Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

புளிய விதைகளால் மூட்டு வலிக்கு இயற்கை நிவாரணம்

ஜோதிடம்360.இன் (Jothidam360.in) வழங்கும் இந்த கட்டுரையில், மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு புளி எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது என்பதை விரிவாகக் காணலாம். பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் உள்ள புளி, எலும்பு ஆரோக்கியத்தையும் தசை செயல்பாட்டையும் மேம்படுத்தும் சத்துக்களைக் கொண்டுள்ளது. இது மூட்டு வலியுடன் தொடர்புடைய விறைப்பு மற்றும் அசெளகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

மூட்டு வலிக்கு புளியின் முக்கியத்துவம்

மூட்டுகளில் வலி, நடக்கும் போது சத்தம், படிக்கட்டுகளில் ஏறும் போது மூட்டுகளில் அழுத்தம், மூட்டு வீக்கம், சிவந்த நிலை, அழற்சி என உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும், நம் வீட்டில் இருக்கும் புளியை தற்காலிக நிவாரணியாகப் பயன்படுத்தலாம். எலும்பு ஆரோக்கியத்தையும் தசை செயல்பாட்டையும் மேம்படுத்தும் சத்துக்கள் புளியில் நிறைந்துள்ளன. இது மூட்டு வலியுடன் தொடர்புடைய விறைப்பு மற்றும் அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மூட்டுகளில் வலியை குறைத்து உயவுத்தன்மையை மேம்படுத்தி, மென்மையான இயக்கத்தை ஊக்குவிக்க புளி எப்படி உதவுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

கீல்வாத வலிகள்: மருத்துவ சிகிச்சை அவசியம்

கீல்வாத வலிகள் என்பது கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாகும். கீல்வாத மூட்டு வலி உடலில் மூட்டுகள் இருக்கும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். மூட்டு வலி, விறைப்பு மற்றும் வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். ஆரம்ப நிலையில் இவை கைகள், முழங்கால்கள், இடுப்பு அல்லது முதுகெலும்புகளில் தோன்றும். ஓய்வாக இருக்கும் போது வலி நிலை மோசமானதாக இருக்கும். மூட்டுகளுக்கு இயக்கம் கொடுக்கும் போது அது மறைந்துவிடும். சிலருக்கு மூட்டுகள் சிவந்து, உள் புற பகுதியில் சூடாகவும் உணரலாம். இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அவசியம்.

சிகிச்சை என்பது மூட்டு செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துகிறது. எனவே, கீல்வாதம் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதே நேரம், வலி தீவிரமாக இருக்கும் போது அதை தற்காலிகமாக குறைக்க அல்லது மூட்டுகளில் சாதாரண வலி, சுளுக்கு போன்ற நிலைகளில் வீட்டு வைத்தியமாக புளி உதவும்.

கீல்வாத வலிகளுக்கு புளியின் பயன்கள்

புளியில் டானின்கள், ஃப்ளவனாய்டுகள் போன்ற சேர்மங்களும், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்துக்கும் தசை செயல்பாட்டுக்கும் முக்கியமானவை. இதில் உள்ள சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் மூட்டுகளில் அழற்சி ஏற்படுவதைத் தவிர்க்க செய்கிறது. வலியுடன் தொடர்புடைய விறைப்பு மற்றும் அசௌகரியம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

வலிகளால் அவதியுறும் போது, இந்த புளிச்சாற்றை வலியுள்ள இடங்களில் பற்று போடுவது வலியை குறைக்க உதவும்.

புளி பற்று: எளிய செய்முறை

  1. எலுமிச்சையளவு புளியை எடுத்து 10 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும்.
  2. புளியை நன்றாகக் கரைத்து, அதில் மஞ்சள் தூள் கலந்து கொதிக்க விடவும்.
  3. அடுப்பை அணைத்து, புளி கரைசல் இளஞ்சூடான பதத்துக்கு வரும் வரை ஆறவிடவும்.
  4. இந்த இளஞ்சூடான கரைசலை வலியுள்ள மூட்டுகளில் பற்று போல் போடவும் (அதிக சூட்டில் போடக் கூடாது).
  5. 30 நிமிடங்கள் வைத்திருந்து, சுத்தம் செய்து குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம்.

உடலில் கால்களில், கணுக்காலில், தோள்பட்டையில் என எங்கு வலி இருந்தாலும் இந்த பற்று தற்காலிகமாக வலியை குறைக்கும்.

ஆய்வு கூறுவது என்ன?

