மகாபாரத காவியத்தில் நீதிக்கும், தர்மத்திற்கும் உறுதுணையாக நின்ற வீரமிக்க திரௌபதி அம்மனை போற்றும் 108 சக்திவாய்ந்த போற்றி மந்திரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இந்த துதிகளை உச்சரிப்பதன் மூலம் அன்னை திரௌபதியின் அருளைப் பெற்று, வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.
திரௌபதி அம்மன் 108 போற்றி மந்திரங்களின் முழுப் பட்டியல்
தினமும் காலையிலும் மாலையிலும் இந்த 108 போற்றி மந்திரங்களை பாராயணம் செய்து திரௌபதி அம்மனின் பேரருளைப் பெறுங்கள்:
- 1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- 2. ஓம் அக்னிக் கொழுந்தே போற்றி
- 3. ஓம் அஜாதசத்ரு நாயகியே போற்றி
- 4. ஓம் அஸ்வமேத யாகம் கண்டவளே போற்றி
- 5. ஓம் அஞ்ஞான வாசம் செய்தவளே போற்றி
- 6. ஓம் அக்ஷய பாத்திரம் அடைந்தவளே போற்றி
- 7. ஓம் அந்தரத்தில் அலகே போற்றி
- 8. ஓம் அம்பாலிகைக் குலச் சுடரே போற்றி
- 9. ஓம் அம்பிகையே போற்றி
- 10. ஓம் அரவான் அன்னையே போற்றி
- 11. ஓம் அருந்தவ நாயகியே போற்றி
- 12. ஓம் அலகின் அழகே போற்றி
- 13. ஓம் அலகு பானையில் அற்புதமே போற்றி
- 14. ஓம் அற்புத வடிவழகே போற்றி
- 15. ஓம் அன்னை வடிவானவளே போற்றி
- 16. ஓம் ஆரா அமுதே போற்றி
- 17. ஓம் ஆழியில் அமர்ந்தவளே போற்றி
- 18. ஓம் ஆழியில் ஆடும் கரகமேபோற்றி
- 19. ஓம் இச்சா சக்தியே போற்றி
- 20. ஓம் இந்திராபதி அரசியே போற்றி
- 21. ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
- 22. ஓம் ஈடில்லா நாயகியே போற்றி
- 23. ஓம் உலக நாயகியே போற்றி
- 24. ஓம் ஊழ்வினை களைபவளே போற்றி
- 25. ஓம் எங்கள் குல தெய்வமே போற்றி
- 26. ஓம் எத்திராஜன் சோதரியே போற்றி
- 27. ஓம் ஐவர்க்கரசியே போற்றி
- 28. ஓம் ஒளிரும் மணி விளக்கே போற்றி
- 29. ஓம் ஓதாது உணர்ந்தவளே போற்றி
- 30. ஓம் கங்கா தேவியே போற்றி
- 31. ஓம் கங்கா புத்திரன் போற்றுபவளே போற்றி
- 32. ஓம் கதாயுதன் நாயகியே போற்றி
- 33. ஓம் கமலமுக திருவடிவே போற்றி
- 34. ஓம் கல்யாணியே போற்றி
- 35. ஓம் காடுறையும் கண்மணியே போற்றி
- 36. ஓம் காண்டீபன் நாயகியே போற்றி
- 37. ஓம் காம்யாவன வாசியே போற்றி
- 38. ஓம் காவியக் கண்மணியே போற்றி
- 39. ஓம் கிரியாசக்தியே போற்றி
- 40. ஓம் கிருஷ்னணயே போற்றி
- 41. ஓம் கீசகனை வதைத்தவளே போற்றி
- 42. ஓம் குந்தியின் குலவிளக்கே போற்றி
- 43. ஓம் குமார மக்களைக் காப்பவளே போற்றி
- 44. ஓம் குருஷேத்திரம் கண்டவளே போற்றி
- 45. ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
- 46. ஓம் கூந்தல் முடிந்தவளே போற்றி
- 47. ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
- 48. ஓம் சஹாதேவன் நாயகியே போற்றி
- 49. ஓம் சக்தி ஆயுதன் நாயகியே போற்றி
- 50. ஓம் சக்தி ஸ்வரூபினியே போற்றி
- 51. ஓம் சங்குல யுத்தம் கண்டவளே போற்றி
- 52. ஓம் ஷத்திரிய குல மாதே போற்றி
- 53. ஓம் சத்தியவதியே போற்றி
- 54. ஓம் சத்திய விரதன் நாயகியே போற்றி
- 55. ஓம் சபதம் முடித்தவளே போற்றி
- 56. ஓம் சல்லியவதன் நாயகியே போற்றி
- 57. ஓம் சாட்டையடி தருபவளே போற்றி
- 58. ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
- 59. ஓம் ஷ்யாமளவண்ணன் நாயகியே போற்றி
