இந்த மந்திரங்கள் பலருக்கும் பிரபலமானவையாக இருந்தாலும், அவற்றின் உண்மையான ஆற்றல் மற்றும் ஜோதிட ரீதியான பலன்கள் பலருக்கும் தெரிவதில்லை. வாழ்க்கையை மாற்றக்கூடிய அதீத சக்தி படைத்த குறிப்பிட்ட 7 மந்திரங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். இந்த அற்புதமான மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் அமைதி, தெளிவு மற்றும் வெற்றி பெறலாம்.
மந்திரங்கள் செய்யும் அற்புதங்கள்
மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் நல்ல அதிர்வுகளை உருவாக்கி, மனதையும் உடலையும் பிரபஞ்சத்துடன் இணைக்கக் கூடியவை. இவை நம்மை எந்த ஒரு தீமைகளும், ஆபத்துக்களும் நெருங்காமல் கவசம் போல் காக்கக் கூடியவையாக இருக்கும். மனதை தெளிவாக்கி, பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவை என்பதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உணர முடியும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இந்த சக்திவாய்ந்த மந்திரங்கள் பெரும் பலன்களை அளிக்கின்றன.
வாழ்க்கையை மாற்றக் கூடிய அந்த 7 அற்புதமான மந்திரங்கள் எவை, அந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
வாழ்க்கையை மாற்றும் 7 சக்திவாய்ந்த மந்திரங்கள்
1. மஹா மிருத்யுஞ்சய மந்திரம்
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மரணத்தை வெல்ல உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த மந்திரம் அகால மரணத்திலிருந்து பாதுகாக்கிறது, வலியை குணப்படுத்துகிறது, துன்பப்படுபவர்களுக்கு அமைதியைத் தருகிறது. இந்த மந்திரத்தின் ஒலிகள் மனதை அமைதிப்படுத்துகின்றன. பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட உதவுகின்றன. ஜோதிட ரீதியாக நோய் நொடிகளிலிருந்து பாதுகாக்கவும், ஆயுளை நீட்டிக்கவும் இது உகந்த மந்திரமாகும்.
2. காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம் சூரியனின் ஒளியை போற்றும் ஒரு பிரார்த்தனை. இது மனதை தெளிவுபடுத்த உதவுகிறது. காயத்ரி மந்திரத்தில் பல வகைகள் உள்ளன; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துடன் தொடர்புடையது. கணேஷ் காயத்ரி மந்திரம் ஞானம், செழிப்பு மற்றும் தடைகளை நீக்க பயன்படுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஆன்மீக வளர்ச்சி, தெளிவு மற்றும் வெற்றி கிடைக்கும். மேலும் கடவுளுடன் ஒரு பிணைப்பு ஏற்படும். இந்த தமிழ் மண்ணில் பலரும் இம் மந்திரத்தை உச்சரித்து பலன் பெறுகின்றனர்.
3. ஹனுமான் சாலிசா
ஸ்ரீ ஹனுமான் சாலிசா 16 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரால் எழுதப்பட்ட ஒரு பக்தி கவிதை. இது 'ராமசரிதமானஸ்' என்ற காவியத்தின் ஒரு பகுதி. இது ஹனுமானின் பெருமையை 40 வசனங்களில் கூறுகிறது. இந்த புனிதமான பாடலை பக்தர்கள் வலிமை, வீரம் மற்றும் பாதுகாப்பிற்காக உச்சரிக்கிறார்கள். இது ஆறுதல், அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியைத் தருகிறது. மேலும் கடவுளுடன் ஒரு உள் பிணைப்பை உருவாக்குகிறது. முருகனை வழிபடுபவர்கள் ஹனுமான் சாலிசா படிப்பதும் சிறப்பு.
4. சரஸ்வதி வந்தனா
சரஸ்வதி வந்தனா, சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை. சரஸ்வதி தேவி அறிவு, ஞானம் மற்றும் கலைகளின் அடையாளமாக இருக்கிறார். ஒரு பிரபலமான வரியில், வெள்ளை நிறத்தில் வீணை வாசிக்கும் சரஸ்வதி தேவியை வெள்ளை தாமரையில் அமர்ந்திருப்பதாக வர்ணிக்கிறார்கள். இந்த மந்திரம் மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவு தேடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சரஸ்வதி வந்தனா கவனம், நினைவாற்றல் மற்றும் புரிதலை அதிகரிக்கிறது. இது ஆன்மீக ரீதியாக வளரவும், கல்வியில் சிறந்து விளங்கவும் உதவுகிறது. சனாதன தர்மத்தில் வெற்றி, செழிப்பு, நேர்மறை மற்றும் தைரியத்தை ஈர்க்கும் பல மந்திரங்கள் உள்ளன.
5. துர்கா சப்தஷதி
துர்கா சப்தஷதி, தேவி மஹாத்மியம் என்றும் அழைக்கப்படுகிறது. இது துர்கா தேவியின் சக்தியைப் புகழ்ந்து பாடும் 700 வசனங்களின் தொகுப்பு. இந்த வசனங்களை படிப்பதால் தேவியின் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் கடினமான காலங்களில் இது உதவும் என்று நம்புகிறார்கள். ஜோதிட ரீதியாக துர்கா தேவியின் அருள் பெற்று, தீய சக்திகளிலிருந்து தப்ப இது ஒரு சிறந்த வழியாகும்.
6. ஹரே கிருஷ்ணா மஹாமந்திரம்
ஹரே கிருஷ்ணா மஹாமந்திரம் கிருஷ்ணர் மற்றும் ராமரை போற்றும் ஒரு பாடல். இந்த மந்திரம் ஆன்மீக விழிப்புணர்வையும் உள் அமைதியையும் தருகிறது. இது பக்தி யோகா மற்றும் வைஷ்ணவத்தில் மிகவும் பிரபலமானது. ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தை உச்சரிப்பதால் மனம் அமைதியடைகிறது, ஆன்மீக உணர்வு மேம்படுகிறது. இதன் மூலம் கடவுளுடன் ஒரு ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
7. பஜ்ரங் பாண்
ஹனுமான் பஜ்ரங் பாண் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பிரார்த்தனை. இது ஹனுமான் சாலிசாவை விட வலிமையானது என்று கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வலிமை, பாதுகாப்பு மற்றும் தைரியம் கிடைக்கும். பயம் மற்றும் துன்பங்களை வெல்ல முடியும். இதன் வரிகள் துன்பங்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இது துன்பத்தில் இருக்கும்போது ஹனுமானின் தெய்வீக உதவியையும் பாதுகாப்பையும் நாடுபவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த பிரார்த்தனையாகும். குறிப்பாக ஜோதிட ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இம் மந்திரத்தை உச்சரிப்பது நற்பலன் தரும்.