ஓமம் (Carom seeds) என்பது நம் தமிழ் பாரம்பரியத்தில் ஒரு மிக முக்கியமான மூலிகை. குறிப்பாக, உப்புடன் சேர்த்து ஓமத்தை மெல்லுவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு எளிய, பயனுள்ள தீர்வாக அமைகிறது. இந்த இயற்கை வைத்தியத்தின் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை இந்த தமிழ் வைத்தியம் பற்றிய கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
ஓமம் மற்றும் உப்பின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
ஓமம் பெரும்பாலும் வயிறு சார்ந்த எல்லா வகை பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும். குறிப்பாக வயிறு வீக்கம், வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, அமில ரிஃப்ளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாகும். அதனாலேயே எல்லோருடைய வீடுகளிலும் நம் முன்னோர்கள் காலத்தில் ஓம வாட்டரை வைத்திருப்பார்கள்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த
நீரிழிவு நோயாளிகள் காலை நேர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்டவற்றோடு சேர்த்து ஓமத்தையும் கலந்து டீயாக செய்து குடிப்பார்கள். ஆனால் வெறும் ஓமம் விதைகளை சிறிது உப்பு சேர்த்து வெறும் வாயில் மென்று சிறிது சிறிதாக உமிழ்நீரை விழுங்கி வரும்போது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். இது ஒரு சிறந்த தமிழ் வீட்டு வைத்தியம் ஆகும்.
செரிமான ஆற்றலை மேம்படுத்த
ஓமத்தை சிறிது உப்பு சேர்த்து வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிடும்போது அதன் சாறு உணவுகளை உடைத்து செரிமான நொதிகளைச் சுரக்கச் செய்யும். இதன் காரச்சுவை குடலின் அமிலச் சுரப்பை மேம்படுத்தி ஜீரணத்தைத் துரிதப்படுத்தும். இது சிறந்த செரிமான மேம்பாட்டு வழி.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி
குழந்தைகளுக்கு ஓம வாட்டர் எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லது. கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனாலும் சிறிது ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை உப்பு கலந்து கொடுங்கள். அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியை இது குறைக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு இது ஒரு எளிய தீர்வு.
குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே குடல் புழுக்கள் பிரச்சினை இருக்கும். அதற்கு உணவுமுறை மிக முக்கியம். அதேபோல குடல் கழிவுகளின் தேக்கமும் ஒரு காரணம். குடல் புழுக்கள் அதிகமாக இருக்கும்போது, பெரியவர்கள் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு படுக்கச் செல்லும்முன் ஒரு ஸ்பூன் ஓமத்தோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிடலாம். குழந்தைகளுக்கு உப்பு சேர்க்காமல் சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஓமத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி, மூச்சுத் திணறல் பிரச்சினையை சரிசெய்யும். ஆனால் முறையான மருத்துவ சிகிச்சையோடு இதை சப்ளிமெண்ட் போல துணை சிகிச்சையாக எடுப்பது நல்லது. இது சுவாசக் கோளாறுகளுக்கு ஒரு பாரம்பரிய தமிழ் தீர்வு.
நோயெதிர்ப்பு மண்டலம் பலப்பட
ஓம விதைகளில் ஏராளமான ஆற்றல் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. ஓம விதைகளில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளும் இருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடல்நலத்திற்கு இது ஒரு சிறந்த வலுவூட்டும் மூலிகை.
முக்கிய குறிப்பு
மேற்கண்ட ஓம விதையோடு உப்பை சேர்த்து மென்று சாப்பிடும் வீட்டு வைத்தியம் ஒரு துணை மருந்து உணவு தானே தவிர, அது நேரடியாக எந்தவித பிரச்சினைக்கும் மருத்துவ சிகிச்சைக்கு இணையான சிகிச்சை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தீவிர மருத்துவ தேவைகளுக்கு எப்போதும் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம்.