- 60. ஓம் சௌந்தர்ய வல்லியே போற்றி
- 61. ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
- 62. ஓம் ஞானாம்பிகையே போற்றி
- 63. ஓம் தர்மராஜன் நாயகியே போற்றி
- 64. ஓம் தழலில் குளிப்பவளே போற்றி
- 65. ஓம் தனு வென்றான் நாயகியே போற்றி
- 66. ஓம் திரிபுவனச் செல்வியே போற்றி
- 67. ஓம் தினகரன் சுடர் வடிவே போற்றி
- 68. ஓம் தீயினில் பாய்பவளே போற்றி
- 69. ஓம் துருபதன் மகளே போற்றி
- 70. ஓம் தேவேந்திரன் மகன் நாயகியே போற்றி
- 71. ஓம் நவமணியே போற்றி
- 72. ஓம் நான்கெழுத்து நாயகியே போற்றி
- 73. ஓம் நிருபதி மகளே போற்றி
- 74. ஓம் நெருப்பு பிழம்பினளே போற்றி
- 75. ஓம் படுகளம் காண்பவளே போற்றி
- 76. ஓம் பட்டத்தரசியே போற்றி
- 77. ஓம் பாரத வம்ச விளக்கே போற்றி
- 78. ஓம் பல்குணன் பத்தினியே போற்றி
- 79. ஓம் பாசுபதம் பெற்றான் நாயகியே போற்றி
- 80. ஓம் பாஞ்சாலித் தாயே போற்றி
- 81. ஓம் பாண்டு மைந்தரை மணந்தவளே போற்றி
- 82. ஓம் பாரதப் போர் கண்டவளே போற்றி
- 83. ஓம் பார்த்தனின் நாயகியே போற்றி
- 84. ஓம் பால் அபிஷேகியே போற்றி
- 85. ஓம் ப்ருதையின் மகளே போற்றி
- 86. ஓம் பிள்ளைக்கனி தருபவளே போற்றி
- 87. ஓம் புரந்தரியே போற்றி
- 88. ஓம் பொன் அரங்கமே போற்றி
- 89. ஓம் போஜராஜன் தொழுபவளே போற்றி
- 90. ஓம் மங்கள நாயகியே போற்றி
- 91. ஓம் மஞ்சள் நீராடுபவளே போற்றி
- 92. ஓம் மரகதவல்லியே போற்றி
- 93. ஓம் மரவுரி அணிந்தவளே போற்றி
- 94. ஓம் மாசிலாமணியே போற்றி
- 95. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
- 96. ஓம் மாதரி புத்திரன் மனையாளே போற்றி
- 97. ஓம் மாயோன் தங்கையே போற்றி
- 98. ஓம் முகுந்தன் சோதரியே போற்றி
- 99. ஓம் முரசகேது நாயகியே போற்றி
- 100. ஓம் ராஜசூயம் கண்டவளே போற்றி
- 101. ஓம் வனவாசம் புரிந்தவளே போற்றி
- 102. ஓம் வாயு மைந்தனின் நாயகியே போற்றி
- 103. ஓம் விஜயன் நாயகியே போற்றி
- 104. ஓம் வியாச காவிய நாயகியே போற்றி
- 105. ஓம் விருகோதரன் விறலியே போற்றி
- 106. ஓம் வினைகள் களைபவளே போற்றி
- 107. ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி போற்றி
- 108. ஒம் அருள்மிகு திரௌபதியம்மன் சமேத தர்மராஜாவே போற்றி
ஓம் அருள்மிகு திரௌபதியம்மன் சமேத தர்மராஜாவே போற்றி போற்றி!
திரௌபதி அம்மன் வழிபாடு: முக்கியத்துவமும் பலன்களும்
திரௌபதி அம்மன், மகாபாரத காவியத்தில் பாண்டவர்களின் பத்தினியாகவும், அக்னியில் தோன்றிய சக்தியின் அம்சமாகவும் போற்றப்படுகிறார். இவரை வணங்குவதன் மூலம், குடும்பத்தில் ஒற்றுமை, எதிரிகள் மீது வெற்றி, உடல் ஆரோக்கியம், மன அமைதி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, பெண்கள் திரௌபதி அம்மனை வழிபடுவதன் மூலம் தங்கள் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று, மங்கலமான வாழ்வு அமையும்.
- குடும்ப ஐஸ்வர்யம் மற்றும் சந்தோஷம்
- துன்பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும்
- எதிரிகளின் தொல்லைகள் அகலும்
- வீரத்தையும் தைரியத்தையும் தரும்
- திருமணத் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும்
இந்த போற்றி மந்திரங்களைச் சொல்லி அன்னையை வழிபட்டு நற்பலன்களைப் பெறுங்கள்.