Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆனி திருமஞ்சனம்: நடராஜர் அபிஷேக பலன்கள்

சிவ பக்தர்களுக்கு மிகவும் சிறப்பான நாட்களில் ஒன்று ஆனி உத்திரத்தில் கொண்டாடப்படும் ஆனி திருமஞ்சனம். இந்த ஜோதிடத் தமிழ் தளத்தில் நாம் பல்வேறு ஆலயங்கள், வழிபாடுகள் பற்றி அலசுகிறோம். குறிப்பாக முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் குறித்த தகவல்களும் இங்கே உள்ளன. இந்த சிறப்புமிக்க நாளில் ஆடல் வல்லானான நடராஜ பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், அதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக பலன்களை விரிவாகக் காண்போம்.

நடராஜ பெருமானுக்கு மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்று ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆனி திருமஞ்சனம். அபிஷேகப் பிரியரான சிவ பெருமானுக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் அபிஷேகம் நடத்தப்பட்டாலும், ஆடல் அரசனான நடராஜ பெருமானுக்கு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். இவை அனைத்துமே சிறப்பானது தான் என்றாலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும் செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். வழக்கமாக சிவ பெருமானுக்கு 10, 11 எண்ணிக்கையிலான பொருட்களைக் கொண்டு தான் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்களில் நடராஜருக்கு 22, 40 ஆகிய எண்ணிக்கையிலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்படும். அதனால் தான் இதனை மகா அபிஷேகம் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகும். ஆனி உத்திர திருமஞ்சனத்தை தரிசனம் செய்தாலும், இந்த அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும் நமக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும்.

நடராஜர் அபிஷேக பொருட்களும், பலன்களும்:

  • பச்சரிசி மாவு - கடன் தீரும்
  • தண்ணீர் - மன அமைதி
  • பஞ்சகவ்யம் - ஆத்ம சுத்தி
  • நல்லெண்ணெய் - பக்தி
  • சந்தனாதி தைலம் - சிவ பதம்
  • வாழைப்பழம் - சகல வசியம், செழிப்பு
  • பலாப்பழம் - உலக வசியம்
  • திராட்சை - பயம் போக்கி தேக ஆரோக்கியம் தரும்
  • மாதுளம் பழம் - கோபம் நீங்கும்
  • தம்ரத்தம் - பூமி லாபம்
  • நார்த்தம் பழம் - நல்ல புத்தி
  • தேங்காய் துருவல் - அரசு உரிமை
  • சர்க்கரை - பகை நீக்கும்
  • பஞ்சாமிர்தம் - தீர்க்க ஆயுள்
  • தேன் - சங்கீத வன்மை
  • நெய் - மோட்சம் தரும்
  • பால் - ஆயுள் விருத்தி
  • எலுமிச்சம் பழச்சாறு - யம பயம் போக்கும்
  • இளநீர் - புத்திரப் பேறு கிட்டும்
  • கரும்புச்சாறு - சாஸ்திர தேர்ச்சி, ஆரோக்கியம்
  • வாசனை திரவியப் பொடி - ஆயுள் விருத்தி
  • மஞ்சள் பொடி - ராஜ வசியம்
  • நெல்லி முல்லிப் பொடி - நோய் நீக்கும்
  • அன்னம் - ஆயுள், ஆரோக்கியம்
  • கோரோசனை - ஜபம் சித்தியாகும்
  • கஸ்தூரி மஞ்சள் - வெற்றி உண்டாகும்
  • திருநீறு - ஞானத்தை தரும்
  • பச்சை கற்பூரம் - நல்வாழ்வு தரும்
  • சந்தனம் - செல்வம், சொர்க்க போக வாழ்க்கை
  • வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தம் - தீவினைகளை போக்கும்
  • சொர்ண அபிஷேகம் - வைராக்கியம் உண்டாகும்
  • கும்ப நீர் அபிஷேகம் - அஸ்வமோத யாகம் செய்த பலன்
  • தயிர் - மகப்பேறு உண்டாக்கும்
  • சாத்துக்குடி சாறு - துயரங்களை போக்கும்
  • மாம்பழம் - செல்வம், வெற்றியை தரும்
  • பன்னீர் - சரும நோய்களை நீக்கும்
  • பேரிச்சை - பகைவர்கள் இல்லாத நிலையை தரும்
  • நாவல் பழம் - மனோ பலம்
  • நவரத்தின ஜலம் - தன, தானிய பெருக்கம், வீடு, மனை யோகம்
  • புது வஸ்திரம் - ராஜபோகம்
  • மலர்களால் அர்ச்சனை - மகிழ்ச்சி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகமே ஆனி திருமஞ்சனம். இது சிவனுக்கு நடத்தப்படும் ஆறு முக்கியமான அபிஷேகங்களில் ஒன்றாகும். இதன் மூலம் பல்வேறு ஜோதிடப் பலன்களையும் பெறலாம்.

நடராஜ பெருமானுக்கு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். இவற்றில் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவை அனைத்து முருகன் ஆலயங்கள், சிவன் ஆலயங்கள் அனைத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

நடராஜர் அபிஷேகத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட பலன் உண்டு. உதாரணமாக, பச்சரிசி மாவு கடன் தீர்க்கும், தேன் சங்கீத வன்மை தரும், பால் ஆயுள் விருத்தி செய்யும், இளநீர் புத்திரப்பேறு கிட்டும். இவை தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியம்.

Our Other Services