விநாயகர் வழிபாடு என்பது எளிமையும் ஆழமான பலன்களையும் கொண்டது. விநாயகப் பெருமான் எந்த வடிவத்தில், எந்தப் பொருளால் வழிபடப்பட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு அருள் புரியக்கூடியவர். அருகம்புல் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை, பக்தியுடன் படைக்கப்படும் அனைத்தும் அவருக்குப் பிரியமானவை. நாம் எந்த பலனை வேண்டி வழிபடுகிறோமோ, அதற்குரிய பொருளால் விநாயகர் உருவத்தை அமைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். விநாயகரை வழிபடுவதன் முக்கியத்துவம் மற்றும் வெவ்வேறு பொருட்களால் ஆன விநாயகர் உருவங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.
விநாயகர் வழிபாட்டின் பொதுவான நன்மைகள்
விநாயகப் பெருமான் எளிமையான கடவுள். பக்தியுடன் ஒரு சிறு அருகம்புல் அல்லது வாழைப்பழத்தை நைவேத்தியமாகப் படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு, வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான நலன்களையும் அருளக் கூடியவர் பிள்ளையார். அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். மேலும், கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்வது சிறப்பு. இது எதுவும் முடியவில்லை என்றாலும், எளிமையாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மட்டும் வைத்து வழிபடலாம்.
பொருட்களால் ஆன விநாயகர் வழிபாட்டு பலன்கள்
விநாயகரை எப்படி வழிபட்டாலும் அவரது அருள் கிடைக்கும் என்றாலும், அவரது உருவம் எந்தப் பொருளால் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். நமக்கு என்ன தேவையோ அல்லது எந்தக் குறை தீர வேண்டுமோ, அதற்குரிய பொருளால் விநாயகர் செய்து வைத்து வழிபடுவதால் விரைவில் பலன் கிடைக்கும். எந்தப் பொருளைக் கொண்டு விநாயகரின் உருவத்தை செய்து வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்:
- வெட்டிவேர் விநாயகர்: கண் திருஷ்டி நீங்கும், வெற்றி கிடைக்கும்.
- வெள்ளெருக்கு வேரினால் செய்த விநாயகர்: புண்ணியம் பெருகும், வீட்டில் சகல செளபாக்கியங்களும் நிறைந்திருக்கும்.
- பாதரச விநாயகர்: புத்திக் கூர்மை அதிகரிக்கும்.
- நவதானிய விநாயகர்: வீட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது.
- மரகத விநாயகர்: கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
- மஞ்சள் பிள்ளையார்: சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
- குங்குமத்தால் செய்த பிள்ளையார்: செவ்வாய் தோஷம் நீங்கும்.
- புற்று மண்ணால் செய்த பிள்ளையார்: நோய்கள் அகலும்.
- திருநீரால் செய்த பிள்ளையார்: உஷ்ண நோய்கள் நீங்கும்.
- உப்பால் செய்த பிள்ளையார்: எதிரிகள் தொல்லை நீங்கும்.
- சந்தனத்தால் செய்த பிள்ளையார்: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- பசுவின் சாணத்தால் செய்த பிள்ளையார்: சகல தோஷங்களும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி ஏற்படும்.
- வெண்ணெய்யில் செய்த பிள்ளையார்: கடன் தொல்லை தீரும்.
- களிமண்ணால் செய்த பிள்ளையார்: உயர் பதவிகள் கிடைக்கும்.