புளியம் பழத்தின் சதைப்பாகு பானங்கள், இனிப்புகள், குழம்புகள் மற்றும் சாஸ்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இது உலகின் பல பகுதிகளில் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கொட்டைகள் வறுத்து சாப்பிடப்படுகின்றன. புளியங்கொட்டைகள் நீரிழிவு, பாம்பு கடி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, கண் நோய்கள் மற்றும் புண்கள் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மூட்டுவலிக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் NSAIDs மற்றும் DMARDs மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் புளியங்கொட்டை சாறு (TSE) பக்க விளைவுகள் இல்லாமல் மூட்டுவலியை குணப்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. புளியங்கொட்டை சாறு வீக்கத்தை குறைக்கிறது. மேலும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு சேதமடைவதை தடுக்கிறது. ஆனால் இதை உறுதிப்படுத்த மேலும் பல ஆய்வுகள் தேவை.

புளிச்சாறு கீல்வாதத்தை குணப்படுத்துமா?

புளியங்கொட்டை சாறு குருத்தெலும்பு பாதுகாக்கப்பட்டு எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் இந்த புளியம் பழ சாறு அழற்சியை உண்டாக்கும் காரணிகளின் அளவையும் குறைக்கிறது. இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைகிறது. மேலும் புளி, உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் அளவை அதிகரித்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஆய்வின் மூலம் புளியங்கொட்டை சாறு ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு ஒரு சிறந்த மருந்து என்றாலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

புளிச்சாறு உள்ளுக்கு எடுப்பதும், மேற்பூச்சும் வலியை குறைக்கும் என்றாலும் இது தற்காலிகமானது. மேலும் புளியை உணவில் சேர்ப்பது அன்றாட வழக்கத்திலும் உள்ளது என்பதால் இதை தனித்து எடுக்க வேண்டியதில்லை. அதே நேரம், கீல்வாதம் அறிகுறிகள் நிர்வகிக்கவும், வலி தீவிரமாகாமல் தடுக்கவும் மருத்துவ சிகிச்சை உடன் வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்பான வீட்டு வைத்தியங்கள் பின்பற்றலாம். இவையும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு ஜோதிடம்360 பொறுப்பேற்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கண்டிப்பாக, இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம். கீல்வாத மூட்டு வலி என்பது உடலில் மூட்டுகள் இருக்கும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். மூட்டு வலி, விறைப்பு மற்றும் வீக்கம் போன்றவை கீல்வாதத்தின் அறிகுறிகள். ஆரம்ப நிலையில் இவை கைகள், முழங்கால்கள், இடுப்பு அல்லது முதுகெலும்புகளில் தோன்றும். ஓய்வாக இருக்கும் போது வலி நிலை மோசமானதாக இருக்கும். மூட்டுகளுக்கு இயக்கம் கொடுக்கும் போது அது மறைந்துவிடும். இந்நிலையில் சிலருக்கு மூட்டுகள் சிவந்து காணப்படும். உள் புற பகுதியில் மூட்டு சூடாக உணரலாம். இதற்கு சிகிச்சை அவசியம். இது மூட்டு செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துகிறது. அதனால் கீல்வாதம் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

புளி டானின்கள், ஃப்ளவனாய்டுகள் போன சேர்மங்களையும், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளன. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும் தசை செயல்பாட்டுக்கும் முக்கியமானவை. இதில் உள்ள சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் மூட்டுகளில் அழற்சி ஏற்படுவதை தவிர்க்க செய்கிறது. வலிகளுடன் தொடர்புடைய விறைப்பு மற்றும் அசெளகரியம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. வலியால் அவதியுறும் போது இந்த புளிச்சாற்றை வலியுள்ள இடங்களில் பற்று போடுவது வலியை குறைக்க உதவும்.

புளியங்கொட்டை சாறு குருத்தெலும்பு பாதுகாக்கப்பட்டு எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் இந்த புளியம் பழ சாறு அழற்சியை உண்டாக்கும் காரணிகளின் அளவையும் குறைக்கிறது. இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைகிறது. மேலும் புளி, உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் அளவை அதிகரித்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஆய்வின் மூலம் புளியங்கொட்டை சாறு ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு ஒரு சிறந்த மருந்து என்றாலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். புளிச்சாறு உள்ளுக்கு எடுப்பதும், மேற்பூச்சும் வலியை குறைக்கும் என்றாலும் இது தற்காலிகமானது. மேலும் புளியை உணவில் சேர்ப்பது அன்றாட வழக்கத்திலும் உள்ளது என்பதால் இதை தனித்து எடுக்க வேண்டியதில்லை. அதே நேரம், கீல்வாதம் அறிகுறிகள் நிர்வகிக்கவும், வலி தீவிரமாகாமல் தடுக்கவும் மருத்துவ சிகிச்சை உடன் வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்பான வீட்டு வைத்தியங்கள் பின்பற்றலாம். இவையும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Our Other Services