செல்வ வளம் பெருகவும், கையில் பணம் நிற்கவும், சேமிப்பு அதிகரிக்கவும் பலரும் வழி தேடுகின்றனர். சம்பாதித்த பணம் செலவாகி விடுவதாக பலரும் ஆதங்கப்படுகின்றனர். உங்களிடம் பணத்தை ஈர்க்கும் காந்த சக்தி ஏற்படவும், அளவில்லாத செல்வ வளம் கிடைக்கவும் ஆன்மீகத்தில் சக்திவாய்ந்த மந்திர பரிகாரம் ஒன்று உள்ளது. ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
செல்வத்தை ஈர்க்கும் ரகசிய மந்திரம்: "ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ"
பணம் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. கையில் பணம் நிற்பதே இல்லை என்ற புலம்பல்களுக்கு தீர்வு காண, பணம் மற்றும் தங்கத்தை ஈர்க்கும் காந்த சக்தி உங்களிடம் ஏற்பட, ஆன்மீகத்தில் "ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ" என்ற சக்திவாய்ந்த மந்திரம் சொல்லப்படுகிறது. இது தங்கம் மற்றும் அளவில்லாத செல்வ வளத்தை தரும் தேவ- தேவதைகளுக்கு உரிய மந்திரமாகும்.
இந்த மந்திரம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு ஸ்வர்ண ரட்சகரின் அருள் நிறையும். அவர் மனம் மகிழ்ந்து, தன்னுடைய அருளை அளவில்லாமல் வழங்குவார். இந்த ஜோதிட பரிகாரம் மூலம் செல்வச் செழிப்பை அடையலாம்.
மந்திரம் உச்சரிக்கும் முறை மற்றும் பலன்கள்:
- தினமும் காலை அல்லது மாலையில் குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
- வீட்டின் பூஜை அறையில் நெய் விளக்கேற்றி வைத்து மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும்.
- அவசர அவசரமாக சொல்லாமல், நிதானமாக, நம்பிக்கையுடன் உச்சரிக்க வேண்டும்.
- மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை, குபேரருக்கு உரிய வியாழக்கிழமை, சுக்கிர ஹோரைகளில் சொல்வது மிகவும் சிறப்பு.
- அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் வழக்கமான 11 முறைகளைத் தாண்டி, உங்களால் முடிந்த அளவு அதிக முறை சொல்லலாம்.
இந்த பணம் ஈர்க்கும் மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், உங்களால் நம்ப முடியாத அளவிற்கு பணம் அல்லது தங்கம் ஏதாவது ஒரு வழியில் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். நேர்மறை ஆற்றல்கள் உங்களை நோக்கி வருவதை நீங்களே உணர முடியும். நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நிச்சயம் பலன் தரும். ஜோதிடம் கூறும் இந்த எளிய பரிகாரம் உங்கள் செல்வ நிலையை மாற்றும்.