தமிழ் கலாச்சாரத்தில் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் ஒரு அங்கமாக இருப்பதைக் காணலாம். பழமையான முருகன் ஆலயங்கள் கூட சரியான வாஸ்து அமைப்போடு கட்டப்பட்டிருக்கும்.