திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி, பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற ஒரு புண்ணிய நாளாகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் இருப்பது போல் ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு உத்பன்ன ஏகாதசி என்று பெயர். இந்த ஆண்டு உத்பன்ன ஏகாதசி விரதம் நவம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. ஏகாதசி தேவி, இந்த நாளில் தான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த உத்பன்ன ஏகாதசி நாளில் பக்தியுடன் விரதம் இருப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அதிர்ஷ்டம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும் என தமிழ் ஜோதிடம் கூறுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் போது ஏகாதசி தேவியையும், துளசி தேவியையும் வழிபடுவது அவசியம்.
உத்பன்ன ஏகாதசி நாளில் துளசி செடிக்கு முக்கியமான 5 பரிகாரங்களை செய்வதால் வாழ்க்கையில் நல்ல மாற்றம், அதிர்ஷ்டம் ஏற்படும். பணக் கஷ்டம் தீர இந்த பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளவை. ஜோதிட ரீதியாக இவை உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.
உத்பன்ன ஏகாதசியில் செய்ய வேண்டிய 5 சக்திவாய்ந்த பரிகாரங்கள்:
- துளசி வேரில் பால் மற்றும் நெய் விளக்குஏகாதசி திதி அன்று துளசி செடியின் வேருக்கு சிறிதளவு பால் ஊற்றி வழிபடுவது மிகவும் மங்களகரமானதாகும். பால் ஊற்றிய பிறகு, துளசி செடிக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வைத்து, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதால் பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தையும், பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்புக்களையும் பெற முடியும். இது ஒரு சிறந்த பணக் கஷ்டம் தீர்க்கும் பரிகாரம்.
- துளசி செடியை சுற்றி வருதல்ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து, சுத்தமாக குளித்து முடித்த பிறகு, துளசி செடியை ஏழு முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். "ஜெய் ஸ்ரீஹரி" என்ற மந்திரத்தை சொல்லியபடியே சுற்றி வர வேண்டும். துளசி செடியை சுற்றி சிவப்பு நிற நூலால் கட்ட வேண்டும். இப்படி செய்வதால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, அதிர்ஷ்டம் பெருகும்.
- துளசி மாதா பூஜைதுளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு துளசி மாதாவிற்கு குங்குமம், வளையல், கண்ணாடி, சிவப்பு நிற வஸ்திரம் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களை படைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தருவதுடன், மகாலட்சுமி நிரந்தரமாக அந்த வீட்டில் வாசம் செய்வாள். இந்த வழிபாடு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை கொண்டு வரக் கூடியதாகும். ஜோதிட ரீதியாக இது பண வரவை மேம்படுத்தும்.
- பணக் கஷ்டம் தீர துளசி இலைகள்தீராத பணக் கஷ்டம், வெளி வர முடியாத மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால் உத்பன்ன ஏகாதசி அன்று சில துளசி இலைகளை எடுத்து சிவப்பு நிற துணியில் சுற்றி, நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இது பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய பரிகாரம் ஆகும். அதோடு பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
- வறுமை நீங்க லட்சுமி சாலீசாவீட்டில் இருந்து வறுமை நிலையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பவர்கள், துளசி செடிக்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைத்து, உத்பன்ன ஏகாதசி அன்று காலை மற்றும் மாலை இரு வேளையும் லட்சுமி சாலீசா படித்து வழிபட வேண்டும். அதோடு 11 துளசி இலைகளை படைத்து துளசி பூஜை செய்வது கூடுதல் சிறப்பானதாகும். இது ஜோதிட பரிகாரங்களில் மிக முக்கியமானது.