உங்கள் வீட்டில் உள்ள முருகன் அல்லது வேறு எந்த தெய்வத்தின் சிலைகளுக்கும் தெய்வீக சக்தியை நிலைநிறுத்தவும், புதுப்பிக்கவும் அபிஷேகம் செய்வது மிகவும் அவசியம். இந்த பதிவு, வீட்டில் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் முறைகளையும், ஒவ்வொரு அபிஷேகப் பொருளுக்கும் கிடைக்கும் பலன்களையும் தெளிவாக விளக்குகிறது. சரியான முறையில் வழிபாடு செய்து, தெய்வ அருளைப் பெறுங்கள்!
சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதன் முக்கியத்துவம்
பலரது வீடுகளில் பூஜை அறையில் சாமி படங்களுடன் சில சாமிகளின் சிலைகளையும் வாங்கி வைத்து வழிபடுவது உண்டு. வீட்டில் சாமி சிலைகளை ஏற்கனவே வாங்கி வைத்து வழிபட்டாலும், புதியதாக வாங்கி வைத்தாலும் அவற்றில் உள்ள தெய்வீக சக்தி குறையாமல் இருக்கவும், புதிதாக வாங்கிய சிலைகளில் தெய்வீக சக்திகளை நிலைபெற செய்யவும் சில வழிபாடுகளை நாம் கண்டிப்பாக செய்தே தீர வேண்டும். வீட்டில் சாதாரணமாக சாமியின் படத்தை மட்டும் வைத்து வழிபட்டால் அவற்றில் பூ போட்டு, விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தால் கூட போதுமானது தான். ஆனால் நீங்கள் சிலை வழிபாடு செய்வதாக இருந்தால் கண்டிப்பாக சில வழிமுறைகளை செய்தே தீர வேண்டும்.
எந்த சாமியின் சிலை வைத்து வழிபட்டாலும் தினமும் ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து தான் வழிபட வேண்டும். குறைந்தபட்சம் சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்தாவது நைவேத்தியம் செய்தே தீர வேண்டும். அதை விட மிக முக்கியமானது, வீட்டில் இருக்கும் சாமி சிலைகளுக்கு அதற்கு உகந்த நாட்களில் மாதம் ஒரு முறையாவது குறைந்தது 3 அல்லது 6 அல்லது 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து சக்தியை புதுப்பிக்க வேண்டும். தினமும் அபிஷேகம் செய்வது அல்லது வாரத்திற்கு ஒருமுறை அபிஷேகம் செய்வது மிக சிறப்பு. அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து, அந்த தெய்வத்திற்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 3 முறையாவது சொல்லி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அந்த தெய்வத்தின் சக்தி அந்த சிலையை நிலைபெறுவதை உங்களால் உணர முடியும்.
அபிஷேகம் என்பது விக்ரகங்களுக்கு சக்தியை புதுப்பிக்க முறைப்படி செய்யும் ஒரு சடங்கு ஆகும். கோவிலில் மட்டுமல்ல வீட்டிலும் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களை பொருத்து பலன்கள் மாறுபடும். எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு, செய்தால் அந்த தெய்வத்தின் அருளை பெறுவதுடன், நம்முடைய வேண்டுதலும் விரைவில் நிறைவேறும். குறிப்பாக முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் போன்ற இடங்களில் இந்த ஜோதிடம் சார்ந்த தமிழ் மரபு மிக முக்கியம்.
அபிஷேகமும் அதன் பலன்களும்
ஒவ்வொரு அபிஷேகப் பொருளும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரும். அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- 1. தண்ணீர்மன அமைதி
- 2. பால்நீண்ட ஆயுள்
- 3. தேன்துன்பம் நீங்கும்
- 4. தயிர்குழந்தைப்பேறு
- 5. நெய்நோய் தீர்க்கும்
- 6. இளநீர்இல்லம் காக்கும்
- 7. மஞ்சள்கடன் நீங்கும்
- 8. சந்தனம்செளபாக்கியம் தரும்
- 9. குங்குமம்மங்களம் தரும்
- 10. திருநீறுதொழில் வளர்ச்சி
- 11. திருமஞ்சனம்தேக சுகம் தரும்
- 12. மாம்பழச்சாறுஎம பயம் நீக்கும்
- 13. கரும்புச்சாறுஆரோக்கியம்
- 14. பஞ்சாமிர்தம்பயம் போகும்
- 15. மூலிகை நீர்முக்தி
- 16. வாசனை நீர்வைராக்கியம் தரும்
- 17. அரிசி மாவுஅபயம் அளிக்கும்
- 18. பஞ்சகவ்யம்பாவம் போக்கும்
- 19. எலுமிச்சை சாறுபல வினை தீர்க்கும்
- 20. வாழைப்பழம்பயிர் செழிக்கும்
- 21. மாதுளம் பழம்கோபம் நீங்கும்
- 22. பச்சை கற்பூரம்நல்வாழ்வு தரும்
- 23. மா பொடிஅரசு வேலை
- 24. பன்னீர்சரும நோய் நீங்கும்
- 25. வஸ்திரம்ராஜயோகம் தரும்